
தொடர்ந்து பழைய கொடிமரம் அகற்றப்பட்ட நிலையில் நேற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன், அரசு வக்கீல் விஜயகுமார், வள்ளலார் குடில் இளையராஜா, உபயதாரர் கனகசபை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.