என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொழிலாளி கைது
Byமாலை மலர்7 Nov 2020 3:29 PM GMT (Updated: 7 Nov 2020 3:29 PM GMT)
அந்தியூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த சேத்தனாம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 14-ந் தேதி கடைக்கு தேவையான மளிகை பொருட்களை கடை முன் லாரியை நிறுத்தி இறக்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதுபற்றி கேட்டு உள்ளார். இதனால் சீனிவாசனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் சீனிவாசனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி விவசாயியான பரந்தாமனும், கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக அவருடைய உறவினரான தொழிலாளி அய்யண்ணன் என்பவரும் வந்து உள்ளனர். தகராறு முற்றியதில் அரிவாளை எடுத்து பரந்தாமனை அய்யண்ணன் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அய்யண்ணனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அய்யண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X