என் மலர்
ஈரோடு
ஈரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 90 போலீசார் உள்பட மொத்தம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
மேலும் மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள் என யாரையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.
இந்தநிலையில் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 56) என்பவருக்கு கடந்த மாதம் 17-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமானதால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரவிச்சந்திரன் இறந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஆத்மா மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, போலீசார் அரசு மரியாதை செலுத்தினார்கள்.
அப்போது 7 போலீசார் 3 முறை என மொத்தம் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 90 போலீசார் உள்பட மொத்தம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
மேலும் மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள் என யாரையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.
இந்தநிலையில் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 56) என்பவருக்கு கடந்த மாதம் 17-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமானதால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரவிச்சந்திரன் இறந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஆத்மா மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, போலீசார் அரசு மரியாதை செலுத்தினார்கள்.
அப்போது 7 போலீசார் 3 முறை என மொத்தம் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பர்கூர் மலைப்பகுதியில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலையின் மேற்கு பகுதியில் உள்ள மலைக்கிராமம் தம்முரெட்டி. இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித்தொழிலாளர்களே.
எனவே இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு விவசாய வேலைக்காக காலையில் சென்றுவிட்டு மாலையில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி விடுவார்கள். பர்கூர் மலைப்பகுதியில் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், கார், சரக்கு வாகனம் உள்பட ஏதாவது ஒரு வாகனத்தில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் தம்முரெட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்களான சிக்கப்பன் (வயது 40), தேவராஜ் (45), தொட்டப்பி (35), ஜோகன் (35), ஜோகி (45), போலன் (45) உள்பட 14 பேர் அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதிக்கு விவசாய வேலைக்காக புறப்பட்டனர். இதற்காக தம்முரெட்டியை சேர்ந்த மாதேவன் (42) என்பவரின் காரில் வட்டக்காடுக்கு சென்றனர். காரை மாதேவன் ஓட்டினார்.
பர்கூரை அடுத்த மணியாச்சி பள்ளம் அருகே ஒரு கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திரும்ப முடியாமல் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கார் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சிக்கப்பன், தேவராஜ், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் மாதேவன் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அங்கு ரோந்து வந்த வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விவசாய வேலைக்கு சென்ற தொழிலாளர்களில் 4 பேர் விபத்தில் இறந்த சம்பவத்தால் தம்முரெட்டி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
பர்கூர் மலைப்பகுதியில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலையின் தம்முரெட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் சிக்கப்பன் (வயது 40), தேவராஜ் (45), தொட்டப்பி (35), ஜோகன் (35), ஜோகி (45), போலன் (45) உள்பட 14 பேர் அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதிக்கு விவசாய வேலைக்காக நேற்று காலை புறப்பட்டனர். இதற்காக தம்முரெட்டியை சேர்ந்த மாதேவன் (42) என்பவரின் காரில் வட்டக்காடுக்கு சென்றனர்.
பர்கூரை அடுத்த மணியாச்சி பள்ளம் அருகே ஒரு கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திரும்ப முடியாமல் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கார் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சிக்கப்பன், தேவராஜ், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
டிரைவர் மாதேவன் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அங்கு ரோந்து வந்த வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கார் டிரைவர் மாதேவன், சித்தலிங்கம் (45) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலையின் தம்முரெட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் சிக்கப்பன் (வயது 40), தேவராஜ் (45), தொட்டப்பி (35), ஜோகன் (35), ஜோகி (45), போலன் (45) உள்பட 14 பேர் அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதிக்கு விவசாய வேலைக்காக நேற்று காலை புறப்பட்டனர். இதற்காக தம்முரெட்டியை சேர்ந்த மாதேவன் (42) என்பவரின் காரில் வட்டக்காடுக்கு சென்றனர்.
பர்கூரை அடுத்த மணியாச்சி பள்ளம் அருகே ஒரு கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திரும்ப முடியாமல் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கார் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சிக்கப்பன், தேவராஜ், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
டிரைவர் மாதேவன் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அங்கு ரோந்து வந்த வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கார் டிரைவர் மாதேவன், சித்தலிங்கம் (45) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஈரோட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 40). சமையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சமையல் செய்து கொண்டு இருந்தபோது பாம்பு கடித்து உள்ளது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வெண்ணிலா மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவர் மீண்டும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வெண்ணிலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 கூலி தொழிலாளர்கள் பலியாகினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தம்புரெட்டிமலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்கு வாடகை டாட்டா சுமோ காரில் இன்று காலை 7 மணியளவில் சென்றனர்.
மலைசாலையில் உள்ள இறக்கத்தில் கார் இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடி, சாலையோரமுள்ள மண் பகுதியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் பலியானதோடு, 11 பேர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடீரென காரில் ஏற்பட்ட பழுதும், காரில் அதிக அளவில் ஆட்கள் ஏற்றிச் சென்றதுமே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தம்புரெட்டிமலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்கு வாடகை டாட்டா சுமோ காரில் இன்று காலை 7 மணியளவில் சென்றனர்.
மலைசாலையில் உள்ள இறக்கத்தில் கார் இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடி, சாலையோரமுள்ள மண் பகுதியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் பலியானதோடு, 11 பேர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடீரென காரில் ஏற்பட்ட பழுதும், காரில் அதிக அளவில் ஆட்கள் ஏற்றிச் சென்றதுமே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிகள் திறப்பு தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நாளை பாதுகாப்புடன் நடைபெறும். பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று கருத்து தெரிவிக்கலாம்.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 2,505 பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தொழிற்கல்விகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிகள் திறப்பு தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நாளை பாதுகாப்புடன் நடைபெறும். பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று கருத்து தெரிவிக்கலாம்.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 2,505 பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தொழிற்கல்விகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பர்கூர் மலைப்பகுதியில் 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மேற்கு பகுதியான தம்புரெட்டி என்ற மலைக்கிராமத்தில் இருந்து இன்று காலை ஒரு காரில் 9பேர் தாமரைகரை என்ற பகுதிக்கு சென்றனர்.
மணியாச்சிபள்ளம் என்ற மலைப்பகுதியில் அவர்கள் வந்த கார் வந்து கொண்டிருந்தது. ஒன்னாங்கரைமேடு என்ற பகுதியில் வந்தபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கார் திடீரென பின்னோக்கி சென்றது. அங்குள்ள தடுப்பு சுவற்றை உடைத்துக்கொண்டு 60 அடி கிடுகிடு பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
காரில் இருந்தவர்கள் ‘அய்யோ..அம்மா..’ என கூச்சலிட்டனர். இந்த விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 60 அடி பள்ளத்தில் கயிறு மூலம் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 5பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்ட போலீசார் ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பலியானர்வகள் உடல்கள் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் பெயர் விபரமும், படுகாயமடைந்தவர்கள் விபரமும் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பவானிசாகர்:
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணை தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 96.29 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 3 மணிக்கு அணையின் தண்ணீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 566 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்தியூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த சேத்தனாம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 14-ந் தேதி கடைக்கு தேவையான மளிகை பொருட்களை கடை முன் லாரியை நிறுத்தி இறக்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதுபற்றி கேட்டு உள்ளார். இதனால் சீனிவாசனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் சீனிவாசனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி விவசாயியான பரந்தாமனும், கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக அவருடைய உறவினரான தொழிலாளி அய்யண்ணன் என்பவரும் வந்து உள்ளனர். தகராறு முற்றியதில் அரிவாளை எடுத்து பரந்தாமனை அய்யண்ணன் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அய்யண்ணனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அய்யண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டாக்சி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்தவர் தீனதயாளன். கால் டாக்சி டிரைவர். இவருக்கு, ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் கணவரை இழந்து, அவருடைய 8 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். தீனதயாளனுடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. கணவரை இழந்த அந்த பெண்ணை தீனதயாளன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு திருமணமானதால், அந்த பெண் அவருடைய மகளை ஈரோடு அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து, படிக்க வைத்து வந்தார்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடங்கள் விடுமுறை என்பதால், அந்த சிறுமி அம்மாவுடன் வந்து தங்கி இருந்தார். ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண், வழக்கமாக தான் செல்லும் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த ஒரு மாதமாக டாக்சி டிரைவர் தீனதயாளன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
தனியாக இருக்கும் குழந்தைக்கு துணையாக தீனதயாளன் இருப்பார் என்று நம்பிய அந்த பெண் வழக்கம்போல வேலைக்கு சென்று வந்தார். கடந்த ஓரிரு நாட்களாக சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் சிறுமி கடுமையான வலியால் அவதிப்பட்டதால், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி விவரம் தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் அந்த பெண்ணிடம் கூறினார்கள். அதுமட்டுமின்றி, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அதிகாரி தேன்மொழிக்கு தகவல் கொடுத்தனர்.
அதிகாரி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து குழந்தையிடம் ரகசிய விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த தீனதயாளன், தனது குழந்தை ஸ்தானத்தில் இருக்கும் குழந்தையை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசின் எந்த ஒரு செயலையும் குறை சொல்வதே எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினின் வாடிக்கையாக உள்ளது. நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
பள்ளிக்கூடங்கள் திறக்கும் விஷயத்தில் ஆந்திராவையும், கேரளாவையும் தமிழகத்துடன் ஒப்பிட தேவையில்லை. மாணவர்களின் நலனையும், பெற்றோர்களின் கருத்தையும் கொண்டே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவர் ஆகும் வாய்ப்பை வழங்கி உள்ளது தமிழக அரசுதான். பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் மூலம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தை கேட்டு அதன் முடிவு அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசின் எந்த ஒரு செயலையும் குறை சொல்வதே எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினின் வாடிக்கையாக உள்ளது. நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
பள்ளிக்கூடங்கள் திறக்கும் விஷயத்தில் ஆந்திராவையும், கேரளாவையும் தமிழகத்துடன் ஒப்பிட தேவையில்லை. மாணவர்களின் நலனையும், பெற்றோர்களின் கருத்தையும் கொண்டே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவர் ஆகும் வாய்ப்பை வழங்கி உள்ளது தமிழக அரசுதான். பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் மூலம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தை கேட்டு அதன் முடிவு அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக நேற்று இரவு 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி, டி.என். பாளையம், புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானி சாகர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ததால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டுர், நல்லகவுண்டம்பாளையம், கரட்டடிபாளையம், நஞ்சகவுண்டன் பாளையம், பாரியூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இடைவிடாமல் இன்று காலை 6 மணி வரை மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் விவசாய வயல்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் பாரியூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக வெள்ளம் நெற்பயிர் வயலில் தேங்கி நிற்கிறது.
இதே போல் தொடர் மழை காரணமாக கோபி அருகே உள்ள கீரிபள்ளம் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஓடையில் வரும் மழைவெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர். கோபி பகுதியில் மட்டும் அதிகபட்சமாக நேற்று இரவு 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இதே போல் எலந்தகுட்டை மேடு, கொடிவேரி, கவுந்தப்பாடி உள்ளிட்ட இடங்களிலும் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம், பவானிசாகர், தொட்டம் பாளையம், வடவள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ஓட்ட குட்டை, அரியப்பம் பாளையம், திம்பம் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும் விடிய, விடிய மழை பெய்தது.
மழை காரணமாக திம்பம் மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு- கோபி-90.2, எலந்தக்குட்டை-85.4, கொடிவேரி-19, கவுந்தப்பாடி-40, சத்தியமங்கலம்-19, பவானி சாகர்-10.6, குண்டேரிப்பள்ளம்-16.2, பெரும்பள்ளம்-5.
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 96.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 271 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் 35.65 அடியாக இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.36 கனஅடியாக இருந்தது.
கோபி மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபி, டி.என். பாளையம், புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானி சாகர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ததால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டுர், நல்லகவுண்டம்பாளையம், கரட்டடிபாளையம், நஞ்சகவுண்டன் பாளையம், பாரியூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இடைவிடாமல் இன்று காலை 6 மணி வரை மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் விவசாய வயல்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் பாரியூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக வெள்ளம் நெற்பயிர் வயலில் தேங்கி நிற்கிறது.
இதே போல் தொடர் மழை காரணமாக கோபி அருகே உள்ள கீரிபள்ளம் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஓடையில் வரும் மழைவெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர். கோபி பகுதியில் மட்டும் அதிகபட்சமாக நேற்று இரவு 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இதே போல் எலந்தகுட்டை மேடு, கொடிவேரி, கவுந்தப்பாடி உள்ளிட்ட இடங்களிலும் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம், பவானிசாகர், தொட்டம் பாளையம், வடவள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ஓட்ட குட்டை, அரியப்பம் பாளையம், திம்பம் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும் விடிய, விடிய மழை பெய்தது.
மழை காரணமாக திம்பம் மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு- கோபி-90.2, எலந்தக்குட்டை-85.4, கொடிவேரி-19, கவுந்தப்பாடி-40, சத்தியமங்கலம்-19, பவானி சாகர்-10.6, குண்டேரிப்பள்ளம்-16.2, பெரும்பள்ளம்-5.
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 96.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 271 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் 35.65 அடியாக இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.36 கனஅடியாக இருந்தது.
கோபி மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






