search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbu Jothi Ashram"

    • விக்கிரவாண்டி ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    • கீழ் கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது.

    இங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் துன்புறுத்தப்படுவதாகவும், ஆசிரமத்தில் இருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, மேலாளர் பிஜூமோன், ஆசிரம பணியாளர்கள் சதிஷ், அய்யப்பன், கோபிநாத், பூபாலன், முத்துமாரி, தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 8 பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜூபின் பேபி உள்பட 8 பேருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வக்கீல் சங்கீதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து ஜபின் பேபி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். கீழ் கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 6 பேரிடம் 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
    • 6 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் விசாரணை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

    இந்த ஆசிரமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

    இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் பிஜி மோன், கோபிநாத், முத்து மாரி, சதீஷ், பூபாலன், அய்யப்பன், தாஸ் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மனநலம் குன்றிய தாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 பேரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்தனர். இவர்களிடம் விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது

    இவர்களில் முத்து மாரி, சதிஷ் ஆகியோருக்கு மனநிலை சரியில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை இன்று மனநலத்துறை தலைவர் டாக்டர் புகழேந்தி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்கிறார்கள்.

    கைது செய்யப்பட்ட ஜூபின் பேபி உள்பட 6 பேரிடம் இன்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூபின் பேபி உள்பட 6 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் விசாரணை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணை முடிந்து 6 பேரும் நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    • ஆசிரமம் மீது பல்வேறு சர்ச்சையான புகார்கள் எழுந்தது.
    • ஆசிரமம் தொடங்கியதில் இருந்து இதுவரை எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது.

    இந்த ஆசிரமம் மீது பல்வேறு சர்ச்சையான புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மன நலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது போன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஆசிரம பணியாளர்கள் உள்பட 8 பேரையும 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பராணி 8 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து 8 பேரையும் அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆசிரமம் தொடங்கியதில் இருந்து இதுவரை எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் விவரங்கங்கள் குறித்தும், பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்த 143 பேர் மற்றும் கோட்டக்குப்பத்தில் இயங்கி வந்த கிளை ஆசிரமத்தில் இருந்த 25 பேர் என 177 பேரை அதிகாரிகள் மீட்டு பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரையும் வருகிற 28-ந் தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    • 28-ந்தேதி பகல் 12 மணிக்கு 8 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவு பிறப்பித்தார்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

    ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ந்தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உள்பட 9 பேர் மீது கெடார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20 பேர் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வந்தது. ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரையும் வருகிற 28-ந் தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். 28-ந்தேதி பகல் 12 மணிக்கு 8 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவு பிறப்பித்தார்.

    இதற்கிடையே ஆசிரமத்தில் இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜாபருல்லா, தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி அம்மாள், அவரது மகன் முத்து விநாயகம் ஆகியோரின் படங்களை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம் மட்டுமின்றி சேலம், கடலூர்,திருநெல்வேலி,கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இவர்களின் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குண்டலப்புலியூர் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி பெங்களூருவில் உள்ள தனது நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உடள்பட 53 பேரை அனுப்பி வைத்திருந்ததாக தெரிவித்து இருந்தார். இதில் ஜாபருல்லா உள்பட 11 பேர் மட்டும் மாயமாகி போனது தெரிய வந்தது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் பெங்களூரு தொட்டக்குப்பியில் உள்ள ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 11 பேர் மாயமானது குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சில சட்டப்பூர்வமான ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

    • அன்பு ஜோதி ஆசிரமத்தில் இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • 11 பேர் மாயமானது குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

    ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ந்தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உள்பட 9 பேர் மீது கெடார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20 பேர் குழு வினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வர உள்ளது.

    இதற்கிடையே ஆசிரமத்தில் இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜாபருல்லா, தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி அம்மாள், அவரது மகன் முத்து விநாயகம் ஆகியோரின் படங்களை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம் மட்டுமின்றி சேலம், கடலூர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இவர்களின் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குண்டலப்புலியூர் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி பெங்களூருவில் உள்ள தனது நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உடள்பட 53 பேரை அனுப்பி வைத்திருந்ததாக தெரிவித்து இருந்தார். இதில் ஜாபருல்லா உள்பட 11 பேர் மட்டும் மாயமாகி போனது தெரிய வந்தது. இந்த நிலையில சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரத்தில இருந்து பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் பெங்களூரு தொட்டக்குப்பியில் உள்ள ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 11 பேர் மாயமானது குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சில சட்டப்பூர்வமான ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

    • வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
    • ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது.

    எனது மூத்த சகோதர் ஜெயக்குமார் (வயது 60) என்பவரை கடலூரில் உள்ள இக்னைட் சாரிட்ட பிள் டிரஸ்டில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதித்தேன். அங்கு தங்கியிருந்த எனது சகோதரரை விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றியுள்ளதாக சாரிட்ட பிள் ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும், இயற்கை சூழலுடன் அங்கு இருக்கலாம், வசதிகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா என்பவரை காணவில்லை என்ற புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதை நான் அறிந்தேன். உடனடியாக அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு எனது சகோதரரின் நிலை குறித்து விசாரித்தேன்.

    உங்களது சகோதரரை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சரணாலயம் அறக்கட்டளை நடத்தும் கருணை இல்லத்திற்கு மாற்றிவிட்டதாக கூறினார்கள். ஆனால் அங்கும் எனது சகோதரர் இல்லை. எனவே, எனது சகோதரர் இப்போது எங்கே இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.

    வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், அங்கிருந்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது சகோதரர் ஜெயக்குமாரின் நிலை குறித்து எனக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

    இது குறித்து கிருஷ்ண மூர்த்தி கூறும் போது:-

    கடலூரில் உள்ள ஆசிர மத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளை மேற்கோள் காட்டி, அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டு அவர்களின் மன உறுதியை பாதிக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். 3 நாட்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். ஆசிரம அதிகாரிகளிடம் எனது தொடர்பு விவரங்கள் உள்ளன. எனது சகோதரர் ஏதாவது நோயால் இறந்திருந்தால், அவர் இறந்ததை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எந்த தகவலும் இல்லை என்றார்.

    • அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார்.
    • பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி ஆசிரமத்தை நடத்தி வந்தார்.

    இந்த ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த ஜபருல்லாகாணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ந்தேதி கெடார் போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஆசிரமத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்பட 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது என பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தாக்கல் செய்த ஆவணங்களை விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார்.

    மேலும் பலரிடம் நிதி உதவிகளையும் இணையதளம் மூலம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.

    • விக்கிரவாண்டி ஆசிரம ஊழியர்கள் பிஜூ ஆனந்த், பூபாலன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன், தாஸ், சதிஷ் ஆகிய 7 பேரும் ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
    • சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர்களை அங்கேயே பணியாளர்களாக நியமித்து மாத சம்பளம் கொடுத்து வந்துள்ளார் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி.

    இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ஆசிரமத்தை தொடங்கினார். அங்கு 2021-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா மாயமானது குறித்து அவரது உறவினர் கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் கண்டு பிடிக்காத நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செயதனர்.

    கோர்ட்டு உத்தரவின் படி கடந்த 10-ந்தேதி செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 145 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் ஆசிரமம் அனுமதியின்றி செயல்பட்டதும் தெரிய வந்தது.

    ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிலருக்கு பாலியல் தொந்தரவு, சித்ரவதை மற்றும் பலர் காணாமல் போனதாக புகார்கள் அளித்தனர். இது குறித்து தனித்தனி புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அசிரமத்திலிருந்த ஜபருல்லா உள்பட 53 பேரை பெங்களூருவில் ஜூபின் பேபி நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அதில் 11 பேர் தப்பி ஓடி விட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கெடார் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர ஜோதி, கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சி.பி.சி,ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் விசாரணையை தொடங்கினார்கள்.

    விக்கிரவாண்டி ஆசிரம ஊழியர்கள் பிஜூ ஆனந்த், பூபாலன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன், தாஸ், சதிஷ் ஆகிய 7 பேரும் ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர்களை அங்கேயே பணியாளர்களாக நியமித்து மாத சம்பளம் கொடுத்து வந்துள்ளார் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி.

    அவர்களை வீட்டிற்கும் அனுப்பாமல் அங்கேயே அறை ஒதுக்கி ஆசிரமத்தின் ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருக்கவும், அங்கு நடக்கும் சம்பவங்களுக்கு துணையாகவும் ஆசிரமத்தை பாதுகாக்கவும் அவர்களை பயன்படுத்தி கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிதியின் மூலம் ஜூபின் பேபிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைத்துள்ளது.
    • கருணை பயணம் என பெயரிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கூடுதல் நல சிகிச்சை அளிக்க வெளி மாநிலத்துக்கு அனுப்புவதாக அழைப்பிதழ் வெளியிட்டும் ஜூபின் பேபி நிதி குவித்துளார்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிலர் மாயமானார்கள். இதனால் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது.

    ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அடித்து துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் 7 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 பேர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 பேர் பெண்கள்.

    தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் கலெக்டர் பழனி முன்னிலையில் நேற்று மருத்துவமனைக்கு வந்து ஆசிரமவாசிகளிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் நிருபர்களிடம் காஞ்சன் கட்டார் கூறும் போது, இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது. நாங்கள் ஆணையத்திடம் அறிக்கை வழங்குவோம்.

    காப்பகத்தில் இருந்த 2 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்திருந்தனர். எங்கள் விசாரணையில் அது உண்மை என உறுதி செய்யப்டப்பட்டுள்ளது என்றார்.

    அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி அன்பு ஜூபின் கேபி கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2005-ல் குண்டலப்புலியூரில் அறக்கட்டளை என்று பதிவு செய்து ஒரு சிறிய கட்டிடத்தில் அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி மனநலம் குன்றியோர், ஆதரவற்றவர்களை சேர்த்துள்ளார்.

    ஆசிரமத்தில் சிறிய கட்டிடத்தில் இருந்த ஆசிரமம் அசுர வளர்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் பண ஆசையில் இடப் பற்றாக்குறை, உயர் மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களை காட்டி இங்கிருந்தவர்களில் சிலரை கமிஷன் பெற்று பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் உள்ள ஆசிரமங்களுக்கு ஜூபின் பேபி அனுப்பி வைத்துள்ளார்.

    ஜூபின் பேபி மூலம் பெறப்பட்ட ஆட்களை கொண்டு அந்த ஆசிரமத்தினர் தங்கள் ஆசிரமத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரை தங்க வைத்து பராமரிது வருகிறோம் என கணக்கு காண்பித்து வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று குவித்துள்ளனர்

    அந்த நிதியின் மூலம் ஜூபின் பேபிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைத்துள்ளது. இதற்கு கருணை பயணம் என பெயரிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கூடுதல் நல சிகிச்சை அளிக்க வெளி மாநிலத்துக்கு அனுப்புவதாக அழைப்பிதழ் வெளியிட்டும் ஜூபின் பேபி நிதி குவித்துளார். ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு காணாமல் போனவர்கள் 11 பேர் என போலீசார் கூறுகின்றனர்.

    மேலும் சிலர் காணாமல் போனதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இவர்கள் எங்கே போனார்கள்? இவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டதா? என்று தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது.

    • ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தி கைப்பற்றிய ஆவணங்களையும் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
    • கெடார் போலீசாரிடமிருந்து ஆவணங்களை வாங்கி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவாக விசாரணை நடத்த உள்ளனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட 143 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் ஆசிரமம் குறித்த பல புகாரின் அடிப்படையில் பாலியல் மற்றும் மனநலம் பாதிக்கபட்டவர்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நிர்வாகி ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜு பின், மேலாளர் பிஜிமோன் உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நாடி முத்துவின் மனைவி பத்மா (வயது 47) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி ஆசிரமத்தில் அவரது குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.

    ஆசிரமம் பற்றிய தகவலை கேள்விப்பட்ட அவரது மகன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தனது தாயை தேடினார்.

    அங்கு தனது தாய் பத்மா இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மகன் அருண் தனது தாயை காணவில்லை என்று கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புதுச்சேரி மாநிலம் தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது அண்ணன் நடராஜனை காணவில்லை எனவும், அவரை கண்டு பிடித்து தருமாறும் போலீஸ் நிலையத்தில் மற்றொரு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஆசிரமத்தில் செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பதிவேடுகளை ஆய்வு செய்தோம். அங்கு தங்கி இருந்தவர்களுக்கு கொடுத்த மருந்துகள் குறித்தும், ஆய்வு செய்து வருகிறோம்.

    விழுப்புரம் டி.ஜ.ஜி. அறிவுறுத்தலின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆசிரமத்தில் காணாமல் போனவர் குறித்து பெங்களூர் சென்று விசாரணை செய்துள்ளோம். அங்கு 15 பேர் சென்றதற்கான பதிவேடுகள் உள்ளன. மேலும் 15 பேர் காணாமல் போனது குறித்து போலீசில் அவர்கள் புகார்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஜாபருல்லா காணாமல் போனது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தி கைப்பற்றிய ஆவணங்களையும் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

    இதற்கிடையே அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கெடார் போலீசாரிடமிருந்து ஆவணங்களை வாங்கி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி உள்ளிட்ட 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    • ஜாபருல்லா எங்கே? என்கிற கேள்வி பலமாகவே எழுந்துள்ளது. இவரைப்போல மாயமான 50 பேரும் எங்கிருக்கிறார்கள்? என்பதும் மர்மமாகவே உள்ளது.
    • அடுத்தடுத்து நடத்தப்படும் விசாரணையில் அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் 'அன்புஜோதி' என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையை சேர்ந்த ஜூபின்பேபி தனது மனைவி மரியாவுடன் இணைந்து 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த ஆதரவற்ற பெண்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என சுமார் 150 பேர் தங்கி இருந்துள்ளனர்.

    இவர்களில் ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை சிறைவைத்து சங்கிலியால் கட்டிவிட்டு ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி கற்பழித்து விட்டதாக கூறி இருக்கும் குற்றச்சாட்டுக்கு பிறகே ஆசிரமம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

    இந்த ஆசிரமத்தில் இருந்து ஜாபருல்லா என்கிற பெண் மாயமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆசிரமத்தில் சேர்த்துவிடப்பட்ட ஜாபருல்லா பெங்களூரில் இருப்பதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    ஆனால் பெங்களூரிலும் அவர் இல்லை என்பதும் இவரைப்போல சுமார் 50 பேர் வரையில் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவும் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டு நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக இன்னொரு வீடும் சித்ரவதை கூடமாக செயல்பட்டு வந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    தமிழகம்-புதுவை எல்லையையொட்டிய பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் அன்பு ஜோதி ஆசிரமத்தின் இன்னொரு கிளை போல இந்த இல்லம் செயல்பட்டு வந்துள்ளது.

    இதுபற்றி தகவல் கிடைத்தும் அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 12 பெண்கள் உள்பட 25 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரையும் போலீசாருடன் இணைந்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் மீட்டனர்.

    அன்புஜோதி ஆசிரமத்தில் சிறைவைத்து சித்ரவதை செய்யப்பட்டவர்களை போன்றே இந்த வீட்டில் இருந்தவர்களும் சித்ரவதைக்குள்ளானது போன்ற தோற்றத்தில் உடல் மெலிந்து காணப்பட்டனர்.

    இதையடுத்து மீட்கப்பட்ட 25 பேரும் உடனடியாக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து சகல வசதிகளுடன் கூடிய அரசு காப்பகங்களில் ஆதரவற்றோர் அனைவரையும் சேர்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    அன்புஜோதி ஆசிரமத்தில் குரங்குகளை ஏவி விட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டதும், போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சின்ன முதலியார் சாவடியில் உள்ள வீட்டிலும் அதே போன்று பெண்கள் பாலியல் தொல்லைக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதத்தில் ஆதரவற்ற ஆசிரம பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.

    அன்புஜோதி ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமலேயே செயல்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் சமூகநலத்துறையை சேர்ந்த அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆசிரமத்தில் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டதே அங்கு முறைகேடுகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் நடைபெற காரணமாக அமைந்துள்ளது.

    இதுபற்றி உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடைபெற்றுள்ள அத்துமீறல்கள் தொடர்பாக முதலில் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

    இந்த ஆசிரமத்தில் இருந்து மாயமான ஜாபருல்லாவை மீட்டு தரக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தான் அந்த பெண்ணின் உறவினர்கள் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.

    இதன்பிறகே போலீசார் தலையிட்டு ஜாபருல்லாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜாபருல்லா பெங்களூர் ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர் அங்கும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஜாபருல்லா எங்கே? என்கிற கேள்வி பலமாகவே எழுந்துள்ளது. இவரைப்போல மாயமான 50 பேரும் எங்கிருக்கிறார்கள்? என்பதும் மர்மமாகவே உள்ளது.

    இதனால் அடுத்தடுத்து நடத்தப்படும் விசாரணையில் அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×