என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் அருகே உடையாரப்பன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
Byமாலை மலர்15 Nov 2021 6:39 AM GMT (Updated: 15 Nov 2021 6:39 AM GMT)
சிதம்பரம் அருகே உடையாரப்பன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய கோஷ்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் உடையாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இது திறந்தவெளியில் உள்ளது. இதன் நிர்வாகியாக பூவராயர் உள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியலை பெயர்த்தெடுத்து அந்த பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர்.
அங்கிருந்த 2 உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் எடுத்தனர். பின்னர் உண்டியல்களை வயலில் வீசிவிட்டு தலைமறைவானார்கள்.
இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது உண்டியல்கள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
தகவல் அறிந்த கோவில் நிர்வாகி பூவராயர் வந்தார். இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய கோஷ்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் உடையாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இது திறந்தவெளியில் உள்ளது. இதன் நிர்வாகியாக பூவராயர் உள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியலை பெயர்த்தெடுத்து அந்த பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர்.
அங்கிருந்த 2 உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் எடுத்தனர். பின்னர் உண்டியல்களை வயலில் வீசிவிட்டு தலைமறைவானார்கள்.
இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது உண்டியல்கள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
தகவல் அறிந்த கோவில் நிர்வாகி பூவராயர் வந்தார். இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X