search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சென்னையில் இருந்து செல்லும் துபாய், சார்ஜா விமானங்கள் 10 நாட்களுக்கு ரத்து

    ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் இன்று அதிகாலையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்கனவே தடைவிதித்துள்ளன.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் இன்று அதிகாலையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.

    இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா, இண்டிகோ, எமரேட்ஸ், பிளை துபாய் விமானங்களும், அதைப்போல் சார்ஜா செல்லும் ஏர்இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், அபுதாபி செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, எத்தியாடு ஏர்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் அடுத்த 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அந்தந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    கோப்புபடம்

    அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.

    அதோடு ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள், அரசு முறையிலான பயணம் செய்யும் இந்தியர்கள், டிப்லோமெடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு நாடுகள் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகள் இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    Next Story
    ×