என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
மேலும் நீலகிரி மலைப்பகுதியில் ஓடி வரும் மோயாறும், பவானி ஆறும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, அதில் இருந்து உபரி நீர் அப்படியே பவானிசாகர் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.16 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 299 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 930 கன அடி தண்ணீர் வந்தது.
அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும். இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
* தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை.
* முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* 15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் இலங்கை அகதிகள் முகாம், இலங்கை தமிழர் முகாமில் அவ்வபோது சென்று சோதனை செய்வது வழக்கம். இதேப்போல் சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது சிலர் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒரு இளம் பெண் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கியூ பிரிவு போலீசார் அரச்சலூர் இலங்கை தமிழர் முகாமில் விசாரணை நடத்தினர். இதில் முகாமில் தங்கியிருந்த பிரதீபா (வயது 36) என்ற இளம்பெண்ணின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அப்போது அவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பிரதீபா 1990-ம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர் முகாமில் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் யாராவது போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி உள்ளார்களா? என்று கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பரிசல் துறை வீதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 55). கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி சகுந்தலா. இவர்களது மகள் ஹேமா மாலினி (14). இவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வேலுமணியும், சகுந்தலாவும் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டனர். ஹேமா மாலினி மட்டும் வீட்டில் இருந்தார்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கரும் புகை வருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். உடனே இதுபற்றி வேலுமணிக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் பதறியபடி உடனே வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு சமையல் அறையில் ஹேமா மாலினி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
உடனே இதுபற்றி வேலுமணி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். ‘கடந்த வாரம் ஆன்லைன் வகுப்புக்காக ஹேமா மாலினிக்கு வேலுமணி செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் ஹேமா மாலினி செல்போனில் அடிக்கடி பாட்டு கேட்டு வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ஹேமா மாலினி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்’ என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பவானி அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மகன் செந்தில் (வயது 34). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி அன்று தனது வீடு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று சித்தோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் துரத்தி சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சிவகுமார் (20) என்பதும், அவர் வைத்திருந்த மோட்டார்சைக்கிள் மாமரத்துப்பாளையம் செந்திலிடம் இருந்து திருடியது என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது பின்னர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்குள் போக்குவரத்து நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்திற்குள் மீண்டும் அரசு போக்குவரத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கடந்த 7-ந்தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 268 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் மாவட்டத்துக்குள் 40 பஸ்களும், வெளி மாவட்டங்களுக்கு 228 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால் தனியார் பஸ்களை இயக்காமல் இருந்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேலம், திருப்பூர், கோவையில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
* குழு தந்த அறிக்கை அடிப்படையில் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
* நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
* சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.
* கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
* சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 23). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தங்கியிருந்து மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள 6 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தாள். இதுபற்றி அறிந்த சிவா அங்கு சென்றார். சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, அங்குள்ள புதருக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து சிவா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கூச்சல் போட்டாள். இதையடுத்து சிவா அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதுகுறித்து அவளது பெற்றோர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். பின்னர் அவர் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் கோபி கிளை சிறையில் சிவா அடைக்கப்பட்டார்.






