என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாட்டு இளைஞர்"

    • அண்ணாமலை நகர் போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
    • விசாரணை நடத்தி சோதனை செய்து போது 80 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தார்

    கடலூர்:

    அண்ணாமலை நகர் போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது முத்தையா நகர் பாலம் அருகே வெளிநாட்டு இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டார். அவரை விசாரணை நடத்தி சோதனை செய்து போது 80 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தார். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்திய போது 2020ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்துள்ளார்.அந்த இளைஞர் ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த கிகாளி பகுதியில் வசிக்கும் ஷேமா மன்சி பேப்ரைஸ் (29) என்பது தெரியவந்தது. இவர் மீது போதை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

    ×