என் மலர்
கடலூர்
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.ஜி.விநாயகமூர்த்தி 1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்திரா, ராஜீவ் ஆகியோரின் அன்பை பெற்றவர்.
சென்னை:
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.ஜி.விநாயக மூர்த்தி (92). வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது உடல் இன்று மாலையில் அம்பத்தூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
அவரது மரண செய்தி அறிந்ததும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தணிகாசலம், ஜோதி, எஸ்.வி.ரமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
92 வயதான எஸ்.ஜி. விநாயகமூர்த்தி சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். கல்லூரியில் படித்த போதே அரசியல் ஆர்வத்தில் காங்கிரசில் இணைந்தார். வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த விநாயக மூர்த்தி, காமராஜர், மூப்பனாருக்கு நெருக்கமானவர்.
1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்திரா, ராஜீவ் ஆகியோரின் அன்பை பெற்றவர். 2 முறை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார்.
2001 தேர்தலில் பூங்கா நகர் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கியதும் அவரிடம் இருந்த நெருக்கம் காரணமாக அந்த கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஜி.கே. வாசன் த.மா.கா. தொடங்கிய போதும் அங்கு சென்றார்.
மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. விநாயக மூர்த்திக்கு கனகராஜ், ரவி, ஜவகர் என்ற 3 மகன்கள், உதய குமாரி, ஜெயந்தி, ரேவதி ஆகிய 3 மகள்கள். இவர்களில் மகன் கனகராஜ், மகள் ரேவதி ஆகியோர் இறந்துவிட்டார்கள்.
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.ஜி.விநாயக மூர்த்தி (92). வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது உடல் இன்று மாலையில் அம்பத்தூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
அவரது மரண செய்தி அறிந்ததும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தணிகாசலம், ஜோதி, எஸ்.வி.ரமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
92 வயதான எஸ்.ஜி. விநாயகமூர்த்தி சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். கல்லூரியில் படித்த போதே அரசியல் ஆர்வத்தில் காங்கிரசில் இணைந்தார். வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த விநாயக மூர்த்தி, காமராஜர், மூப்பனாருக்கு நெருக்கமானவர்.
1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்திரா, ராஜீவ் ஆகியோரின் அன்பை பெற்றவர். 2 முறை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார்.
2001 தேர்தலில் பூங்கா நகர் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கியதும் அவரிடம் இருந்த நெருக்கம் காரணமாக அந்த கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஜி.கே. வாசன் த.மா.கா. தொடங்கிய போதும் அங்கு சென்றார்.
மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. விநாயக மூர்த்திக்கு கனகராஜ், ரவி, ஜவகர் என்ற 3 மகன்கள், உதய குமாரி, ஜெயந்தி, ரேவதி ஆகிய 3 மகள்கள். இவர்களில் மகன் கனகராஜ், மகள் ரேவதி ஆகியோர் இறந்துவிட்டார்கள்.
கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று காலையும் பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதில் ஒரு கட்டமாக பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
தற்போது தொற்று நோய் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளி என மாவட்டம் முழுவதும் உள்ள 2,200 பள்ளிகளும் தயார் நிலையில் இருந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
தீபாவளி பண்டிகை முடிந்தும் மழையின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,200 பள்ளிகளும் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இன்று காலை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். 19 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று வரவேற்றனர்.
கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று காலையும் பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றப்பட வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்களது உணவு மற்றும் குடிநீரை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது எனவும், மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதில் ஒரு கட்டமாக பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
தற்போது தொற்று நோய் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளி என மாவட்டம் முழுவதும் உள்ள 2,200 பள்ளிகளும் தயார் நிலையில் இருந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
தீபாவளி பண்டிகை முடிந்தும் மழையின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,200 பள்ளிகளும் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இன்று காலை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். 19 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று வரவேற்றனர்.
கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று காலையும் பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றப்பட வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்களது உணவு மற்றும் குடிநீரை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது எனவும், மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உடையாரப்பன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய கோஷ்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் உடையாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இது திறந்தவெளியில் உள்ளது. இதன் நிர்வாகியாக பூவராயர் உள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியலை பெயர்த்தெடுத்து அந்த பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர்.
அங்கிருந்த 2 உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் எடுத்தனர். பின்னர் உண்டியல்களை வயலில் வீசிவிட்டு தலைமறைவானார்கள்.
இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது உண்டியல்கள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
தகவல் அறிந்த கோவில் நிர்வாகி பூவராயர் வந்தார். இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய கோஷ்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் உடையாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இது திறந்தவெளியில் உள்ளது. இதன் நிர்வாகியாக பூவராயர் உள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியலை பெயர்த்தெடுத்து அந்த பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர்.
அங்கிருந்த 2 உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் எடுத்தனர். பின்னர் உண்டியல்களை வயலில் வீசிவிட்டு தலைமறைவானார்கள்.
இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது உண்டியல்கள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
தகவல் அறிந்த கோவில் நிர்வாகி பூவராயர் வந்தார். இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
நம்மால் முடியாதது என்று ஒன்றுமில்லை. கொஞ்சம் முயற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் சிறு தொழிலில் கூட கோடீஸ்வரனாகி விடலாம். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நேர மேலாண்மை முக்கியம். அத்துடன் அந்த வியாபாரத்தை தொடங்கி அதை வழி நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பல இடர்பாடுகளையும், கடினமான முயற்சியும் இருந்தால் தான் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற முடியும்.
தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். நிச்சயமற்ற சூழ்நிலையில் புதிய மற்றும் மேலான வழிகளின் மூலம் நல்ல முடிவு எடுக்கும் திறமையின் மூலம் செயல்படுவதையே நிர்வாகத்திறமை என்பர்.
வடிவமைத்தல் மற்றும் செயலாக்குதலில் பொறுப்பேற்று இடர்பாடுகளை யூகித்து வியாபார யுத்திகளை கையாண்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது தான் நிர்வாகத்திறமை. முன்னோக்கு பார்வையுடன் முதலீடு மற்றும் உற்பத்தி வாய்ப்புகள், புதிய தயாரிப்பு செயல்முறை, முதலீட்டை பெருக்குதல், வேலையாட்களை கூலிக்கு அமர்த்துதல், மூலப்பொருட்களை வாங்குதல் மற்றும் நிறுவனத்தின் அன்றாட வேலைகளை கவனித்து நிர்வகிக்கும் மேலாளர்களை நியமித்தல் ஆகியவை தான் ஒரு நிர்வாகியின் பணியாகும்.
சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வளர்ச்சியடைய செய்யும் நபரே தொழில் முனைவோர் ஆவார். இவர் நிச்சயமற்ற சூழ்நிலையில் இடர்பாடுகளையும், ஆபத்துகளையும் மேற்கொண்டு தனது இலக்கை அடைவார். புதுமைகளை உருவாக்குபவர், விடா முயற்சியுடன் செயல்படுபவர், உறுதியான தனித்தன்மையுடன் பிரதிபலிப்பவர் தான் தொழில் முனைவோர். புதிய உற்பத்தி முறை மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்துதல், இடர்பாடுகளையும், ஆபத்துக்களையும் சந்திக்கும் மனப்பாங்கு படைத்தவர், நிறுவனத்தை ஒழுங்கு படுத்துதல் ஆகியவை தான் தொழில் முனைவோரின் பண்புகள் ஆகும்.
புதுமைகளை உருவாக்கும் தொழில்முனைவோர்கள், அதிரடி பரிசோதனை செயல்பாடுகளில் தீவிரமும் மற்றும் கவனிக்கத்தக்க சாத்தியங்களை நடைமுறை படுத்தும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள், மற்றவர்களின் பாணியை பின்பற்றி முன் உதாரணத்தை கடைபிடிப்பவர்கள், நல்ல நடைமுறைகளை பின்பற்றுபவர்கள் என தொழில்முனைவோர்களை பிரிக்கலாம். எந்த ஒரு தொழிலில் ஆரம்பித்த உடனேயே வெற்றி காண முடியாது. சிறிது, சிறிதாக உழைத்தால் வெற்றி சிகரத்தை எளிதில் தொட்டு விடலாம்.
தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். நிச்சயமற்ற சூழ்நிலையில் புதிய மற்றும் மேலான வழிகளின் மூலம் நல்ல முடிவு எடுக்கும் திறமையின் மூலம் செயல்படுவதையே நிர்வாகத்திறமை என்பர்.
வடிவமைத்தல் மற்றும் செயலாக்குதலில் பொறுப்பேற்று இடர்பாடுகளை யூகித்து வியாபார யுத்திகளை கையாண்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது தான் நிர்வாகத்திறமை. முன்னோக்கு பார்வையுடன் முதலீடு மற்றும் உற்பத்தி வாய்ப்புகள், புதிய தயாரிப்பு செயல்முறை, முதலீட்டை பெருக்குதல், வேலையாட்களை கூலிக்கு அமர்த்துதல், மூலப்பொருட்களை வாங்குதல் மற்றும் நிறுவனத்தின் அன்றாட வேலைகளை கவனித்து நிர்வகிக்கும் மேலாளர்களை நியமித்தல் ஆகியவை தான் ஒரு நிர்வாகியின் பணியாகும்.
சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வளர்ச்சியடைய செய்யும் நபரே தொழில் முனைவோர் ஆவார். இவர் நிச்சயமற்ற சூழ்நிலையில் இடர்பாடுகளையும், ஆபத்துகளையும் மேற்கொண்டு தனது இலக்கை அடைவார். புதுமைகளை உருவாக்குபவர், விடா முயற்சியுடன் செயல்படுபவர், உறுதியான தனித்தன்மையுடன் பிரதிபலிப்பவர் தான் தொழில் முனைவோர். புதிய உற்பத்தி முறை மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்துதல், இடர்பாடுகளையும், ஆபத்துக்களையும் சந்திக்கும் மனப்பாங்கு படைத்தவர், நிறுவனத்தை ஒழுங்கு படுத்துதல் ஆகியவை தான் தொழில் முனைவோரின் பண்புகள் ஆகும்.
புதுமைகளை உருவாக்கும் தொழில்முனைவோர்கள், அதிரடி பரிசோதனை செயல்பாடுகளில் தீவிரமும் மற்றும் கவனிக்கத்தக்க சாத்தியங்களை நடைமுறை படுத்தும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள், மற்றவர்களின் பாணியை பின்பற்றி முன் உதாரணத்தை கடைபிடிப்பவர்கள், நல்ல நடைமுறைகளை பின்பற்றுபவர்கள் என தொழில்முனைவோர்களை பிரிக்கலாம். எந்த ஒரு தொழிலில் ஆரம்பித்த உடனேயே வெற்றி காண முடியாது. சிறிது, சிறிதாக உழைத்தால் வெற்றி சிகரத்தை எளிதில் தொட்டு விடலாம்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகர் குடிநீருக்கு மட்டும் 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவமழை பெய்யும் காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரும். தற்போது மேட்டூர் அணையில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 45.25 அடி நீர்மட்டம் உள்ளது. நேற்று விடிய விடிய கனமழை நீடித்தது. எனவே வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
சென்னை மாநகர் குடிநீருக்கு மட்டும் 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவமழை பெய்யும் காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரும். தற்போது மேட்டூர் அணையில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 45.25 அடி நீர்மட்டம் உள்ளது. நேற்று விடிய விடிய கனமழை நீடித்தது. எனவே வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
சென்னை மாநகர் குடிநீருக்கு மட்டும் 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, போனிகபூர் - அஜித் - எச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை படத்தை தற்போது உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.
அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அஜித், எச்.வினோத்
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மங்காத்தா, பில்லா போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அஜித், தற்போது மீண்டும் அவ்வாறு நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
நெய்வேலி அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் பலியானார். மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசமானது.
இந்த நிலையில் நெய்வேலி அருகே நேற்று முன்தினம் இரவு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் ஒருவர் பலியானார். அதன் விவரம் வருமாறு:-
நெய்வேலி வடக்குமேலூரை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் சந்தோஷ்குமார் (வயது 47). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார், அவரது மனைவி வளர்மதி, மகள் ஈஸ்வரி, பச்சமுத்து, அவரது மனைவி கல்யாணி ஆகிய 5 பேரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்கனவே மழையால் நனைந்து இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சந்தோஷ்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து அலறினர்.
இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிசிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அறிந்ததும் வடக்குத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பா.ம.க. முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளருமான கோ.ஜெகன் நேரில் சென்று வீட்டை பார்வையிட்டார். பின்னர், லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்ட கோ.ஜெகன், பசுமை வீடு கட்டித்தரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறி உள்ளனர்.
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றுவதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என சென்னை பார் அசோசியேஷன் மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில் பெய்து வருகிறது.
கடந்த மாதம் 25-ந்தேதி பருவமழை தொடங்கிய நாளில் இருந்து 2 வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் அதிகன மழை வரை பெய்தது.
சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்ததால் நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு சீராகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள் ஒருங்கிணைந்து மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னையை போன்றே டெல்டா மாவட்டங்களிலும் மிக பலத்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 1½ லட்சம் பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. இதனால் கடன் வாங்கி விவசாய தொழிலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.
அந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அமைச்சர்கள் குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரும் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக மழை பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரியில் சென்று தங்கினார்.
இன்று காலை புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடிக்கு சென்றார். அங்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பெரியகங்கணாங்குப்பம், கடலூர், கடலூர் துறைமுகம், குள்ளஞ்சாவடி வழியாக குறிஞ்சிப்பாடிக்கு சென்றார்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்ய தொடங்கினார். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன. கெடிலம், தென்பெண்ணை யாறு, மணிமுக்தா நதி, மலட்டா ஆறு, வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது. விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.
பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட மாருதி நகருக்கு சென்று மழையால் பாதித்த வீடுகளை பார்வையிட்டார். அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில் பெய்து வருகிறது.
கடந்த மாதம் 25-ந்தேதி பருவமழை தொடங்கிய நாளில் இருந்து 2 வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் அதிகன மழை வரை பெய்தது.
சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்ததால் நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு சீராகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள் ஒருங்கிணைந்து மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னையை போன்றே டெல்டா மாவட்டங்களிலும் மிக பலத்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 1½ லட்சம் பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. இதனால் கடன் வாங்கி விவசாய தொழிலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.
அந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அமைச்சர்கள் குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரும் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக மழை பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரியில் சென்று தங்கினார்.
இன்று காலை புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடிக்கு சென்றார். அங்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பெரியகங்கணாங்குப்பம், கடலூர், கடலூர் துறைமுகம், குள்ளஞ்சாவடி வழியாக குறிஞ்சிப்பாடிக்கு சென்றார்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்ய தொடங்கினார். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன. கெடிலம், தென்பெண்ணை யாறு, மணிமுக்தா நதி, மலட்டா ஆறு, வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது. விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.
பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட மாருதி நகருக்கு சென்று மழையால் பாதித்த வீடுகளை பார்வையிட்டார். அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது சந்திரா, ஜெயலட்சுமி, அம்சாயாள், சந்திரா, ஜெயஸ்ரீ, சுபா, சீலா, செல்வி, இலக்கியா, சாந்தி, சரோஜா, ஜோதி, கிருஷ்ணவேணி, மலர்விழி, உமா, செல்வி, பழனியம்மாள், புஷ்பவள்ளி ஆகிய 18 பெண்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் அளவுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடூர்அகரம் பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரில் மூழ்கிய வயல் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க தங்களது நிலைமையை விவரித்தனர்.
வீடுகளை இழந்து பரிதவித்த ராஜகுமாரி, சுலோச்சனா, ரமேஷ், கிருஷ்ணவேணி, பார்வதி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதுபோல கால்நடைகளை பறிகொடுத்த ரஞ்சிதா, ராஜசேகரன், அம்சாயாள், கவிதா, தெய்வசிகாமணி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் கொடுத்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500-க்கு நிவாரண உதவிகளை அந்த இடத்தில் அவர் வழங்கினார்.
அதன் பிறகு சிதம்பரம் சென்று காலை சிற்றுண்டி சாப்பிட்டார். பின்னர் வல்லம் படுகை வழியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சீர்காழி வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் புத்தூர் அரசு பாலிடெக்னிக் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளை பார்வையிட்டார். அங்கு ஏராளமான ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் சட்டநாதபுரம், தென்னக்குடி வழியாக தரங்கம்பாடிக்கு சென்றார். அங்கு கேசவன்பாளையத்தில் சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சுனாமி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கு வசிப்பர்களை அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுப் பணித்துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். வயல்களில் தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்று வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
வேளாங்கண்ணியில் தேனீர் அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைஞாயிறு பகுதியில் மழை தண்ணீரில் மூழ்கி கிடந்த வயல்களை பார்வையிட்டார். பின்னர் நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி கிராமம் பகுதியில் பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி கிடக்கின்றன. அதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் கூடுதல் விவரங்களை கேட்டார்.
அப்போது நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி. செல்வராஜ், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர். அந்த கிராமத்தில் இருந்து தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவபுலம் பகுதிக்கு சென்றார். அங்கும் ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றையும் பார்வையிட்டார்.
பலத்த மழை காரணமாக அந்த பகுதியில் 10 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகள் வழங்கினார். அதன் பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். புழுதிக்குடியில் அரசு சார்பில் 12 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் 3 பேருக்கு வீட்டு மனை பட்டா, 3 பேருக்கு பகுதி அளவில் வீடு சேதமடைந்ததற்கான உதவி மற்றும் 3 பேருக்கு கால்நடை இறப்பிற்கான நிவாரண தொகை வழங்கினார். 2 பெண்களுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகையும், ஒரு பெண்ணுக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகையும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 82 ஆயிரத்து 275 மதிப்பில் உதவிகளை வழங்கினார்.
அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக மன்னார்குடிக்கு வந்தார். மன்னார் குடியில் மதிய உணவுக்காக சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இன்று பிற்பகல் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டத்துக்கு செல்கிறார். தஞ்சை மாவட்டத்தில் பெயரிகோட்டை பகுதியில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது ஏராளமானவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளையும் வழங்கி இருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்து முடித்த பிறகு சாலை மார்க்கமாக இன்று இரவே சென்னை வந்து சேருகிறார்.
அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடூர்அகரம் பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரில் மூழ்கிய வயல் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க தங்களது நிலைமையை விவரித்தனர்.
வீடுகளை இழந்து பரிதவித்த ராஜகுமாரி, சுலோச்சனா, ரமேஷ், கிருஷ்ணவேணி, பார்வதி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதுபோல கால்நடைகளை பறிகொடுத்த ரஞ்சிதா, ராஜசேகரன், அம்சாயாள், கவிதா, தெய்வசிகாமணி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் கொடுத்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500-க்கு நிவாரண உதவிகளை அந்த இடத்தில் அவர் வழங்கினார்.
அதன் பிறகு சிதம்பரம் சென்று காலை சிற்றுண்டி சாப்பிட்டார். பின்னர் வல்லம் படுகை வழியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சீர்காழி வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் புத்தூர் அரசு பாலிடெக்னிக் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளை பார்வையிட்டார். அங்கு ஏராளமான ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் சட்டநாதபுரம், தென்னக்குடி வழியாக தரங்கம்பாடிக்கு சென்றார். அங்கு கேசவன்பாளையத்தில் சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சுனாமி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கு வசிப்பர்களை அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுப் பணித்துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். வயல்களில் தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்று வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
வேளாங்கண்ணியில் தேனீர் அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைஞாயிறு பகுதியில் மழை தண்ணீரில் மூழ்கி கிடந்த வயல்களை பார்வையிட்டார். பின்னர் நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி கிராமம் பகுதியில் பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி கிடக்கின்றன. அதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் கூடுதல் விவரங்களை கேட்டார்.
அப்போது நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி. செல்வராஜ், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர். அந்த கிராமத்தில் இருந்து தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவபுலம் பகுதிக்கு சென்றார். அங்கும் ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றையும் பார்வையிட்டார்.
பலத்த மழை காரணமாக அந்த பகுதியில் 10 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகள் வழங்கினார். அதன் பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். புழுதிக்குடியில் அரசு சார்பில் 12 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் 3 பேருக்கு வீட்டு மனை பட்டா, 3 பேருக்கு பகுதி அளவில் வீடு சேதமடைந்ததற்கான உதவி மற்றும் 3 பேருக்கு கால்நடை இறப்பிற்கான நிவாரண தொகை வழங்கினார். 2 பெண்களுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகையும், ஒரு பெண்ணுக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகையும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 82 ஆயிரத்து 275 மதிப்பில் உதவிகளை வழங்கினார்.
அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக மன்னார்குடிக்கு வந்தார். மன்னார் குடியில் மதிய உணவுக்காக சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இன்று பிற்பகல் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டத்துக்கு செல்கிறார். தஞ்சை மாவட்டத்தில் பெயரிகோட்டை பகுதியில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது ஏராளமானவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளையும் வழங்கி இருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்து முடித்த பிறகு சாலை மார்க்கமாக இன்று இரவே சென்னை வந்து சேருகிறார்.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர், உவரி சென்ற பஸ்கள் அனைத்தும் சுசீந்திரம் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.
நாகர்கோவில்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தது.
அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் கன மழை கொட்டியது. இன்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலை 6 மணிக்கு மீண்டும் பெய்ய தொடங்கிய மழை சுமார் இரண்டு மணி நேரமாக வெளுத்து வாங்கியது.

கன்னியாகுமரியில் இன்று காலையிலும் கனமழை பெய்தது. இதனால் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் மற்றும் கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. கொட்டாரம், மயிலாடி, தடிக்காரன்கோணம், ஆரல்வாய் மொழி, குளச்சல், குலசேகரம், மார்த்தாண்டம், குழித்துறை, இரணியல் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது.
மலையோர பகுதிகளிலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வள்ளியாறு, பழையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் கொட்டி வருகிறது.
இரவு முழுவதும் கொட்டிய மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. தோவாளை தாலுகா மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தெரிசனங்கோப்பு, அருமநல்லூர், நாவல்காடு, புரவசேரி, செண்பகராமன்புதூர், தோவாளை, புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, சுசீந்திரம், காமராஜபுரம், தென்தாமரை குளம், தேரேகால்புதூர், லாயம் திருவட்டார், குலசேகரம் உள்பட மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.
கிள்ளியூர், பத்மநாபபுரம் தாலுகாவிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டிலிருந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்து நாசமானது. வீடுகளில் சிக்கித்தவித்த பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று மீட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். தொடர் மழையின் காரணமாக இன்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக இறச்சகுளம்-தெரிசனங்கோப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுசீந்திரம் சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர், உவரி சென்ற பஸ்கள் அனைத்தும் சுசீந்திரம் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.
தொடர் மழைக்கு நேற்று ஒரே நாளில் 65 வீடுகள் இடிந்தது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 12 வீடுகளும், தோவாளையில் 24 வீடுகளும், கல் குளத்தில் 6 வீடுகளும், திருவட்டாரில் 5 வீடுகளும், விளவங்கோட்டில் 16 வீடுகளும், கிள்ளியூரில் 2 வீடுகளும் இடிந்துள்ளது. 2 மரங்களும், 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.
மழை வெள்ளம் புகுந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 13 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 650 பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தது.
அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் கன மழை கொட்டியது. இன்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலை 6 மணிக்கு மீண்டும் பெய்ய தொடங்கிய மழை சுமார் இரண்டு மணி நேரமாக வெளுத்து வாங்கியது.
இதனால் நாகர்கோவில் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சாலை, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

மலையோர பகுதிகளிலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வள்ளியாறு, பழையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் கொட்டி வருகிறது.
இரவு முழுவதும் கொட்டிய மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. தோவாளை தாலுகா மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தெரிசனங்கோப்பு, அருமநல்லூர், நாவல்காடு, புரவசேரி, செண்பகராமன்புதூர், தோவாளை, புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, சுசீந்திரம், காமராஜபுரம், தென்தாமரை குளம், தேரேகால்புதூர், லாயம் திருவட்டார், குலசேகரம் உள்பட மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.
கிள்ளியூர், பத்மநாபபுரம் தாலுகாவிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டிலிருந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்து நாசமானது. வீடுகளில் சிக்கித்தவித்த பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று மீட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். தொடர் மழையின் காரணமாக இன்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக இறச்சகுளம்-தெரிசனங்கோப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுசீந்திரம் சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர், உவரி சென்ற பஸ்கள் அனைத்தும் சுசீந்திரம் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.
தொடர் மழைக்கு நேற்று ஒரே நாளில் 65 வீடுகள் இடிந்தது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 12 வீடுகளும், தோவாளையில் 24 வீடுகளும், கல் குளத்தில் 6 வீடுகளும், திருவட்டாரில் 5 வீடுகளும், விளவங்கோட்டில் 16 வீடுகளும், கிள்ளியூரில் 2 வீடுகளும் இடிந்துள்ளது. 2 மரங்களும், 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.
மழை வெள்ளம் புகுந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 13 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 650 பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்...மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா கொண்டாட்டம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பழுதடைந்த கொடிமரம் அகற்றப்பட்ட நிலையில் நேற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழுதடைந்த கொடிமரத்தை மாற்ற கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி பாலாலயம் நடந்தது.
தொடர்ந்து பழைய கொடிமரம் அகற்றப்பட்ட நிலையில் நேற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன், அரசு வக்கீல் விஜயகுமார், வள்ளலார் குடில் இளையராஜா, உபயதாரர் கனகசபை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பழைய கொடிமரம் அகற்றப்பட்ட நிலையில் நேற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன், அரசு வக்கீல் விஜயகுமார், வள்ளலார் குடில் இளையராஜா, உபயதாரர் கனகசபை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. வீராணம் ஏரியின் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.50 அடியாக இருந்தது. மேலும் லால்பேட்டை, காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி நீர் வி.என்.எஸ். மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.
சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. வீராணம் ஏரியின் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.50 அடியாக இருந்தது. மேலும் லால்பேட்டை, காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி நீர் வி.என்.எஸ். மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.
சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






