search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Threats to kill"

    • முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தியாக வல்லி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 47). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமர வேலுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பழனி வேல் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற் றோர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் தன் ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்,
    • ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    கடலூர்:  

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் பழைய காலணி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர்,அதே ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். அதற்கு அதே ஒரு சேர்ந்த மதிவாணன் என்பவர் எதற்கு இவனுக்கெல்லாம் பேனர் வைக்கிறாய் என கேட்டு ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    இதுகுறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து மதிவாணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • கடலூர் அருகே பெண்ணின் கையைபிடித்து இழுத்து வாலிபர் கொலை மிரட்டல் விடுத்தார்.
    • கடலூர் துறைமுகம் போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர், செப்.24-

    கடலூர் அருகே தியாகவல்லியை சேர்ந்தவர் திவ்யபாரதி (வயது 29) . இவரது கணவர் சம்பத்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவர் திவ்யபாரதிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பாபு நடவடிக்கை சரி இல்லாததால் திவ்யபாரதி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாபு திவ்யபாரதியை வழிமறித்து ஏன் என்னிடம் பேச மாட்டுகிறாய்? என கேட்டு அடித்து கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணை மானபங்கம் படுத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    • கொலை மிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    புவனகிரி, கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அன்பரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர். அன்று இரவு அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற அன்பரசன், ஆபாசமாக திட்டி, அவரை மானபங்கம் படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, அன்பரசனை தேடி வருகின்றனர்.

    ×