என் மலர்
கடலூர்
வானூர்:
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பகுதியை சேர்ந்த வர்கள் மணி கண்டன் (வயது 25), ஞான மணி (28). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். தற்போது திண்டி வனத்தில் கட்டிடவேலை செய்தனர். நேற்று இரவு வேலை முடிந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பரங்கிபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வானூர் அருகே மொரட்டாண்டி டோல்கேட் பகுதியில் சென்றபோது அந்த வழியாக லாரி குறுக்கே சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மணி கண்டன் சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். ஞானமணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான மணிகண்டன் உடலை கைப்பற்றி புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
பண்ருட்டி அருகே எனதரிமங்கலம் கிரா மத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி இவரது மகள் திவ்யா (வயது 22).
புகார்
சம்பவத்தன்று பண் ருட்டி அருகே அங்குசெட்டி பாளையத்திலுள்ள அவ ரது உறவினர் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திவ்யாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் திவ்யா கிடைக்கவில்லை.
இதனால் புதுப்பேட்டை போலீசில் திவ்யாவின் தாய் மகாலட்சுமி புகார் கொடுத்தார்.
கடத்தல்
புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சனூரை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவர் ஆசை வார்த்தை கூறி திவ்யாவை கடத்தி சென்றதாக தெரிய வந்தது.
இது குறித்து புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன திவ்யாவையும், கடத்திய விக்னேசையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருேக உள்ள நற்கரலந்தன்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சேகர். விவசாயி. அவரது மகள் மதுமிதா (வயது 21). அண்ணா மலை பல்கலை கழகத்தில் பி.எட். இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பல்கலைகழகத்துக்கு சென்றார்.
இது குறித்து பல்கலைகழக தோழிகள் மதுமிதாவின் தாய் உமாதேவி யிடம் ஏன் உங்கள் மகள் வகுப்புக்கு வரவில்லை என்று கேட்டனர். இதனால் உமாதேவி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மதுமிதா கிைடக்க வில்லை. இதுகுறித்து உமாதேவி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து மதுமிதா எங்குசென்றார். என்ன ஆனார். கடத்தப் பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:
பண்ருட்டி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் மெகா மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மகேஷ் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், மின்வாரியம், இன்சூரன்ஸ் வழக்குகள் என ஏராளமான வழக்குகளை சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்து கொள்ளப்பட்டன.
சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் வங்கி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அனைத்து வழக்குகளுக்கும் விசாரணை நடைபெற்று முடிவில் 130 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.2 கோடியே 31 லட்சத்து 76ஆயிரத்து 800 இழப்பீடாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி சட்ட பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த் ஜோதி செய்திருந்தார்.
- நடராஜர் சிலையை விற்க ஒரு சிலர் விலை பேசி வருவதாக சமூக வளைதளங்களில் பரவியது.
- பெரியசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடராஜர் சிலையை விற்க ஒரு சிலர் விலை பேசி வருவதாக சமூக வளைதளங்களில் பரவியது இதனைப் பார்த்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ஆவினங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஆவினங்குடி, திட்டக்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இத்தகவலை சமூக வளைதளங்களில் வெளியிட்டவர்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேப்பூரை அடுத்த காஞ்சிராங்குனத்தை சேர்ந்த பெரியசாமியின் (வயது 42) உறவினர்கள் இதனை வெளியிட்டது தெரியவந்தது. உடனடியாக பெரியசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
அவர் தந்த தகவலின் பேரில் ஆவினங்குடி ராமர் (33), வேப்பூர் அடுத்த பாசார் ராமச்சந்திரன் (33), மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த ராஜசூரியன்பேட்டையை சேர்ந்த சரவணன் (35) ஆகியோரை பிடித்தனர்.
இதில் தொழுதூர் அடுத்த அதர்நத்தத்தை சேர்ந்த வேல்முருகன் தன்னிடம் நடராஜர் சிலை உள்ளது. இதை விற்றுக் கொடுத்தால் பங்கு தருவதாக ராமர், சரவணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிலை வாங்குவது போல வேல்முருகனை ஆவினங்குடிக்கு ராமர் வரவழைத்தார். அப்போது ராமர், சரவணன் மற்றும் அவர்களது நண்பர்கள் வேல்முருகனை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சிலையை பறித்து ராமர் வீட்டி பதுக்கிவிட்டனர்.
இச்சிலையினை பெரியசாமி, ராமச்சந்தின் ஆகியோரிடம் விற்க ராமர், சரவணன் முயற்சித்தனர். அப்போது நடராஜர் சிலையை பெரியசாமி படம் பிடித்து அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். பெரியசாமியின் உறவினர்கள் நடராஜர் சிலை விற்பனைக்கு உள்ளது என்று சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்த நடராஜர் சிலையை பறிமுதல் செய்தனர். இந்த சிலை ஐம்பொன்னால் ஆன சிலையா? என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த வழக்கின் முக்கிய நபரான பா.ம.க. பிரமுகர் வேல்முருகனை போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அப்போது திட்டக்குடி அடுத்த அரங்கூரில் வேல்முருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்த போலீசார் பா.ம.க. பிரமுகர் வேல்முருகனை இன்று காலை கைது செய்தனர். இந்த சிலை எங்கிருந்து திருடப்பட்டது? அல்லது வேறு யாராவது கொடுத்து விற்க சொன்னார்களா? எப்படி கிடைத்தது? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் பா.ம.க. பிரமுகர் வேல்முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது,
- டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன.
கடலூர்:
பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதையும் மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.பண்ருட்டி நகரப்பகுதியில் அனுமதி இன்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவற்றை அகற்ற நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவிட்டார்அதன்பேரில் நகரமைப்பு அதிகாரி என்ஜினீயர் மணி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இன்று நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த பேனர்கள் அகற்றும் பணி மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
ண்ணா சிலை அருகில்,பஸ் நிலையம், 4 முனைசந்திப்பு, கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை,காந்தி ரோடு, ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 35 டிஜிட்டல் பேனர்களும், 4 விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.
- அப்பா அடித்ததால்,மனமுடைந்த இவர் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார்.
- தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்,
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமம் வடக்கு தெரு, காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது 2-வது மகன் கபில் தேவ் (வயது20).சம்பவத்தன்று குடிபோ தையில் தந்தை- மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி, கபில்தே வை அடித்தார்.
இதனால் மனமுடைந்த கபில்தேவ் இரவு 12.30 மணி அளவில் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திட்டக்குடி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மேலே ஏறி திட்டக்குடி தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்இரவு 1 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). அவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண நாளில் இருந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மேலும் உதயகுமார் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
இந்த நிலையில் உதயகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக சேர்க்கப்பட்டார். நேற்று (10 ந் தேதி) காலை உதயகுமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
இன்று (11-ந் தேதி) அதிகாலை உதயகுமாருக்கு திடீரென்று உடல்நிலை மோசமாகி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல் சிவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கூறுகையில், தற்போது உதயகுமாருக்கு 27 வயது ஆகியுள்ளது. இரணைய ஆபரேஷன் செய்த உதயகுமார் ஹார்ட் அட்டாக்கால் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த வயதில் இது போன்ற நிகழ்வு ஏற்படுமா? ஆகையால் உதயகுமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவால் அவர் இறந்து உள்ளார். மேலும் இவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
மேலும் இவரது பிரேத பரிசோதனை கடலூர் அரசு மருத்துவமனையில் பண்ணாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் அங்கு பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டால் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் இவர்களின் கோரிக்கையை ஏற்றதை தொடர்ந்து இறந்த உதயகுமார் மனைவி மனிஷா, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்ததன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைநகராக உள்ளது. இங்கு வயலப்பாடி, அகரம் பாடர், பெறுமுளை, சிறுமுளை, இ.கிரனூர், ஆவினங்குடி, பட்டூர், இடைச்செருவாய், கீழச்செருவாய் போன்ற கிராமங்கள் உள்ளது.இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்கிச் செல்ல தினமும் திட்டக்குடிக்கு வந்து செல்வர். இது தவிர திட்டக்குடியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்காக மாணவ, மாணவியர் தினமும் வந்து செல்கின்றனர்.
மேலும், திட்டக்குடி நகராட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிக்கும் ஏராளமான பொது மக்கள் பல்வேறு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வருகின்றனர். இது தவிர முகூர்த்த நாட்களில் வழக்கத்தைவிட கூடுதலான பொதுமக்கள் திட்டக்குடிக்கு வருகை தருகின்றனர்இதனால் திட்டக்குடி நகரம் தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் குறிப்பாக திட்டக்குடி, ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் மாலை நேரங்களில் அதிக அளவில் கனரக வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், கரும்பு டிராக்டர்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் தினமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் தங்களது வீட்டிற்கு செல்ல பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிடும் அரசு பஸ் தினமும் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகவே பஸ் நிலையம் வருகிறது.
திட்டக்குடியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸ் பிரிவை தனியாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை அமைக்காமல் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் காலங்கடத்தி வருகிறது.
எனவே திட்டக்குடியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசாரை வைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகளில் கோரிக்கையாக உள்ளது.
- மது போதையில் உறவுக்கார மாணவன் மணி பாலனை (17) அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளனர்.
- இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
கடலூர்:
ண்ருட்டி, பிப்.11-பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு கிராமத்தில்நேற்று மாலை இரண்டு சக்கர வாகனத்தில் குடிபோதையில்கத்தியை சுழட்டிக்கொண்டு சென்ற வர்களை பொதுமக்கள் பிடித்து புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து புதுப்பே ட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அந்தநபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்ததி வான் (வயது 23)முருகன் ( 23) என தெரிய வந்தது.
இவர்கள் சமையல் வேலை செய்பவர்கள். மடப்பட்டில் சமையல் வேலை முடித்துவிட்டுமது போதையில் சிறு கிராமத்தில்உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும்தனது உறவுக்கார மாணவன் மணி பாலனை (17) அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து சிறு கிராமத்தை சேர்ந்தமகேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரில்புதுப்பேட்டை போலீசார் திவான், முருகன் மீது வழக்கு பதிந்து 2பேரையும் கைது செய்தனர். மாணவன் மணி பாலனுக்கு அறிவுரைக் கூறி எச்சரித்துபெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.
- .எஸ்சி. நர்சிங்படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி திடீரென மாயமனார்.
- கரும்புதோட்டத்தில்பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்சரண்ராஜை சுற்றிவளைத்துபிடித்தனர்.
கடலூர்:
விழுப்புரம் அருகே உள்ளநரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பண்ருட்டியில் உள்ள தனியார் கல்லூரியில்பி.எஸ்சி. நர்சிங்படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி திடீரென மாயமனார்.இதுகுறித்து மாணவியின்பெற்றோர், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார்செய்தனர். அந்தபுகாரில், தங்களது மகள் பண்ருட்டி எல்.என்.புரம்அய்யனார் கோவில் வழியாக கல்லூரிக்கு சென்று வருவார்அப்போது அதேபகுதியை சேர்ந்த சரண்ராஜ் ( 22 ) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றுவிட்டதாக கூறியிருந்தனர்.
அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்தங்கவேலு ஆகியோர்வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சரண்ராஜ் என்பவரையும் தேடி வந்தனர்.அதனை தொடர்ந்து பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையி லானதனிப்படை போலீசார் விசாரரணை நடத்தினர். அப்போது 2 பேரும் தஞ்சையில் இருப்பது தெரிய வந்தது. உடனே பொலீசார் தஞ்சை விரைந்தனர்.அங்கு கரும்புதோட்டத்தில்பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்சரண்ராஜை சுற்றிவளைத்துபிடித்தனர்.விசாரணையில் சரண்ராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. இது போன்று ஆட்டோ டிரைவர் பல பெண்களின் விளையாடியதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து போக்சோவில் சரண்ராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியை மீட்டு பண்ருட்டி அழைத்து வந்தனர்அதன்பின்னர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி, சப்.இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் கடத்தப்பட்ட கல்லூரிமாணவியிடம்விசாரணைநடத்தினர். பின்னர் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தி மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக ராஜேஸ்வரி பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ராஜாமணி (வயது 65 ). இவர்நேற்று காலை அய்யனார் கோவில்தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜாமணியை பல்வேறு இடங்களில் ேதடினர்.
எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ராஜேஸ்வரி புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிந்து ராஜாமணி எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






