என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    பண்ருட்டியில் தற்கொலைக்கு முயன்ற அரசுபள்ளி தலைமை ஆசிரியை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பண்ருட்டி அருகே அரசுபள்ளி தலைமை ஆசிரியை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே பூங்குணம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராணி. இவர் சக ஆசிரியர்களை ஒருமையில் பேசி திட்டுவதாக புகார் எழுந்தது. இதுபற்றி இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகள் மாவட்ட கல்வி அதிகாரியை நேரில் சந்தித்து பணி மாறுதல் கேட்டு மனு கொடுத்தனர்.

    இந்த விவரம் தலைமை ஆசிரியை ராணிக்கு தெரிய வந்தது இதனால் அவர் வருத்தமுடன் காணப்பட்டார்.

    நேற்று மதிய உணவு இடைவேளையின்போது ராணி தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனால் வாந்தி,மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார் இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராணியை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×