search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இணைய வழி பயிற்சி
    X
    இணைய வழி பயிற்சி

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு

    அரசு பணிக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது பல்வேறு துறைகளில் உள்ள குரூப்பி மற்றும் குரூப்சி பணிக்காலியிடங்கள் அடங்கிய எஸ்.எஸ்.சி. சி.ஜி.எல். தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

    இப்பணிக்காலியிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக வருகிற 23-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 19-ந் தேதி முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 04142 290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் பாலசுப்பிர மணியம் விடுத்துள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×