என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேர் கைது
வடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் தையல் குணாம் பட்டிணத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகில் ஓடை புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பை கடந்த 18-ந் தேதி வருவாய்த்துறையினர் அகற்றி, வடிகால் வாய்க்கால் அமைத்தனர். வைத்திய நாதன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஆதரவாளர்கள் வாய்க்காலை வெட்டி சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் தனவேல், உதவியாளர் ஞானவேல் ஆகியோரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனவேல்குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிந்து சித்தாலிக் குப்பம் சந்தானராஜ், விஜய குமார், ஆடூர் குப்பம் அறிவழகன், சிவராஜ், திருநாவுக்கரசு, ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய வைத்தியநாதன், ஜோதியை போலீசார் தேடிவருகின் றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்