என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது
- போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
கடலூர்:
கடலூர் தேவனா ம்பட்டினம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் கே.கே நகர் பகுதியில் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் 3 நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்பதனை முகம் அடையாளம் கண்டறியும் போலீஸ் ஆப் மூலம் புகைப்படம் எடுக்க முயன்றனர்.
அப்போது இந்த நபர்கள் போலீசார் புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்து பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் வண்ணாரபாளையம் சேர்ந்தவர்கள் முகிலன், முரளி, முத்தையன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
Next Story