என் மலர்
கடலூர்
- பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த எம். புதூர் பகுதியில் செம்மண் குவாரிக்கு லை அமைப்பதற்காக தனியார் கம்பெனி ஊழியர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூங்கொடி சம்பந்தப்பட்ட ஊழியரிடம் சென்று கேட்டார். அப்போது பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் தனியார் கம்பெனி மேலாளர் டெல்லி பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
- அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த பி. என்.பாளையத்தை சேர்ந்தவர் கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கீதா கேட்டபோது முத்துக்குமரன் மனைவி மங்கைக்கும், கீதா தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் மங்கை மற்றும் கீதா ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் மங்கை கொடுத்த புகாரின் பேரில் கீதா, ராஜா, அசலாம்பாள், ராதா ஆகியோர் மீதும், கீதா கொடுத்த புகாரின் பேரில் மங்கை மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
- பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது
கடலூர்
புவனகிரி அடுத்த அழிச்சிகுடி கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது மர்ம நபர்கள் நேற்று இரவு, கொடிக்கம்பத்திலிருந்து பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த பா.ம.க.வினர் கொடிக்கம்பம் அருகில் திரண்டனர். தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு எரிந்த நிலையில் இருந்த பா.ம.க. கொடியை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், இது தொடர்பாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் புவனகிரி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் புவனகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதே இடத்தில் பா.ம.க. கொடி அறுத்து எரியப்பட்டது. இது தொடர்பான வழக்கும் புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதே போல மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பா.ம.க.வினரிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல புவனகிரி சித்தேரியில் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கொடி அறுத்து எரிந்துள்ளனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் நற்பணி மன்ற பேனரும் கிழிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. கொடியை எரித்த அதே மர்ம நபர்கள் இந்த செயலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா.
- மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா. இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 17 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் மானா சந்து அருகே இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி காலை 10 மணியளவில் சிதம்பரம் பகுதியில் ஜெயசந்திரன் ராஜா தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரது தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவரை தாக்கியவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். இது மட்டுமின்றி சிதம்பரம் விருத்தாசலம் புதுக்கோட்டை கும்பகோணம் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஜெயசந்திரன் ராஜா தாக்கப்பட்டாரா அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி யாரையாவது ஏமாற்றினாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயசந்திரன் ராஜாவை தாக்கியது கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கல்லூரி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கல்லூரி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
- சிவராமன், இவரது மனைவி ஆஷா என்கிற அபிராமி (27), இவர்களுக்கு யுகஸ்ரீ (7) என்கிற மகள் உள்ளார்.
- உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வருவதாக கூறி மகளுடன் சென்ற அபிராமி வீடு திரும்பவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன், இவரது மனைவி ஆஷா என்கிற அபிராமி (27), இவர்களுக்கு யுகஸ்ரீ (7) என்கிற மகள் உள்ளார்.
இவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி டைலரிங் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 4-ந்தேதி சொந்த ஊரான பைத்தாம்பாடிக்கு வந்தனர். உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வருவதாக கூறி மகளுடன் சென்ற அபிராமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் சிவராமன் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்
- சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என கூறியுள்ளார்.
- தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மாலா என்கிற பத்மினி (வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த அல்லி (வயது 35) என்ற பெண்ணிடம் தீபாவளி சீட்டு பிடித்து வருகின்றேன். என்னிடம் சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அல்லி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பத்மினி என்கிற மாலாவிடம் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.
இந்த நிலையில் பணம் கட்டிய பெண்கள் தங்கள் பணத்தை மாலா என்கிற பத்மினியிடம் கேட்டு வந்தனர். இதற்கு பத்மினி சரியான முறையில் பதில் அளிக்காமல் பணம் தராமல் ஏமாற்றிக் வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏமாந்த பெண்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி மற்றும் போலீசார் புதுப்பாளையம் பகுதியில் இருந்த பத்மினி என்கிற மாலாவை அதிரடியாக கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கின்றன.
- பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.
கடலூர்:
கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது சாலையின் இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தும், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றியும் அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகள் இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகளை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்வதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் 43 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக இடிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விடிய விடிய காத்திருந்தனர். மேலும் ஏதேனும் வீடுகள் இடிக்கப்பட உள்ளதா? என பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தற்போது முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் 43 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது போல் எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு எங்கள் வீடுகளை இடிப்பதற்கு அனுமதிப்போம். இதற்கான நடவடிக்கை காலதாமதம் ஆனால் தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஆகையால் மாவட்ட நிர்வாகம் எங்களது அடிப்படை கோரிக்கையான மாற்று குடியிருப்பை உடனடியாக அதற்கான சான்று வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் குறள் போல நுகர்வின்றி எந்த ஒரு மனிதனுடைய வாழ்வும் அமையாது.
- விழிப்புடனும், விதிமுறைகளினை பின்பற்றி யும் வாங்கிட உறுதி கொள்ள வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலமாக கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.இவ்விழாவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கி பேசியதாவது:-
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது நுகர்வு " நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் குறள் போல நுகர்வின்றி எந்த ஒரு மனிதனுடைய வாழ்வும் அமையாது. ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்களுக்குத் தேவையானவற்றை விலைக் கொடுத்து, பெற்று அனுபவிப்பதே "நுகர்வு" ஆகும். அப்படிப்பட்ட நுகர்வைச் சந்திக்கும் எல்லா மனிதருமே நுகர்வோர் ஆகிறார்.சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துபவர் நுகர்வோர் என வரைமுறை செய்யப் படுகிறார். நுகர்வு செயல்பாடு என்பது அதைச் சார்ந்தவர், விற்பனையாளர் மற்றும் பொருளைச் சார்ந்திருக்கிறது. இப்புதிய சட்டத்தில் 3 புதிய பிரிவுகள் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்து அதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அது உற்பத்தியாளரின் பொறுப்பாகும். நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது. சமரச மையமும் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். வீடு வாங்குவது, வீடு கட்டுவது , தொலைத் தொடர்பு சேவைகள், ஆன்லைன் மூலம்வாங்கும் பொருட்கள் , டெலி சாப்பிங், நேரடி விற்பனை, மல்டி லெவல் மார்க்கெட்டிங் என அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும். பாதுகாப்பு உரிமை, தேந்தெடுக்கும் உரிமை, தகவல் பெறும் உரிமை, முறையீட்டு உரிமை, நிவாரணம் பெறும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, அடிப்படை தேவைக்கான உரிமை போன்ற உரிமைகள் சட்டபடி வழங்கப்பட்டாலும் அதை நாம் விழிப்போடு பயன்படுத்த வேண்டும்.
நுகர்வோர்கள் குறைகளை தீர்க்க அரசின் சார்பில் நுகர்வோர் சேவை மையம் சென்னையில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 மாதத்திற்கு ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகளிடம் நுகர்வோர் நலன் சார்ந்த குறைபாடுகள் கேட்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் மன்றங்களின் நோக்கம், இளைஞர்களி டையே நுகர்வோர் உரிமைகள் குறித்த அறிவையும், திறமைகளையும் உருவாக்குவது. பொருட்களின் தரக் கட்டுப்பாடு விதிகள் மற்றும் சந்தையறிவு பற்றி கற்றுக் கொடுப்பது நுகர்வோர் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்டங்களைப் பயிற்றுவிப்பது. சட்ட விரோதமான வணிக முறைகளால் நுகர்வோர் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு வளர்ப்பது. நிலைத்த தன்மை வாய்ந்த நுகர்வு முறைகளை பயிற்றுவிப்பதும் அவற்றை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இளைஞர்களிடையே அறிவார்ந்த வாங்கும் திறனை மேம்படுத்துவது. இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் நுகர்வோர்களே ஆவார். எனவே ஒவ்வொருவரும் பொருட்கள் வாங்கும் போது விழிப்புடனும், விதிமுறைகளினை பின்பற்றி யும் வாங்கிட உறுதி கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உதயகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் நந்தகுமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர் கைலாஷ்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் ராஜசேகரன் மற்றும் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.
- அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.
கடலூர்:
வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். உச்சிமேடு கிராமத்தில் தோட்டக்கலை துறைச் சார்பாக அமைக்கப் பட்டுள்ள வெண்டை வய லினை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்து, உச்சிமேடு கிராம விவசாயிகளுடன் கலை ஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.
கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான், விதைதளை, வரப்புபயிர், உள்ளிட்டவை மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், உணவு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கீழ் கோனோவீடர், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் சூரியஒளி பொறி மற்றும் உளுந்து விதைகள், தார்பாலின் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மதலப்பட்டு ஊராட்சி வில்லுபாளையம் பகுதி யில் வேளாண்மை துறையின் மூலம் சுமார் 50 ஏக்கர் அளவில் அமைக்கப் பட்டுள்ள உளுந்து வம்பன்-8 விதைப் பண்ணை வயலினை ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயி ஒருவர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையினை ஆய்வு செய்து, இத்திட்டத் தினை முறையாக பயன் படுத்தி மேன்மையடையும் வகையில் கலெக்டர் பால சுப்ரமணியம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி னார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயகுமார், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
- மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர்.
கடலூர்:
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.இதை நினைவு கூறும் வகையில் இன்று புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம், புனித எபிபெனி சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், மணவெளி அக்கினி எழுப்பு தல் தேவாலயத்திலும், ஆற்காடு லூத்தரன் திருச்ச பையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பங்கு தந்தை தலைமையில் இந்த சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
அப்போது கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர். அதேபோல் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயத்தில் மும்மணிநேர தியான ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்பட் டாம்பாக்கம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவையில் அறையப் பட்ட 3–-வது நாளில் ஏசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அன்று அதிகாலையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களி லும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
- சிவக்குமாருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லை.
- சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
கடலூர்:
புவனகிரி அடுத்த வடக்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவருக்கும் இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறிப்படுகிறது.
இந்த நிலையில் சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணை யை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.






