என் மலர்tooltip icon

    கடலூர்

    • நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார்.
    • அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. சாத்தமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.தற்போது நெல் அறுவடை என்பதால், நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை மூட்டை மூட்டையாக கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் பூதங்குடியைச் சேர்ந்த முகுந்தன் (வயது 40). இளம் விவசாயி. இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 450 மூட்டை நெல் விளைந்தது. இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.இதனை அங்குள்ள தலைமை லோடு மேன் தியாகராஜன் (55), மற்றும் ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அங்கு வந்த நெல் வியாபாரிகள் இந்த 450 மூட்டையை தவிர மீதமுள்ள நெல் மூட்டைகளை வாங்கிச் சென்றனர்எனது நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார். இதற்கு அவர் தலைமை லோடு மேனை பார்க்குமாறு கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தலைமை லோடு மேனை முகுந்தன் சந்தித்தார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்ட விவசாயி முகுந்தன், நேராக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதனிடம் விஷயத்தை கூறினார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர்.

    அதனை எடுத்துக் கொண்டு சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு இன்று காலை முகுந்தன் சென்றார்.அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தலைமை லோடு மேனும், எழுத்தரும் அறைக்குள் பேசிக் கொண்டுள்ளனர். அங்கு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து முகுந்தன் அறைக்குள் சென்றார்.மாறு வேடத்தில் முகுந்தனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு மறைந்திருந்தனர். அப்போது முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரம் பணத்தை எழுத்தர் அப்துல் ரகுமானிடம் வழங்கினார். பணத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்குமாறு எழுத்தர் கூறினார்.இதையடுத்து முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்கினார்பணத்தை வாங்கிய தியாகராஜன் அதனை எண்ணத் தொடங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்தர் அப்துல் ரகுமான், தலைமை லோடு மேன் தியாகராஜன் ஆகிய 2 பேரை கையும், களவுமாக கைது செய்தனர்விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர்.
    • விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. சாத்தமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

    தற்போது நெல் அறுவடை என்பதால், நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை மூட்டை மூட்டையாக கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பூதங்குடியைச் சேர்ந்த முகுந்தன் (வயது 40). இளம் விவசாயி. இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 450 மூட்டை நெல் விளைந்தது. இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.

    இதனை அங்குள்ள தலைமை லோடு மேன் தியாகராஜன் (55) மற்றும் ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அங்கு வந்த நெல் வியாபாரிகள் இந்த 450 மூட்டையை தவிர மீதமுள்ள நெல் மூட்டைகளை வாங்கிச் சென்றனர்.

    எனது நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார். இதற்கு அவர் தலைமை லோடு மேனை பார்க்குமாறு கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து தலைமை லோடு மேனை முகுந்தன் சந்தித்தார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.

    பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்ட விவசாயி முகுந்தன், நேராக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதனிடம் விஷயத்தை கூறினார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர். அதனை எடுத்துக் கொண்டு சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு இன்று காலை முகுந்தன் சென்றார்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தலைமை லோடு மேனும், எழுத்தரும் அறைக்குள் பேசிக் கொண்டுள்ளனர். அங்கு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து முகுந்தன் அறைக்குள் சென்றார்.

    மாறு வேடத்தில் முகுந்தனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு மறைந்திருந்தனர். அப்போது முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரம் பணத்தை எழுத்தர் அப்துல் ரகுமானிடம் வழங்கினார். பணத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்குமாறு எழுத்தர் கூறினார்.

    இதையடுத்து முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்கினார்.

    பணத்தை வாங்கிய தியாகராஜன் அதனை எண்ணத் தொடங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்தர் அப்துல் ரகுமான், தலைமை லோடு மேன் தியாகராஜன் ஆகிய 2 பேரை கையும், களவுமாக கைது செய்தனர்.

    விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    வெளி மாவட்டங்களில் இருந்து சிதம்பரம், நாகப்பட்டினம் செல்ல க்கூடிய பெரும்பாலான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருகின்றது.இந்த நிலையில் கனரக வாகனங்கள் முழுவதும் கடலூர் ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் , விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இன்று காலை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகில் ஜவான் பவன் சாலை வழியாக செல்வதற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது. இதனால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றின் பின் ஒன்று அணிவகுத்து நிற்க தொடங்கியது. இதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் அதிக ஒலி எழுப்பி கொண்டிருந்தன.ஆனால் பழுதடைந்த லாரியை உடனடியாக சரி செய்ய முடியவில்லை.

    இதன் காரணமாக மிக முக்கிய சாலையாக கருதக்கூடிய திருப்பாதிரிப்புலியூர் சாலை முழுவதும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் பகுதி என்பதால் கூடுதலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்ததோடு வெளியூருக்கு செல்லும் பொதுமக்களும் பஸ்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தனர். இதனை தொடர்ந்து அவசர அவசரமாக மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தும் வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • தென்பெண்னை ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது.அங்கே, அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
    • நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர்,

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் தென் பெண்ணையாறு உள்ளது. ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த போது அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.

    இத்தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு ஆற்றில் கரையோரம் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • வடலூரில் குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக வடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசா, சுடர் விழி, சீர்காழி சட்ட நாதபுரம் ஆனந்தன், புவனகிரி கீரப்பாளையம் கஜேந்திரன் மனைவி ஷீலா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏழை பெற்றோரிடம் இருந்து ஆண் குழந்தையை குறைந்த விலைக்கு வாங்கி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதன் பேரில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் புவனகிரி, வடலூர் பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தும் விவரம் சேகரித்து வருகின்றனர்.

    கைதான சித்த மருத்துவர் மெகருன்னிசா தான் 3 குழந்தைகளை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். எனவே வடலூரில் பிடிபட்ட குழந்தை விற்பனை கும்பலுக்கு தமிழகத்தில் பிற குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடலூர் நறிக்குறவர் காலனியை சேர்ந்த ஆனந்த் மற்றும் கடலூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நந்தினி ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

    குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    • நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர்.
    • கவர்னர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிதம்பரம் :

    மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினரும் சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர்.

    கவர்னர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    • இந்தியாவில் தற்போது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    சிதம்பரம் :

    மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    உங்கள் அனைவருக்கும் தெரியும் தில்லை நடராஜர், ஆதிகடவுளும், முதன்மையான கடவுளும் ஆவார். நமது திருநாட்டின் சனாதன தர்மம் தோன்றி, பல வித உணர்வுகளை தோற்றுவித்துள்ளது. பஞ்ச பூதங்களும், தமிழகத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழகம் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. புவிஈர்ப்பு விசையின் மைய தலமாக சிதம்பரமும், அதில் உள்ள தமிழ்நாடும் விளங்குகிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகளும், முனிவர்களும், மக்கள் எவ்வாறு ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். பன்முக தன்மையை எவ்வாறு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    ஒரு மரத்தில் லட்சக்கணக்கான இலைகள், கனிகள் இருக்கும். ஆனால் இரண்டு இலைகளோ, இரண்டு கனிகளோ ஒரே மாதிரி அமைவதில்லை. அதேபோன்று தான் பொதுமக்களாகிய நாமும் பல்வேறு உணர்வுகளும், கட்டமைப்பு இருந்தாலும் ஒரே தேசத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வை முன்னோர்கள் நமக்கு ஊட்டி சென்றுள்ளனர்.

    இந்தியாவில் தற்போது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதார மந்த நிலை நிலவும் போது, இந்தியா மட்டும் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் இன்று, இந்தியாவில் அனைத்து பகுதிகளையும் ஒரு சேர பார்க்கும் பிரதமரை பெற்றுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நமது பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மற்ற நாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன.

    நம் நாடு இன்று உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. நாம் ஆங்கிலத்திற்கு பல காலமாக அடிமையாக இருக்கிறோம். இதை மாற்ற வேண்டும். நமது சங்க இலக்கியங்களான திருக்குறள், திருமுறை, திவ்ய பிரபந்தம் ஞானத்தை கொண்டது. நமது குழந்தைகளை அதை படிக்க வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர் ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் அமர்ந்து பரத நாட்டியத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து, நாட்டிய கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார்.

    • கழிவு நீர் தொட்டியில் இன்று காலை மாடு ஒன்று உள்ளே விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த தீயணைப்பு வீரர்கள் மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி பூங்கா அருகில் கழிவுநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் இன்று காலை மாடு ஒன்று உள்ளே விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

    அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலாவதி (வயது 60). இவர் தனியாக வசித்து வருகிறார்,. தண்டபாணி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கலாவதியை கடுமையாக தாக்கியுள்ளார்,
    • தண்டபாணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த பல்லவராயநத்தம் சேர்ந்தவர் கலாவதி (வயது 60). இவர் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் கலா வதிக்கும் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 43) என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. மேலும் மூதாட்டி கலாவதி அவ்வப் போது தண்டபாணியை ஒருமையில் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு தண்டபாணி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கலாவதியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது

    .இதனால் கலாவதி அலறி கத்தியதால் அக்கம் பக்கத்தை சேர்ந்த பொது மக்கள் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்து குடி போதையில் தண்டபாணி வெளியில் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது தண்டபாணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து௹௹௹னர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டபாணியை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலத்த காயம் அடைந்த மூதாட்டி கலாவதியை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மூதாட்டி கலாவதி உறவினர் சந்திர சேகர் முன் விரோதம் காரணமாக கலாவதியை தாக்கி கற்பழிக்க முயற்சி செய்ததாக புகார் அளித் ததின் பேரில் நெல்லிக் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்க டேசன் மனைவி பத்மாவதி ஆண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு சென்ற பிறகு வயிறு பகுதியில் அதிக வலியின் காரணமாக அதே கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • பரிசோதனை செய்த போது பத்மாவதியின் குடல், கர்ப்பவாய் இரண்டையும் சேர்த்து தையல் போடப்பட்டிருந்தது,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமம் வெங்க டேசன் மனைவி பத்மாவதி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.வீட்டிற்கு சென்ற பிறகு வயிறு பகுதியில் அதிக வலியின் காரணமாக அதே கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.அங்கு பரிசோதனை செய்த போது பத்மாவதியின் குடல், கர்ப்பவாய் இரண்டையும் சேர்த்து தையல் போட்டுள்ளதை ஜிப்மர் டாக்டர்கள் கண்டறிந்தனர்

    இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 5 முறை மனு கொடுத்துள்ளனர். இதன் மீது கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டும், தங்களை எந்த விசாரணைக்கும் அழைக்கவில்லை என்று கூறி பத்மாவதியிpf உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.பின்னர் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார்.
    • சிகிச்சைக்காக சென்ற குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்,

    கடலூர்:

    கடலூர் அடுத்த ஈச்சங்காடு சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவருக்கு 2 வயதில் கவினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.சம்பவத்தன்று குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை கவினேஷ் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகு பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது .சம்பவத்தன்று சிவன் சக்தி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. .
    • மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சிவன் சக்தி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    கடலூர்:

    கடலூர் பழைய வண்டிப்பாளையம் சேர்ந்தவர் சிவன் சக்தி (வயது 45). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது .சம்பவத்தன்று சிவன் சக்தி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த சிவன் சக்தி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் சிவன் சக்தியை பரிசோதனை செய்த டாக்டர்அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×