என் மலர்
ஈரோடு
- டெபாசிட் பெற பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகள் பெற வேண்டும்.
- சீதாலட்சுமி டெபாசிட் இழக்காமல் இருக்க 25776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் 23,872 வாக்குகளே பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்றார். இதனால் தொடர்ந்து அதிக வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.
மாலை 4.45 மணியளவில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
தேர்தல் விதிப்படி ஒரு வேட்பாளர் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் வேட்பு மனுதாக்கல் செய்தபோது அளித்த டெபாசிட் பணம் திருப்பி வழங்கப்படும். இல்லை என்றால் டெபாசிட்டை இழப்பார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில 1,54,657 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனால் டெபாசிட் பெற வேண்டுமென்றால் 25776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23872 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் சுமார் 1904 வாக்குகளில் டெபாசிட்டை இழந்துள்ளார்.
- சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்றார். இதனால் தொடர்ந்து அதிக வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.
மாலை 4.45 மணியளவில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23872 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
- தேர்தல் வெற்றிக்கு காரணம் தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான்.
- தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வெகுஜன மக்களிடையே வெகுவாக சென்றடைந்திருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 61,739 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13,443 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் வெற்றிக்கு காரணம் தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான்.
* தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வெகுஜன மக்களிடையே வெகுவாக சென்றடைந்திருக்கிறது. அதனுடைய வெளிப்பாடு தான் இந்த தேர்தலின் முடிவு.
* இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. அவர்கள் அவர்களுடைய கட்சியினரிடம் ஓட்டு போட போக வேண்டாம். இல்லையென்றால் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார்கள். அதனால் நோட்டாவுக்கு அதிகமான ஓட்டு வந்து இருக்கலாம்.
* தி.மு.க. எதிர்வரும் 2026 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அச்சாரமாக இந்த தேர்தல் முடிவை கொடுத்துள்ளனர். 2026 தேர்தலிலும் தற்போதைய நிலை தொடரும் என்று தெரிவித்தார்.
- தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 44,361 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- அநீதியை தாங்கிக்கொண்டே பொதுமக்கள் இருக்க மாட்டார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 44,361 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 9,258 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பண பலத்தையும் தாண்டி நாம் தமிழருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
* 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நா.த.க.விற்கு அதிக இடங்கள் கிடைக்கும்.
* தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைத்துள்ளது.
* எதற்கும் விலை போகாமல் 9,000-க்கும் மேற்பட்ட ஈரோடு தொகுதி மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
* அநீதியை தாங்கிக்கொண்டே பொதுமக்கள் இருக்க மாட்டார்கள். 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும்.
* பெரியார் குறித்த சீமானின் கருத்தால் பின்னடைவு ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
- வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் கொண்டது.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு:
கடந்த 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 46 பேர் போட்டியிட்டுள்ளனர். இருப்பினும் திமுக, நாம் தமிழர் கட்சியிடையே போட்டி நிலவியது.
இதனை தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் கொண்டது.
இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். அவர் இதுவரை 27,640 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்றுள்ளார்.
இவர்களை தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் சொற்ப வாக்குகளே பெற்றுள்ளனர். இதனிடையே, இத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தொடர்ந்து நோட்டா 769 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
- முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 27,642 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்தார்.
- தொடர்ந்து அலுவலர்கள் சமாதானப்படுத்தி சீதாலட்சுமி முகவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கி கொடுத்தனர்.
ஈரோடு:
சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணும் கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்கும் எண்ணும் பணி தொடங்கியது.
அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்தார். அவரது கட்சி முகவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது முகவர் சீதாலட்சுமியிடம் கூறி உள்ளார்.
இதையடுத்து சீதாலட்சுமி இதுகுறித்து வாக்கு எண்ணும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அலுவலர்கள் சமாதானப்படுத்தி சீதாலட்சுமி முகவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கி கொடுத்தனர்.
அதன் பின்னர் அவர் உள்ளே சென்றார். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
காலை 9 மணி நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 7837 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
- வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் 'சீல்' உடைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மலைப்பகுதிகள் நிறைந்ததாகும்.
- துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் இந்த இடைத்தேர்தலில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
72 ஆயிரத்து 889 பேர் ஓட்டு போடவில்லை. முக்கிய எதிர் கட்சிகள் புறக்கணிப்பால் இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மலைப்பகுதிகள் நிறைந்ததாகும். இதன் நுழைவுவாயிலில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல 2 கிலோமீட்டர் கடந்து செல்ல வேண்டும்.
நுழைவுவாயில் பகுதியில் டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நுழைவுவாயில் பகுதியிலிருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், பணியாளர்கள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனத்தில் வருபவர்கள் ஐ.டி கார்டு, வாகன பதிவு எண், வாகனத்தில் வருபவர்களின் செல்போன் எண், முகவரி, உள்ளே செல்லும் நேரம், வெளியே வரும் நேரம், எந்த பணிக்காக வந்து உள்ளா ர்கள் போன்ற விவரங்கள் சேகரித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 மேஜைகளில் 17 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த பணியில் ஒவ்வொரு மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை அலுவலர், உதவி அலுவலர், நுண்பார்வையாளர்கள் உட்பட 3 பேர், கூடுதல் அலுவலர் ஒருவர் என 51 பேர் ஈடுபட உள்ளனர்.
இதை தவிர வாக்குபதிவு எந்திரங்களை எடுத்து வைத்தல் மற்றும் பிற பணிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். நாளை காலை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மைய கட்டிடத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதைதொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
- தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலை கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன் குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் முட்டைக்கோசை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிரிட ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் தற்போது தாளவாடி மலைப்பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ ரூ.2-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து தாளவாடி விவசாயிகள் கூறும்போது, வெளி மார்க்கெட்டில் முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகும் நிலையில் வியாபாரிகள் எங்களிடமிருந்து முட்டைக்கோஸ் ரூ.2-க்கு கொள்முதல் செய்வதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் முட்டைகோசை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடை பெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கும் வகை யில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி யிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவிகள், ஒரு வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
காலை நேரம் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் மதிய நேரம் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சிறிது சுனக்கம் ஏற்பட்டது. பின்னர் மாலை நேரம் மீண்டும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அடிப்படையில் வாக்குப்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணி அளவில் 10.95 சதவீதமும், 11 மணி அளவில் 26.03 சதவீதமும், மதியம் 1 மணி அளவில் 42.41 சதவீதமும், மதியம் 3 மணி அளவில் 53.63 சதவீதமும், மாலை 5 மணி அளவில் 64.02 சதவீதமும் பதிவானது.
அதைத்தொடர்ந்து இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலை விட 7 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டு தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது.
வாக்குப்பதிவு முழுமை அடைந்தவுடன், ஓட்டு போட்ட வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. பதிவு எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர மின் இணைப்புகள் முறைப்படி துண்டிக்கப்பட்டன.
பின்னர் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி. பேட் கருவிகள் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மண்டல தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை பெற்றுக் கொண்டனர். அப்போது படிவங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டலம் வாரியாக சேகரிக்கப்பட்டன.
பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் இருந்தும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் எண் வரிசைப்படி எந்திரங்கள் வைக்கப்பட்டன.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகமான ஸ்ரீகாந்த், தேர்தல் பொது பார்வையாளர் ஆகிய முன்னிலையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு அறையின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குவதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த பணி நள்ளிரவு வரை நடந்து அதிகாலை 4 மணியில் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 அடுக்கு பாதுகாப்பு கொண்டு வரப்பட்டது.
இன்று முதல் அடுக்கில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும், 2-ம் அடுக்கில் தமிழ்நாடு பட்டாலியன் போலீசாரும், 3-ம் அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், 4-ம் அடுக்கில் உள்ளூர் போலீசார் என 400 போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் தீ போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வீரர்களும் வாகனங்களுடன் முன்னெ ச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நாளைமறுநாள் (சனிக்கி ழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணி க்கை தொடங்குகிறது. முதலில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்படு கிறது. 14 மேஜைகளில் 17 சுற்றுகள் வரை எண்ணப்ப டுகிறது. அன்று மதியம் முடி வுகள் அறிவிக்கப்படுகிறது.






