search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் புகை மூட்டத்துடன் கடும் பனிப்பொழிவு
    X
    கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் புகை மூட்டத்துடன் கடும் பனிப்பொழிவு

    கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் புகை மூட்டத்துடன் கடும் பனிப்பொழிவு- பொதுமக்கள் அவதி

    கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
    கடலூர்:

    மார்கழி மாதம் என்றாலே மாதம் முழுவதும் பனி பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் அதிகாலையில் பனி மூட்டம், மதியம் சுட்டெரிக்கும் வெயில், இரவு குளிர்ந்த காற்று என சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை 7 மணிவரை வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம் பாக்கம், நடுவீரப்பட்டு, திருவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    மேலும் இன்று போகி பண்டிகை என்பதால் அதிகாலை முதல் பொதுமக்கள் பழைய பொருட்கள் எரித்த காரணத்தினால் கடும் பனி பொழிவுடன் புகை மூட்டமும் இணைந்து கடும் புகையாக காட்சி அளித்தது. இதன் காரணமாக அதிகாலை முதல் வாகன ஓட்டிகள் முழுவதும் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சாலையில் சென்றதை காண முடிந்தது.

    மேலும் அதிகாலை முதல் சென்ற அனைத்து ரயில்களும் சில நிமிடம் காலதாமதமாக சென்றதோடு முகப்பு விளக்கு எரிய வைத்த படி சென்றதையும் காணமுடிந்தது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பனிமூட்டத்தால் அவதிப்பட்டனர்.
    Next Story
    ×