என் மலர்tooltip icon

    கடலூர்

    • 6-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி நடக்கிறது.
    • 7-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது பெருவிழாவுக்கு முன்னதாக கிராம தேவதைகளுக்கு உற்சவம் நடைபெறும். முதலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார், செல்லியம்மன் கோவிலுக்கும், அதன்பிறகு விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகரின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான ஆழத்துக்கு விநாயகருக்கும் உற்சவம் நடைபெறும். அந்த வகையில் அய்யனார், செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், ஆழத்து விநாயகர் கோவில் தேரோட்டமும் நடந்தது.

    இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் உற்சவர்களுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, விழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவில் வருகிற 2-ந் தேதி(வியாழக்கிழமை) விருத்தகிரீஸ்வரர், கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக திருவிழாவும், 5-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்ட நிகழ்ச்சியும், 6-ந் தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 7-ந் தேதி தெப்ப உற்சவமும், 8-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அணிவகுப்பு நடத்தியதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெரும் பரபரப்பாக காண முடிந்தது.
    • 4-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை மத்திய அதிவிரைவு படை துணை கமாண்டர் விஜயன் தலைமையில் உதவி கமாண்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் 85 அதி விரைவு படை வீரர்கள் வந்தனர். கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கரை நேரில் சந்தித்தனர். கடலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட எந்தெந்த பகுதியில் தொடர் கலவரம் மற்றும் கொலை அதிகரித்து வருகின்றது. என்னென்ன காரணங்களால் தொடர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்பதனை கேட்டறிந்தனர்.

    அப்போது கடலூர் சோனாங்குப்பம் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஒரு கும்பல் முன் விரோதம் காரணமாக கொலை செய்தது. இது தொடர்பாக வருகிற 4-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பதற்றம் நீடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் மற்றும் கம்மியம்பேட்டை பகுதியில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கொலைகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக இந்த பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மத்திய அதிவிரைவு படையினர் அதிரடியாக இன்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். அப்போது தேவனாம்பட்டின முக்கிய சாலைகளில் மத்திய அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பாக சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை அச்சத்துடன் பார்வையிட்டனர். மத்திய அதிவிரைவு படை திடீரென்று இந்த அணிவகுப்பு நடத்தியதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெரும் பரபரப்பாக காண முடிந்தது. இது மட்டும் இன்றி வருங்காலங்களில் மேற்கண்ட பிரச்சனைக்குரிய பகுதிகளில் ஏதேனும் கலவரம் மற்றும் கொலைகள் அதிகரித்தால் அதிரடியாக மத்திய அதிவிரைவு படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதனை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்காக இந்த ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

    மேலும், இவர்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்தும் கருவிகள் போன்றவகள் உள்ளது. இதனால் உடனடியாக கலவரம் மற்றும் பிரச்சனைகளை தடுப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பதட்டமான பகுதிகளில் முழுவதும் மத்திய அதிவிரைவு படை கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர். அணிவகுப்பின் போது போலீஸ் துணை சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர். அதிவிரைவுப்படை வீரர்களின் அணிவகுப்பால் குற்றவாளிகளும் கலவரக்காரர்களும் பீதியடைந்துள்ளனர்.

    • அண்ணாமலை நகர் போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
    • விசாரணை நடத்தி சோதனை செய்து போது 80 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தார்

    கடலூர்:

    அண்ணாமலை நகர் போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது முத்தையா நகர் பாலம் அருகே வெளிநாட்டு இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டார். அவரை விசாரணை நடத்தி சோதனை செய்து போது 80 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தார். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்திய போது 2020ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்துள்ளார்.அந்த இளைஞர் ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த கிகாளி பகுதியில் வசிக்கும் ஷேமா மன்சி பேப்ரைஸ் (29) என்பது தெரியவந்தது. இவர் மீது போதை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

    • பெற்றோர் திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண் ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகளுக்கும், அதே ஊரை ஒரு வாலிபருக்கும் இடையே காதல் உருவானது. ஆனால், 2 பேருக்கும் வயது இல்லாததால் இவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி, கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறை வாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊர் நல அலுவலர் தனபாக்கியம் சிறுமி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்: அதில் வயது சான்றுடன் சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்று விட்டார். இந்நிலையில் சிறுமியின் தந்தை ஏழுமலை நேற்று திடீரென முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    • போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனா ம்பட்டினம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் கே.கே நகர் பகுதியில் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் 3 நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்பதனை முகம் அடையாளம் கண்டறியும் போலீஸ் ஆப் மூலம் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

    அப்போது இந்த நபர்கள் போலீசார் புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்து பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் வண்ணாரபாளையம் சேர்ந்தவர்கள் முகிலன், முரளி, முத்தையன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

    • அறிவழகன் இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.
    • கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 34).இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அறிவழகன் மற்றும் பவித்ரா ஆகியோர் கடந்த சில மாதத்திற்கு முன்பு கடலூர் கே.என்.பேட்டையில் இரும்பு கடை நடத்தி வந்தனர். அப்போது அறிவழகனுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பவித்ரா அதிர்ச்சியடைந்து தனது கணவன் அறிவழகனிடம் கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பவித்ராவை அடித்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பவித்ரா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

    • அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன.
    • உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜ பெருமாள் (வயது 70). இவர் தனது மனைவியுடன் ஆவட்டி கூட்ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் சொந்த ஊரான கல்லூர் செல்வார். அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன. பால் கறந்து விற்பது வழக்கம். அதேபோல் இன்று காலை பால் கறக்க தனது மனைவியுடன் கூட்ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அந்த நேரத்தில் மனைவியை சாலை ஓரம் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ராஜபெருமாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபெருமாள் துடிதுடித்து பரிதாமபாக உயிரிழந்தார். கண் எதிரே லாரி மோதி கணவர் உயிரிழந்ததால் மனைவி கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயதுசிறுமி இவர்அதேபகுதியி ல்உள்ளதொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார். வீட்டுக்குள் மீன் எடுக்கச் சென்ற சிறுமியை 17 வயது சிறுவன், பின் தொடர்ந்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார் உடனே சிறுமி சத்தம் போட்டார்.இந்த சத்தம் கேட்டு சிறுமியின் தாய் அங்கு ஓடி வந்தார். அவரை பார்த்ததும் சிறுவன் தப்பி ஒடி விட்டான்.

    இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை கைது செய்தார். பின்னர் சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    • சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு சென்றார்.
    • திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 20). கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு விஷ்ணு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் பஸ்க்குள் விஷ்ணு செல்ல வேண்டும் என கூறி திட்டியதாக தெரிகிறது.

    இதன் காரணமாக விஷ்ணு பஸ்ஸிலிருந்து இறங்கி வேறு பஸ்ஸில் செல்வதற்கு குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை காமராஜர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த விஷ்ணு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், பொட்டவெளி சேர்ந்த கிஷோர், வாஞ்சிநாதன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வெங்கட்( வயது 58).நேற்று இரவு வழக்கம் போல்கடையைப் பூட்டிவிட்டு இன்று காலை திறப்பதற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது
    • பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது,.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட்( வயது 58)இவருக்கு அதே தெருவில் மளிகை கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு இன்று காலை திறப்பதற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் கடையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு பார்வதி இவரது கணவர் சரவணன் ஆகியோர் நேற்று காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து 7 லட்சம் மதிப்பிலான 18 பவுன் நகைகள் திருடி சென்றது தெரியவந்தது.

    மக்களுக்கு பிரச்சினை என்றால் போலீசாரிடம் சென்று புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்வோம் ஆனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோவில்கள், கடைகள் மற்றும் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில், போலீசார் வீட்டிலே பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு அவர்களுக்கு சவால் விடும் அளவில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்இந்தத் தொடர் திருட்டு சம்பவம் ,போலீசார் வீட்டிலே திருடிய சம்பவம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இன்றி சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் அலுவலகம் அருகே 24 மணி நேரமும் உயர் அதிகாரிகள் முதல் போலீசார் வரை சென்று வரும் சாலையில் உள்ள கோவிலில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் திருடிய சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் போலீசார் ஏற்கனவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படையை அமைத்து தீவிரமாக கவனம் செலுத்தி கைது செய்வதோடு வருங்காலங்களில் தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வாலிபர் ஒருவர் முதியோர் உதவித்தொகைக்கான, பணம் வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி சென்றுவிட்டார்,
    • .சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஒப்ப டைத்தனர்.

    கடலூர்:

    வடலூர் அருகே தென்குத்து புதுநகர் காலனி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி விருத்தாம்பாள் (70) கோவிந்தன் இறந்து விட்டார்.மூதாட்டி விருதாம்பாள் வீட்டில் தனியாக இருந்த போதுவாலிபர் ஒருவர் வந்தார். அவர் முதியோர் உதவித்தொகைக்கான, பணம் வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி அவர் அணிந்திருந்த ஒரு ஜோடி தங்க மூக்குத்தியை கழட்டி கொடுங்கள் என ஒரு வெள்ளை பேப்பரில் மடித்து கொடுக்கின்றேன்.

    அதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என வாங்கியுள்ளார். அந்த வாலிபர் நகையை பாக்கெட்டில் வைத்து கொண்டு அந்த பேப்பரில் 2சிறிய கற்களை வைத்து மடித்துக் கொடுத்துவிட்டு அதிகாரிகளை அழைத்து வருகின்றேன் என்று தான் வந்த இருசக்கர வாகனத்தில் சென்று விட்டார்.அவர் சென்ற பிறகு மூதாட்டி வீட்டின் உள்ளே சென்று பேப்பரை பிரித்து பார்த்துள்ளார். அதில் நகைகளுக்கு பதில் கற்கள் இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்து உடனடி யாக திருடன் திருடன் என கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஒப்ப டைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் அவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்ட நல்லூர் வடக்கு தெரு சாமிதுரை மகன் சரத்குமார்( 27 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    சந்துரு (வயது 20). மோட்டார் சைக்கிளில்திருநாவலூர் சென்று கொண்டிருந்த போது,பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்துரு (வயது 20). இவர் கடந்த 22.10.2019 அன்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக திருநாவலூர் சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த சந்துருவின் தந்தை மற்றும் சகோதரர் நஷ்டஈடு கேட்டு, கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடுத்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சந்துரு குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 680 வழங்க வேண்டும் என கடந்த 24.2.2021 அன்று உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்காததால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 20.12.2022 அன்று விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, சந்துரு குடும்பத்திற்கு வட்டியுடன் ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 740 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்காததால், நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    ×