search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Continuity leave"

    • சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

    சென்னை:

    புனித வெள்ளியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தல் பிரசாரத்தை நோக்கி திரும்பியுள்ளதால், தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்பவர்களிடம், தனியார் ஆம்னி பஸ்கள் ஓசையில்லாமல் கட்டணத்தை உயர்த்திவிட்டன.

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தனியார் ஆம்னி பஸ்களில் செல்வதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கோவைக்கு செல்வதற்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.1000 வரை ஆகும்.

    இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

    மற்ற பண்டிகை காலத்தில் வரும் வார இறுதி நாட்களை போலவே, தற்போதும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தட்கல் முறையிலும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பஸ் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்துக்கு இணையாக உள்ளது. எனவே, குடும்பத்துடன் ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தால் தவிக்கிறார்கள்.

    அதே நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் மேலும் 650 பஸ்கள் புதிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்திற்கு வரும் ஒவ்வொரு பஸ்சிலும் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இதனால் முன்பதிவு செய்யாத பயணிளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. இதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ஒவ்வொரு வார இறுதியிலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பிறகுதான் கூடுதல் பஸ்கள் இயக்கபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கி ன்றனர். எனவே வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்யாத பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.
    • திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர்.

    தென்காசி:

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் திங்கள் கிழமை விடுமுறை எடுத்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே, தென்மா வட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறப்பு ரெயிலை தாம்பரம்-நெல்லை இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்க இருக்கிறது.

    சென்னை முதல் நெல்லை வரை ஒரு வழிபாதை இருக்கும்போதும் ஒரே சிறப்பு ரெயில் தான் இயக்கப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து நெல்லை வரை இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் சூழலிலும் ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்குவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    குறைந்த கட்டணம், கழிப்பறை வசதி, நிம்மதியான தூக்கம், சரியான நேரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பானதும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

    திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். அப்படியும் இணைய தளம் மூலம் ஆன்லைனில் அதிக அளவில் பதிவு செய்வதாலும், முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இடங்கள் பூர்த்தியாகி விடுகின்றன.

    இதனால், தட்கல் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு மையங்களில் காத்திருக்கும் சாமானியர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரெயில்கள் விட்டால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    இதுகுறித்து தென்காசியை சார்ந்த ரெயில் பயணிகள் கூறுகையில்,

    தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் ஒரே ஒரு ரெயிலை மட்டும் இயக்குவது வேதனை அளிக்கிறது.

    சென்னையில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிப்படும் நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழ மைகளில் சென்னையில் காலியாக இருக்கும் ரெயில் பெட்டிகளை பயன்படுத்தி தாம்பரத்திலிருந்து மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் சுதந்திர தினம் முடிந்து சென்னை செல்வதற்கு செவ்வாய் கிழமை நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

    தற்போது சென்னை- நெல்லை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு எந்த ஒரு இடையூறும் இல்லை என்பதால் சிறப்பு ரெயில்கள் அதிகமாக இயக்க முடியும். எனவே பயணிகளின் நலன் கருதி தென்னக ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.
    • பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும்.

    சென்னை:

    விமானம் மட்டும் உயரே உயரே பறப்பதில்லை. அதன் கட்டணமும் உயரே உயரே பறந்து கொண்டிருக்கிறது.

    வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் லீவு போட்டால் போதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், விடுமுறையை கொண்டாட செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு ஏராளமானோர் செல்கிறார்கள்.

    இந்த இடங்களுக்கு செல்லும் ரெயில்கள் எதிலும் டிக்கெட் இல்லை. இதனால் உள்ளூர் விமானங்களுக்கு படையெடுக்கிறார்கள். அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.

    வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.5 ஆயிரம் வரை தான் கட்ட ணம் இருக்கும். ஆனால் இப்போது ரூ.16 ஆயிரம். இதேபோல் திருவனந்தபுரத்துக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் கட்டணம் இருந்தது. இப்போது ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் சாதாரணமாக ரூ.5 ஆயிரம் தான் கட்டணம். தற்போது ரூ.15 ஆயிரம். இதேபோல் தூத்துக்குடிக்கும் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு பற்றி விமான நிறுவனங்கள் ஏஜென்சிகளிடம் விசாரித்தபோது, பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும். மதுரையை பொறுத்தவரை கோர்ட்டுக்கு செல்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் செல்வது என்று வரவேற்பு அதிகமாகவே இருப்பதால் இந்த கட்டணங்கள் சமீப காலமாக உயர்ந்தே இருக்கிறது.

    கட்டணம் உயர்வாக இருந்தாலும் எந்த விமானத்திலும் டிக்கெட் இல்லை என்பதுதான் நிலைமை என்றனர்.

    ×