என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Smooth settlement"
- 250 வீடுகள் கடந்த ஆண்டு அதிரடியாக அகற்றப்பட்டது.
- கூரை வீடுகளுக்கு மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
பண்ருட்டி களத்து மேட்டு ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த 250 வீடுகள் கடந்த ஆண்டு அதிரடியாக அகற்றப்பட்டது. இதில் 25 குடும்பங்கள் வேறு இடத்திற்கு செல்லா மல் அதே இடத்தில்வசித்து வந்தனர். இவர்கள் தங்கி இருந்த கூரை வீடுகளுக்கு மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது.இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டிமின்வாரியஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்த வர்களை எச்சரித்து மின் இணைப்புகளை துண்டித்த னர். இதனைக் கண்டித்து பண்ருட்டி களத்து மேட்டு தெருவை சேர்ந்த மகாரா ஜன் மனைவி அமலாதலை மையில் பண்ருட்டி மடப் பட்டு ரோடுகளத்து மேடு பஸ் நிறுத்தம் அருகில் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பண்ருட்டி- மடப்பட்டு சாலையில் போக்கு வரத்து பாதித்தது .இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் சுமூகத்தீர்வு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்கு வரத்து பாதித்தது.
பண்ருட்டி:
பண்ருட்டி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் மெகா மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மகேஷ் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், மின்வாரியம், இன்சூரன்ஸ் வழக்குகள் என ஏராளமான வழக்குகளை சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்து கொள்ளப்பட்டன.
சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் வங்கி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அனைத்து வழக்குகளுக்கும் விசாரணை நடைபெற்று முடிவில் 130 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.2 கோடியே 31 லட்சத்து 76ஆயிரத்து 800 இழப்பீடாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி சட்ட பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த் ஜோதி செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்