search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பரபரப்பு மோட்டார் சைக்கிளில் வந்து பட்டா கத்தியுடன் மிரட்டிய 2 பேர் கைது.
    X

    கைதான 2 பேரை படத்தில் காணலாம். 

    பண்ருட்டி அருகே பரபரப்பு மோட்டார் சைக்கிளில் வந்து பட்டா கத்தியுடன் மிரட்டிய 2 பேர் கைது.

    • மது போதையில் உறவுக்கார மாணவன் மணி பாலனை (17) அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளனர்.
    • இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    ண்ருட்டி, பிப்.11-பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு கிராமத்தில்நேற்று மாலை இரண்டு சக்கர வாகனத்தில் குடிபோதையில்கத்தியை சுழட்டிக்கொண்டு சென்ற வர்களை பொதுமக்கள் பிடித்து புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து புதுப்பே ட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அந்தநபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்ததி வான் (வயது 23)முருகன் ( 23) என தெரிய வந்தது.

    இவர்கள் சமையல் வேலை செய்பவர்கள். மடப்பட்டில் சமையல் வேலை முடித்துவிட்டுமது போதையில் சிறு கிராமத்தில்உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும்தனது உறவுக்கார மாணவன் மணி பாலனை (17) அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து சிறு கிராமத்தை சேர்ந்தமகேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரில்புதுப்பேட்டை போலீசார் திவான், முருகன் மீது வழக்கு பதிந்து 2பேரையும் கைது செய்தனர். மாணவன் மணி பாலனுக்கு அறிவுரைக் கூறி எச்சரித்துபெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

    Next Story
    ×