என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் விஷார் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பிச்சவாடியில் இருந்து விஷார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    முசரவாக்கம் என்ற இடத்தில் இவர் சென்றபோது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவியை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரத்தில் விதிகளை மீறிய கடைகளை அடைக்க நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று முதல் பால்கடைகள், மருந்து கடைகள், மளிகைகடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்திருக்கலாம். மற்ற கடைகள் அனைத்தும் மூடவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட நகராட்சி அதிகாரிகள் அத்தியாவசியமில்லாத கடைகளை மூடுமாறு நேரில் சென்று வலியுறுத்தினார்கள்.

    காஞ்சீபுரத்தின் பிரதான சாலைகளான காந்தி ரோடு, காமராஜர்சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை, ெரயில்வே சாலை போன்ற பகுதிகளில் சென்று கடைகளை அடைக்கும்படி கூறினர்.

    வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணங்களுக்கு 9 கடைகளுக்கு தலா ரூ.500 வீதமும், ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்பட்டது. முககவசம் அணியாதவர்கள் 48 பேரிடம் இருந்து ரூ.200 வீதம் ரூ.9 ஆயிரத்து 600 அபராதம் வசூலித்தது உள்பட ரூ.19 ஆயிரத்து 600-ஐ நகராட்சி அதிகாரிகள் அபராதமாக வசூலித்தனர்.

    இந்தபணியில் நகராட்சி என்ஜினீயர்் ஆனந்த ஜோதி, நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன், நகரமைப்பு அலுவலர் சுப்புத்தாய் உள்பட அதிகாரிகள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.

    அரசின் புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் எந்த கடைகளும் இருக்க கூடாது என்ற அறிவிப்பின் காரணமாக காஞ்சீபுரம்் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. நண்பகல் 12 மணி வரை காய்கறிக்கடைகள், மளிகை கடைகள் போன்றவற்றில் அதிக அளவில் கூட்டம் இருந்ததை காண முடிந்தது.

    நண்பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் காஞ்சீபுரம் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சிலர் மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அரசு பஸ்கள் ஒரு சில பயணிகளுடன் இயக்கப்பட்டன.

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவன் (வயது 46) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    ரூ.28 லட்சம் தங்கம்

    அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர், உள்ளாடைக்குள் தங்ககட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளங்கோவனை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

    ஆலந்தூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    தா. மோ. அன்பரசன்திமுக116785
    பா. வளர்மதிஅதிமுக76214
    தமீம் அன்சாரிஎஸ்டிபிஐ1770
    சரத்பாபுமநீம21139
    கார்த்திகேயன்நாம் தமிழர்16522
     ஸ்ரீபெரும்புதூர் (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    செல்வப்பெருந்தகைகாங்கிரஸ்115353
    கே. பழனிஅதிமுக104474
    ஆர். பெருமாள்அமமுக3144
    தணிகைவேல்மநீம8870
    புஷ்பராஜ்நாம் தமிழர்22034
    உத்திரமேரூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    சுந்தர்திமுக93427
    சோமசுந்தரம்அதிமுக91805
    ரஞ்சித் குமார்அமமுக7211
    சூசையப்பர்சமக2100
    காமாட்சிநாம் தமிழர்11405
     காஞ்சிபுரம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    எழிலரசன்திமுக102712
    மகேஷ்குமார்பாமக91117
    மனோகரன்அமமுக2301
    கோபிநாத்மநீம12028
    சால்டின்நாம் தமிழர்13946






    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பெரம்பலூரைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அதேபோல் சென்னையைச் சேர்ந்த நூர்முகமது உஸ்மான் (22) என்பவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
    படப்பை அருகே 2 வாலிபர்களிடம் கத்தி முனையில் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    படப்பை:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சமத்துவபுரம் முல்லைத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25), இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள காரணித்தாங்கல் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது 3 பேர் கத்திமுனையில் மிரட்டி அவரது வீட்டுக்குள் அழைத்து சென்றனர். பிரகாஷ் மற்றும் அங்கு தங்கி இருந்த சுரேஷ் ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000-த்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து பிரகாஷ் ஒரகடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கத்தியால் வெட்டிய வழக்கில் வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வம் (23), நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த டில்லி பாபு (21), நந்தகோபால் (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1000 செல்போன், மற்றும் கத்தி உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றினர்.
    காஞ்சீபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 ஆயிரம் சதுர அடி கொண்ட மக்கள் அதிகம் வரும் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் செயல்படும் பட்டு சேலை விற்பனை கடைகளும், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகளும் வணிக நிறுவனங்களும் காஞ்சீபுரம் நகர் பகுதியில் மூடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பட்டுசேலை எடுக்கவும் துணி மணிகள் வாங்கவும் ஏராளமான பொதுமக்கள் காஞ்சீபுரம் பகுதிக்கு வந்திருந்த நிலையில் மூடப்பட்டிருந்த பட்டு சேலை கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவை முன்பக்கம் மூடிய நிலையில் பின் கதவை திறந்து வைத்து பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெருநகராட்சி நிர்வாகத்தினர் காந்தி சாலை, காமராஜர் சாலை, வள்ளல் பச்சையப்பர் தெரு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பின்பக்க கதவை திறந்து வைத்திருந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

    மேலும் பின்பக்க கதவை திறந்து வைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை மீறி பொதுமக்களை அதிக அளவில் அனுமதித்து வியாபாரம் செய்த பிரபல துணிக்கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஷ்வரி முன்னிலையில் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

    நகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆய்வின் காரணமாக காஞ்சீபுரம் காந்தி சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் காந்தி சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று ஒரே நாளில் பல்வேறு கடைகளுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை தாம்பரத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்தை உயிர்காக்கும் மருந்தாக டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகளில் இந்த மருந்துக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். இதையடுத்து தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் இந்த மருந்து கொள்முதல் செய்யப்பட்டு அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு தினமும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நீண்டநேரம் காத்து இருந்து வாங்கிச் செல்கின்றனர்.

    இந்தநிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் இந்த மருந்தை கள்ளச்சந்தையில் வாங்கி, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

    அவரிடம் இருந்து சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டரான முகமது இம்ரான்கான்(வயது 26) என்பவர் 4 ஆயிரத்து 700 ரூபாய் மருந்தை ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்று வந்தார். அவருடைய நண்பரான விஜய்(27) என்பவரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

    இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி. சாந்திக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது டாக்டர் முகமது இம்ரான்கானை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை, கள்ளச்சந்தையில் விற்றதை ஒப்புக்கொண்டார். உடந்தையாக இருந்த நண்பர் விஜயும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    மேற்கு வங்காளத்தில் இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டு வருகிறது.
    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை பார்ப்போம்...

    காஞ்சிபுரம் மாவட்டம்

    ஆலந்தூர்

    திமுக

    ஸ்ரீபெரும்புதூர்

    காங்கிரஸ்

    உத்திரமேரூர்

    திமுக

    காஞ்சிபுரம்

    கடும் போட்டி


    செங்கல்பட்டு மாவட்டம்

    சோழிங்கநல்லூர்

    திமுக

    திருப்போரூர்

    கடும் போட்டி

    செய்யூர்

    அதிமுக

    மதுராந்தகம்

    கடும் போட்டி

    தாம்பரத்தில் 2 ஆண்டுகளாக சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் மற்றும் தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    இவருடன் தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நெருங்கி பழகியுள்ளார். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கார்த்திக் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.

    அந்த நேரங்களில் சிறுமியை ஏமாற்றி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    கார்த்திக் தனது நண்பர்களான மணிகண்டன் மற்றும் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த தனசேகரன் ஆகியோரிடமும் சிறுமியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    இதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக 3 பேரும் சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததும் தெரியவந்தது.

    சில நேரங்களில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து இந்த கும்பல் குடிக்க வைத்து கொடூரமாக நடந்துள்ளது. இது பற்றி வெளியில் சொன்னால் தாய் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவோம் என்று 3 பேரும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி சிறுமி வெளியில் சொல்லாமல் பயத்துடன் இருந்துள்ளார். ஆனால் இந்த வி‌ஷயம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது.

    இதுபற்றி அதே பகுதியைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியை அழைத்து தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை, 3 பேரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததை வாக்கு மூலமாக அளித்தார். இதை தொடர்ந்து கார்த்திக், மணிகண்டன், தனசேகரன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இவர்களில் கார்த்திக், மணிகண்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கவுரிவாக்கம் பகுதியில் சிவகாமி நகர் அண்ணா தெருவில் கார்த்திக் வசித்து வருகிறார். அதே பகுதியில் காந்திநகர் 4-வது தெருவில் மணிகண்டன் வீடு உள்ளது.

    தனசேகரனும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான். சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தவழக்கில் அரசியல் பிரமுகரான தனசேகரன் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தனசேகரனை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் தனசேகரனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர். அவரது செல்போன் நம்பரை வைத்து இருக்கும் இடத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடசென்னை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் உள்பட பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். இதே போன்று தாம்பரம் சிறுமி வழக்கிலும் தொடர் புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. 163, 165, மற்றும் 177 ஆகிய 3 வார்டுகளில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னையில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. 163, 165, மற்றும் 177 ஆகிய 3 வார்டுகளில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.

    3 வார்டுகளிலும் 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 177-வது வார்டில் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிக்குள் அந்த வார்டு கொண்டுவரப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.

    தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அடையாறு, ஆலந்தூர் மண்டலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது.

    இந்த 2 மண்டலத்திலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

    வீடு வீடாக சென்று பரிசோதனை, காய்ச்சல் முகாம் போன்ற அடிப்படையான தடுப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கொரோனா வைரஸ்

    அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று உறுதியாகும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டு தனிமையிலும், கவனிப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றனர்.

    மருத்துவமனைகளில் 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள், வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி துறை, பேரூராட்சிகள் மற்றும் போலீஸ் துறை சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கொரோனா தொற்று தொடர்பான தங்களது சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளை பெற

    044-27237107, 044-27237207, 044-27237784, 044-27237785

    இலவச தொலைபேசி எண்: 1800-425-8978 போன்றவற்றை தொடர்பு கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு அனைத்து பொதுமக்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×