search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    அம்மாபேட்டை அருகே விபத்தில் லாரி டிரைவர் பலி

    அம்மாபேட்டை அருகே விபத்தில் லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை சித்தையன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். அவருடைய மகன் முருகன் (வயது 42). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்த செங்கோடன் மகன் விவேக் (25), பெருமாள் மகன் ராஜவேல் (36). முருகன், விவேக், ராஜவேல் ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    நெரிஞ்சிப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த டேங்கர் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விவேக், ராஜவேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×