என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து குத்து விளக்கு திருடிய 2 சிறுவர்கள் காப்பகத்தில் அடைப்பு.
- இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
- கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் மாருதி நகர் பழ முதிர்ச்சோலை தெருவில் வசிக்கும் சதீஷ் (வயது 45). இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்கடந்த 11-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை 7 மணி அளவில் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது பித்தளை குத்து விளக்கு 2, காமாட்சி அம்மன் விளக்கு 2, தாம்பூலத் தட்டு 2 போன்றவைகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்ததுஇது குறித்து உடனடியாக வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 2 சிறுவர்கள் இச்சம்பவத்தில் ஈடு பட்டது போலீசாருக்கு தெரியவந்ததுதொடர்ந்து வடலூர் சர்வோதயா நகர் காளி கோயில் தெரு நடரானஜ் மகன் பார்த்திபன் (வயது 18), மாருதி நகர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (17), புதுநகர் சக்திவேல் மகன் சுரேந்தர் (எ)சூர்யா (15) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 18 வயதிற்கும் குறைவாக இருந்த 2 சிறுவர்களை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்