என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும்- சங்க தலைவர் தகவல்
Byமாலை மலர்19 Sep 2020 7:20 AM GMT (Updated: 19 Sep 2020 7:20 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று சங்க தலைவர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது பின்னர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்குள் போக்குவரத்து நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்திற்குள் மீண்டும் அரசு போக்குவரத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கடந்த 7-ந்தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 268 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் மாவட்டத்துக்குள் 40 பஸ்களும், வெளி மாவட்டங்களுக்கு 228 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால் தனியார் பஸ்களை இயக்காமல் இருந்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேலம், திருப்பூர், கோவையில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது பின்னர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்குள் போக்குவரத்து நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்திற்குள் மீண்டும் அரசு போக்குவரத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கடந்த 7-ந்தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 268 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் மாவட்டத்துக்குள் 40 பஸ்களும், வெளி மாவட்டங்களுக்கு 228 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால் தனியார் பஸ்களை இயக்காமல் இருந்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேலம், திருப்பூர், கோவையில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X