என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியில் வாகீசம்பிள்ளை நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் கிருஷ்ணராஜ். இவர் நெய்வேலி டவுன்ஷிப்பில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடை சொந்தமாக வைத்துள்ளார்கிருஷ்ணராஜ் மனைவிக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆன நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்நேற்று காலை வேலு அவரது மனைவியும் தனது சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையில் உள்ள விவசாய விளை நிலங்களை பார்ப்பதற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து மாலை 4:30 மணிக்கு திரும்பி அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்து போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 5பவுன் நகை, 14,000பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து வடலூர் போலீ ஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடலூர்:
காட்டுமன்னார் கோவி லில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. சுற்றுவட்டார கிரா மத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் இங்கு வந்து செல்வர், இது தவிர வட்டாட்சியர் அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பொது மக்கள் வந்து செல்வர். இதனால் காட்டுமன்னார் கோவில் நகரப்பகுதி அதி காலை முதல் இரவுவரை பரபரப்பாக காணப்படும்இங்குள்ள முக்கிய வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் உள்ளன.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் காட்டுமன்னார் கோவில் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீரநல்லூர், மாமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கிராவல் செம்மண் எடுக்கப்படுகிறது. இந்த கிராவல் செம்மண் டாரஸ் எனப்படும் பெரிய டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக நிடத்திற்கு ஒரு லாரி சாலையை கடந்து செல்கிறது.க்ஷஇதனால் ஏற்கனவே இருந்ததை விட போக்கு வரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. இது தொடர்பாக நாளேடுகளில் செய்தி வரும் போது போலீ சார் ஒப்பந்ததாரரை அழைத்து பேசுகின்றனர். ஒரிரு தினங்கள் பள்ளி, கல்லூரி நேரங்களில் லாரிகள் இயக்கப்படாது. பின்னர் தொடர்ந்து இரவு பகலாக லாரிகள் இயக்கப்படும்.
எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காட்டுமன்னார்கோவில் சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்ய வேண்டுமென காட்டுமன்னார்கோவில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
- அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
கடலூர்:
புவனகிரி-விருத்தாசலம் சாலை, புவனகிரி- கடலூர் சாலை மற்றும் ஒரு வழி பாதையான சின்ன தேவாங்கர் தெரு ஆகிய இடங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுஇது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் முதல்-அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது
இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்த மான இடம் வரை அம்புக்குறி பெயிண்டால் போடப்பட்டதுஇதனை அகற்றிக் கொள்ள சுமார் 15 நாட்க ளுக்கு முன்பாக அனைத்து கடைக்காரரிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைக்கா ரர்கள் முன்பக்கம் இருந்த கீத்து கொட்டகை மற்றும் தகர சீட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டி வைத்த செங்கல் சுவர் மற்றும் காங்கிரட் தளம் அமைக்கப்பட்டு இருந்ததை அகற்றவில்லை.இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனால் சாலை அதிக அளவில் பொது மக்கள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு வசதி யாக உள்ளது.
ஆனால் தார் சாலை ஒட்டியுள்ள மின்கம்பங்களை ஆக்கிரம்புகள் அகற்றிய இடத்தின் ஓரமாக பொருத்தி னால் தார் சாலை மிகவும் அகலமாக இருக்கும். போக்கு வரத்திற்கும் இடை யூறு இல்லாமல் இருக்கும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்ற னர்இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக மின்கம்பங்களை அகற்றி விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
- டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
- 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டது,
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, பண்ருட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காலா வதியான பொருட்கள், குளிர்பானங்கள், கலப்பட டீ தூள், பழக்கடைகளில் கார்போக்கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்க படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர் 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை வசிப்பவர் வேலுச்சாமி, இவரது மகள் சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது சீர்காழி - புறவழிச்சாலையை கடக்க முயற்சித்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சாதனா மீது மோதிவிட்டார். மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிவிட்டார்.
அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சாதனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் தன் ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்,
- ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் பழைய காலணி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர்,அதே ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். அதற்கு அதே ஒரு சேர்ந்த மதிவாணன் என்பவர் எதற்கு இவனுக்கெல்லாம் பேனர் வைக்கிறாய் என கேட்டு ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
இதுகுறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து மதிவாணனை வலை வீசி தேடி வருகின்றனர்.
- தனது ஊழியரின் விரோத போக்கை கண்டித்து கடலூர் கலெக்டர் அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தனி துணை கலெக்டரை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்:
தமிழ்நாடு வருவாய்து றை அலுவலர் சங்கம் சார்பில் கடலூர் தனி துணை கலெக்டர் கீதா தனது ஊழியரின் விரோத போக்கை கண்டித்து கடலூர் கலெ க்டர் அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலா ளர் ஆறுமுகம் முன்னி லை வகித்தார். துணைத்த லைவர் ராஜேஷ் பாபு வரவேற்றார். ஆர்ப்பா ட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பூபாலச்சந்திரன், இணைச் செயலாளர்கள் சிவக்குமார், சக்திவேல், சஞ்சய், சதாசிவம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் வட்டத் தலைவர்கள் ராஜேந்திரன் சீனிவாசன் கமலநாதன் ஆனந்தகுமார் விக்னேஷ் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக கோரி க்கை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் ரத்தினகுமரன் நன்றி கூறினார்.
- தினந்தோறும் பள்ளி வாகனங்கள் சென்று பள்ளி குழந்தைகளைஅழைத்து வருவது வழக்கம்.
- நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் லாரி வேகமாக மோதியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மங்களூர் நேரு மழலையர் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு அருகிலுள்ள தொண்டாங்குறிச்சி, அரியநாச்சி, கழுதூர், கல்லூர், ஆவட்டி ,ம.பபுடையூர் பகுதிக்கு தினந்தோறும் பள்ளி வாகனங்கள் சென்று பள்ளி குழந்தைகளைஅழைத்து வருவது வழக்கம்.இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி பஸ் இன்றும் குழந்தைகளை அப்பகுதியில் இருந்து அழைத்துக் கொண்டு ஆவட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் உள்ள கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பள்ளி குழந்தைகள் ஏற்றிக் கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்போது நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் லாரி வேகமாக மோதியது இந்த விபத்தில் பஸ்சில் இருந்த குழந்தைகள் அலறினர். மேலும் இதில் 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனே குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.
- இவர் கடந்த 6-ந் தேதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பயிர்களை விற்க வந்துள்ளார்.
- ஜெயராமன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை.
கடலூர்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே அம்புஜவல்லி பேட்டை யைசேர்ந்தவர் ஜெயராமன்(வயது80) விவசாயி. இவர் கடந்த 6-ந் தேதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பயிர்களை விற்க வந்துள்ளார். பிறகு மாலை தன்னுடன் இருந்த உறவினர் ஜெயச்சந்திரன் என்பவரிடம், தன்னுடைய வீட்டிற்கு பிறகு வருகிறேன் எனக்கூறி அவரை அனுப்பியுள்ளார். ஆனால் ஜெயராமன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் செம்பையன் அவரை பல இடங்கில் தேடி உள்ளார்.ஆனால் எங்கும் ஜெயராமன் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த செம்பையன் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் காணாமல் போன ஜெயராமனை தேடி வருகின்றனர்.
- இதில் பிளஸ்-1 படிக்கும் மாணவனை அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
- இதில் காயமடைந்த பிளஸ்-1 மாணவன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சைக்கு சேர்க்கப்பட்டான்
கடலூர்:
பண்ருட்டி அருகே பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் அரசினர் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இதில் பிளஸ்-1 படிக்கும் மாணவனை அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிளஸ்-1 மாணவன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சைக்கு சேர்க்கப்பட்டான். இது குறித்து மாணவன் கொடுத்த புகாரின் பேரில் மாணவர்கள் மீது முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை சாலையின் குறுக்கே 2 பஸ்களை நிறுத்தி அவர்களுக்கிடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது
- ட்டக்குடியில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் கடலூர், திருச்சி மாநில நெடுஞ்சாலையில் காலை பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள், பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சைக்கிளில் செல்வோர் என அதிக அளவில் இந்த சாலையை அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய மான சாலையாகும் இந்த சாலையில் இன்று காலை 2 தனியார் பஸ்கள் காலதாமதத்தால் ஏற்பட்ட பிரச்சினையில் இன்று காலை சாலையின் குறுக்கே 2 பஸ்களை நிறுத்தி அவர்களுக்கிடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் கனரக வாகனங்கள், விவசாய டிராக்டர், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அதிக அளவில் அணிவகுத்து நின்றதால் திட்டக்குடியில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்று தனியார் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் அன்றாடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும், சில நேரங்க ளில் கைக லப்பாக மாறி மோதிக் கொள்வதும் நிகழ்கிறது. போலீசார் சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தால் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவினங்குடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கலையரசி (வயது 34). இவர் ஆவினங்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக ஊராட்சிகள் சட்ட விதியின்படி பஞ்சாயத்து தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார். தொடர்ந்து ஆவினங்குடி பஞ்சாயத்து நிர்வாகம் பி.டி.ஓ. கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர் இளவரசி நேற்று மாலை துப்புரவு பணி யாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கேஸ் புக் மற்றும் தீர்மானம் நோட் தருமாறு பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டார்
அதற்கு பஞ்சாயத்து தலைவர் கலையரசி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்குமாறு கூறியுள்ளார். இதில் ஊராட்சி செயலாளர் இளவரசி வீட்டில் எழுதி எடுத்துக்கொண்டு பி.டி.ஓ.விடம் கையெழுத்து வாங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவர் கலையரசி உடனடியாக ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலக வெளிப்புறத்தில் அமர்ந்து ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த மங்களூர் பி.டி.ஓ. முருகன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பஞ்சாயத்து தலைவரிடம் கூறியதை அடுத்து பஞ்சாயத்து தலைவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






