என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர் | திமுக |
ஸ்ரீபெரும்புதூர் | காங்கிரஸ் |
உத்திரமேரூர் | திமுக |
காஞ்சிபுரம் | கடும் போட்டி |
சோழிங்கநல்லூர் | திமுக |
திருப்போரூர் | கடும் போட்டி |
செய்யூர் | அதிமுக |
மதுராந்தகம் | கடும் போட்டி |
தாம்பரம்:
தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் மற்றும் தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
இவருடன் தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நெருங்கி பழகியுள்ளார். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கார்த்திக் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த நேரங்களில் சிறுமியை ஏமாற்றி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கார்த்திக் தனது நண்பர்களான மணிகண்டன் மற்றும் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த தனசேகரன் ஆகியோரிடமும் சிறுமியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக 3 பேரும் சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததும் தெரியவந்தது.
சில நேரங்களில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து இந்த கும்பல் குடிக்க வைத்து கொடூரமாக நடந்துள்ளது. இது பற்றி வெளியில் சொன்னால் தாய் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவோம் என்று 3 பேரும் மிரட்டியுள்ளனர்.
இதனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி சிறுமி வெளியில் சொல்லாமல் பயத்துடன் இருந்துள்ளார். ஆனால் இந்த விஷயம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதுபற்றி அதே பகுதியைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியை அழைத்து தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை, 3 பேரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததை வாக்கு மூலமாக அளித்தார். இதை தொடர்ந்து கார்த்திக், மணிகண்டன், தனசேகரன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் கார்த்திக், மணிகண்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கவுரிவாக்கம் பகுதியில் சிவகாமி நகர் அண்ணா தெருவில் கார்த்திக் வசித்து வருகிறார். அதே பகுதியில் காந்திநகர் 4-வது தெருவில் மணிகண்டன் வீடு உள்ளது.
தனசேகரனும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான். சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தவழக்கில் அரசியல் பிரமுகரான தனசேகரன் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தனசேகரனை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை போலீசார் தனசேகரனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர். அவரது செல்போன் நம்பரை வைத்து இருக்கும் இடத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடசென்னை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் உள்பட பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். இதே போன்று தாம்பரம் சிறுமி வழக்கிலும் தொடர் புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆலந்தூர்:
சென்னையில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. 163, 165, மற்றும் 177 ஆகிய 3 வார்டுகளில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.
3 வார்டுகளிலும் 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 177-வது வார்டில் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிக்குள் அந்த வார்டு கொண்டுவரப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அடையாறு, ஆலந்தூர் மண்டலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது.
இந்த 2 மண்டலத்திலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
வீடு வீடாக சென்று பரிசோதனை, காய்ச்சல் முகாம் போன்ற அடிப்படையான தடுப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று உறுதியாகும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டு தனிமையிலும், கவனிப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றனர்.
மருத்துவமனைகளில் 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆலந்தூர்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்கனவே தடைவிதித்துள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் இன்று அதிகாலையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.
இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா, இண்டிகோ, எமரேட்ஸ், பிளை துபாய் விமானங்களும், அதைப்போல் சார்ஜா செல்லும் ஏர்இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், அபுதாபி செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, எத்தியாடு ஏர்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் அடுத்த 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அந்தந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.
அதோடு ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள், அரசு முறையிலான பயணம் செய்யும் இந்தியர்கள், டிப்லோமெடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு நாடுகள் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகள் இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.






