என் மலர்
கடலூர்
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பரவல்
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கும் மட்டும் கொரோனா தொற்று இருந்தது. அது கடந்த 12-ந் தேதி 206 பேருக்கும், 13-ந் தேதி 276 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது.
தற்போது நேற்று 308 பேருக்கு கொரோனா தொற்று பரவல் அசுரவேகத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுமட்டுமன்றி போலீஸ் சார்பில் ஜனவரி 1-ந் தேதி முதல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேர் முக கவசம் அணியாமல் இருந்தமைக்காக அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடலூர் துறைமுகத்தில் மற்றும் இறைச்சி கடைகளில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி பின்பற்றாமல் மீன்கள் மற்றும் இறைச்சிகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வதால் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் ஆப்பரேட்டர் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் குணசேகரன் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அடியிலுள்ள மோட்டார் கொட்டகையில் படுத்து தூங்கினார். தொடர்ந்து காலை நீண்ட நேரமாகியும் குடிநீர் வராததால் பொதுமக்கள் அங்குள்ள மோட்டார் கோட்டையைத் திறந்து பார்த்தனர்.
அப்போது அங்கு குணசேகரன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே இது குறித்து பஞ்சாயத்து தலைவர் தெய்வானை சிங்காரவேலுவுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி:
திட்டக்குடி நானூற்று ஒருவர் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திட்டக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து திட்டக்குடி நகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பாதையை அடைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, திட்டக்குடியில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், அதிக கூட்டம் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டாம், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
வடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் தையல் குணாம் பட்டிணத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகில் ஓடை புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பை கடந்த 18-ந் தேதி வருவாய்த்துறையினர் அகற்றி, வடிகால் வாய்க்கால் அமைத்தனர். வைத்திய நாதன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஆதரவாளர்கள் வாய்க்காலை வெட்டி சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் தனவேல், உதவியாளர் ஞானவேல் ஆகியோரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனவேல்குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிந்து சித்தாலிக் குப்பம் சந்தானராஜ், விஜய குமார், ஆடூர் குப்பம் அறிவழகன், சிவராஜ், திருநாவுக்கரசு, ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய வைத்தியநாதன், ஜோதியை போலீசார் தேடிவருகின் றனர்.
கொரோனா தொற்று காரணமாக தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. சத்திய ஞானசபை வளாகத்திற்குள் வெளி நபர்கள் அன்னதானம் செய்வதற்கு அனுமதி இல்லை.
உள்ளூர் நபர்கள் அன்னதானம் பார்சல் மூலமே வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் ஜோதி தரிசனத்தை காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக் காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்...வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது பல்வேறு துறைகளில் உள்ள குரூப்பி மற்றும் குரூப்சி பணிக்காலியிடங்கள் அடங்கிய எஸ்.எஸ்.சி. சி.ஜி.எல். தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
இப்பணிக்காலியிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக வருகிற 23-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 19-ந் தேதி முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04142 290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் பாலசுப்பிர மணியம் விடுத்துள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.






