search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில்  காணாமல் போன கைப்பை மீட்பு:உரியவரிடம் ஒப்படைப்பு
    X

    காணாமல் போன கைப்பையை சுதாவிடம் போலீசார் ஒப்படைத்த காட்சி.

    திட்டக்குடியில் காணாமல் போன கைப்பை மீட்பு:உரியவரிடம் ஒப்படைப்பு

    • சுதா( 30) அங்கன்வாடி ஊழியர். இவர் ஊருக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறி,டிக்கெட் எடுக்க கைப்பையை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது.போலீசில் புகார் கொடுத்தார். .
    • போலீசார் கண்டறிந்து சுதாவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை.இவரது மனைவி சுதா( 30) அங்கன்வாடி ஊழியர் .இவர் நேற்று முன்தினம் மாலை திட்டக்குடிக்கு சொந்த வேலை காரணமாக வந்தார். மீண்டும் ஊருக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுக்க கைப்பையை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது. அந்த பையில் ரூ. 1500 பணம், 2 செல்போன்கள் ஏ.டி.எம்.கார்டு, ஆதார் கார்டு, வீட்டு சாவி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது சுதா தனது கைப்பை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்டக்குடி சப்- இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை கொண்டனர். அப்ேபாது காணாமல் போன ைகப்பை கோழியூர் பகுதியில் கிடந்ததை போலீசார் கண்டறிந்து சுதாவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×