என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா பேசியபோது எடுத்த படம்
கடலூரில் வருகிற 12 -ந்தேதி கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர்:-
கடலூரில் மதச்சார்பற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.மு.க.மாநகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் மாதவன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமேனி, ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப்,ம.தி.மு.க. சேகர், தி.க எழிலேந்தி, ம.ம.க ரஹிம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2 முறை நிறைவேற்றியும், கவர்னர் ஒப்புதல் அளிக்காமலும், தமிழ்நாட்டுக்கு வந்தது முதல்கவர்னர் ரவியின் பேச்சுகள் தமிழ்நாட்டில் சமூக சலசலப்பையும் தேவையற்ற பதற்றங்களையும் உருவாக்கு ம் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெ ளியில் பேசி வருவதை கண்டித்தும் அனைத்து கட்சிகள் சார்பில் கடலூரில் வருகிற 12- ந்தேதி மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






