search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயல்வெளியில் உண்டியல்கள் வீசப்பட்டுள்ள காட்சி
    X
    வயல்வெளியில் உண்டியல்கள் வீசப்பட்டுள்ள காட்சி

    சிதம்பரம் அருகே உடையாரப்பன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

    சிதம்பரம் அருகே உடையாரப்பன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய கோஷ்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் உடையாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இது திறந்தவெளியில் உள்ளது. இதன் நிர்வாகியாக பூவராயர் உள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியலை பெயர்த்தெடுத்து அந்த பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர்.

    அங்கிருந்த 2 உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் எடுத்தனர். பின்னர் உண்டியல்களை வயலில் வீசிவிட்டு தலைமறைவானார்கள்.

    இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது உண்டியல்கள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    தகவல் அறிந்த கோவில் நிர்வாகி பூவராயர் வந்தார். இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.




    Next Story
    ×