என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் வாலிபர் கைது
Byமாலை மலர்17 Sep 2020 8:12 AM GMT (Updated: 17 Sep 2020 8:12 AM GMT)
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 23). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தங்கியிருந்து மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள 6 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தாள். இதுபற்றி அறிந்த சிவா அங்கு சென்றார். சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, அங்குள்ள புதருக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து சிவா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கூச்சல் போட்டாள். இதையடுத்து சிவா அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதுகுறித்து அவளது பெற்றோர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். பின்னர் அவர் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் கோபி கிளை சிறையில் சிவா அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 23). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தங்கியிருந்து மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள 6 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தாள். இதுபற்றி அறிந்த சிவா அங்கு சென்றார். சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, அங்குள்ள புதருக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து சிவா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கூச்சல் போட்டாள். இதையடுத்து சிவா அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதுகுறித்து அவளது பெற்றோர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். பின்னர் அவர் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் கோபி கிளை சிறையில் சிவா அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X