என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனை
    X
    வாகன சோதனை

    சுங்குவார்சத்திரம் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.66 ஆயிரம் பறிமுதல்

    ஸ்ரீபெரும்புதூர் (தனி)தொகுதியில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சட்டமன்ற தேர்தலையொட்டி அரசில் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு செய்து வருகின்றனர்.

    அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் (தனி)தொகுதியில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், சுங்குவார் சத்திரம் அடுத்த சோகண்டி சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளிபட்டு அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அமாவாசை ஆகியோரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.66ஆயிரத்து 500 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து காஞ்சீபுரம் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×