என் மலர்
செய்திகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலமைச்சர் வீட்டுமனை பட்டா வழங்கிய காட்சி
பயிர்கள் சேதமான பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்- விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கி ஆறுதல்
கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில் பெய்து வருகிறது.
கடந்த மாதம் 25-ந்தேதி பருவமழை தொடங்கிய நாளில் இருந்து 2 வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் அதிகன மழை வரை பெய்தது.
சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்ததால் நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு சீராகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள் ஒருங்கிணைந்து மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னையை போன்றே டெல்டா மாவட்டங்களிலும் மிக பலத்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 1½ லட்சம் பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. இதனால் கடன் வாங்கி விவசாய தொழிலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.
அந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அமைச்சர்கள் குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரும் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக மழை பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரியில் சென்று தங்கினார்.
இன்று காலை புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடிக்கு சென்றார். அங்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பெரியகங்கணாங்குப்பம், கடலூர், கடலூர் துறைமுகம், குள்ளஞ்சாவடி வழியாக குறிஞ்சிப்பாடிக்கு சென்றார்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்ய தொடங்கினார். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன. கெடிலம், தென்பெண்ணை யாறு, மணிமுக்தா நதி, மலட்டா ஆறு, வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது. விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.
பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட மாருதி நகருக்கு சென்று மழையால் பாதித்த வீடுகளை பார்வையிட்டார். அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில் பெய்து வருகிறது.
கடந்த மாதம் 25-ந்தேதி பருவமழை தொடங்கிய நாளில் இருந்து 2 வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் அதிகன மழை வரை பெய்தது.
சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்ததால் நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு சீராகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள் ஒருங்கிணைந்து மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னையை போன்றே டெல்டா மாவட்டங்களிலும் மிக பலத்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 1½ லட்சம் பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. இதனால் கடன் வாங்கி விவசாய தொழிலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.
அந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அமைச்சர்கள் குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரும் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக மழை பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரியில் சென்று தங்கினார்.
இன்று காலை புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடிக்கு சென்றார். அங்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பெரியகங்கணாங்குப்பம், கடலூர், கடலூர் துறைமுகம், குள்ளஞ்சாவடி வழியாக குறிஞ்சிப்பாடிக்கு சென்றார்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்ய தொடங்கினார். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன. கெடிலம், தென்பெண்ணை யாறு, மணிமுக்தா நதி, மலட்டா ஆறு, வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது. விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.
பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட மாருதி நகருக்கு சென்று மழையால் பாதித்த வீடுகளை பார்வையிட்டார். அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது சந்திரா, ஜெயலட்சுமி, அம்சாயாள், சந்திரா, ஜெயஸ்ரீ, சுபா, சீலா, செல்வி, இலக்கியா, சாந்தி, சரோஜா, ஜோதி, கிருஷ்ணவேணி, மலர்விழி, உமா, செல்வி, பழனியம்மாள், புஷ்பவள்ளி ஆகிய 18 பெண்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் அளவுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடூர்அகரம் பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரில் மூழ்கிய வயல் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க தங்களது நிலைமையை விவரித்தனர்.
வீடுகளை இழந்து பரிதவித்த ராஜகுமாரி, சுலோச்சனா, ரமேஷ், கிருஷ்ணவேணி, பார்வதி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதுபோல கால்நடைகளை பறிகொடுத்த ரஞ்சிதா, ராஜசேகரன், அம்சாயாள், கவிதா, தெய்வசிகாமணி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் கொடுத்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500-க்கு நிவாரண உதவிகளை அந்த இடத்தில் அவர் வழங்கினார்.
அதன் பிறகு சிதம்பரம் சென்று காலை சிற்றுண்டி சாப்பிட்டார். பின்னர் வல்லம் படுகை வழியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சீர்காழி வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் புத்தூர் அரசு பாலிடெக்னிக் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளை பார்வையிட்டார். அங்கு ஏராளமான ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் சட்டநாதபுரம், தென்னக்குடி வழியாக தரங்கம்பாடிக்கு சென்றார். அங்கு கேசவன்பாளையத்தில் சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சுனாமி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கு வசிப்பர்களை அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுப் பணித்துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். வயல்களில் தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்று வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
வேளாங்கண்ணியில் தேனீர் அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைஞாயிறு பகுதியில் மழை தண்ணீரில் மூழ்கி கிடந்த வயல்களை பார்வையிட்டார். பின்னர் நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி கிராமம் பகுதியில் பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி கிடக்கின்றன. அதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் கூடுதல் விவரங்களை கேட்டார்.
அப்போது நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி. செல்வராஜ், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர். அந்த கிராமத்தில் இருந்து தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவபுலம் பகுதிக்கு சென்றார். அங்கும் ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றையும் பார்வையிட்டார்.
பலத்த மழை காரணமாக அந்த பகுதியில் 10 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகள் வழங்கினார். அதன் பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். புழுதிக்குடியில் அரசு சார்பில் 12 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் 3 பேருக்கு வீட்டு மனை பட்டா, 3 பேருக்கு பகுதி அளவில் வீடு சேதமடைந்ததற்கான உதவி மற்றும் 3 பேருக்கு கால்நடை இறப்பிற்கான நிவாரண தொகை வழங்கினார். 2 பெண்களுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகையும், ஒரு பெண்ணுக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகையும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 82 ஆயிரத்து 275 மதிப்பில் உதவிகளை வழங்கினார்.
அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக மன்னார்குடிக்கு வந்தார். மன்னார் குடியில் மதிய உணவுக்காக சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இன்று பிற்பகல் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டத்துக்கு செல்கிறார். தஞ்சை மாவட்டத்தில் பெயரிகோட்டை பகுதியில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது ஏராளமானவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளையும் வழங்கி இருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்து முடித்த பிறகு சாலை மார்க்கமாக இன்று இரவே சென்னை வந்து சேருகிறார்.
அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடூர்அகரம் பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரில் மூழ்கிய வயல் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க தங்களது நிலைமையை விவரித்தனர்.
வீடுகளை இழந்து பரிதவித்த ராஜகுமாரி, சுலோச்சனா, ரமேஷ், கிருஷ்ணவேணி, பார்வதி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதுபோல கால்நடைகளை பறிகொடுத்த ரஞ்சிதா, ராஜசேகரன், அம்சாயாள், கவிதா, தெய்வசிகாமணி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் கொடுத்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500-க்கு நிவாரண உதவிகளை அந்த இடத்தில் அவர் வழங்கினார்.
அதன் பிறகு சிதம்பரம் சென்று காலை சிற்றுண்டி சாப்பிட்டார். பின்னர் வல்லம் படுகை வழியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சீர்காழி வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் புத்தூர் அரசு பாலிடெக்னிக் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளை பார்வையிட்டார். அங்கு ஏராளமான ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் சட்டநாதபுரம், தென்னக்குடி வழியாக தரங்கம்பாடிக்கு சென்றார். அங்கு கேசவன்பாளையத்தில் சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சுனாமி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கு வசிப்பர்களை அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுப் பணித்துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். வயல்களில் தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்று வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
வேளாங்கண்ணியில் தேனீர் அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைஞாயிறு பகுதியில் மழை தண்ணீரில் மூழ்கி கிடந்த வயல்களை பார்வையிட்டார். பின்னர் நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி கிராமம் பகுதியில் பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி கிடக்கின்றன. அதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் கூடுதல் விவரங்களை கேட்டார்.
அப்போது நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி. செல்வராஜ், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர். அந்த கிராமத்தில் இருந்து தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவபுலம் பகுதிக்கு சென்றார். அங்கும் ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றையும் பார்வையிட்டார்.
பலத்த மழை காரணமாக அந்த பகுதியில் 10 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகள் வழங்கினார். அதன் பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். புழுதிக்குடியில் அரசு சார்பில் 12 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் 3 பேருக்கு வீட்டு மனை பட்டா, 3 பேருக்கு பகுதி அளவில் வீடு சேதமடைந்ததற்கான உதவி மற்றும் 3 பேருக்கு கால்நடை இறப்பிற்கான நிவாரண தொகை வழங்கினார். 2 பெண்களுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகையும், ஒரு பெண்ணுக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகையும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 82 ஆயிரத்து 275 மதிப்பில் உதவிகளை வழங்கினார்.
அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக மன்னார்குடிக்கு வந்தார். மன்னார் குடியில் மதிய உணவுக்காக சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இன்று பிற்பகல் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டத்துக்கு செல்கிறார். தஞ்சை மாவட்டத்தில் பெயரிகோட்டை பகுதியில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மழை பாதித்த பகுதிகளை பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது ஏராளமானவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளையும் வழங்கி இருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்து முடித்த பிறகு சாலை மார்க்கமாக இன்று இரவே சென்னை வந்து சேருகிறார்.
Next Story






