search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் நகராட்சி அதிகாரிகள் அதிரடிஅனுமதி இன்றி  வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்
    X

    பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்ட காட்சி

    பண்ருட்டியில் நகராட்சி அதிகாரிகள் அதிரடிஅனுமதி இன்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

    • டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது,
    • டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதையும் மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.பண்ருட்டி நகரப்பகுதியில் அனுமதி இன்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவற்றை அகற்ற நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவிட்டார்அதன்பேரில் நகரமைப்பு அதிகாரி என்ஜினீயர் மணி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இன்று நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த பேனர்கள் அகற்றும் பணி மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

    ண்ணா சிலை அருகில்,பஸ் நிலையம், 4 முனைசந்திப்பு, கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை,காந்தி ரோடு, ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 35 டிஜிட்டல் பேனர்களும், 4 விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.

    Next Story
    ×