என் மலர்
கடலூர்
- வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது.
வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கீழணைக்கு ஜூன் மாதம் 18-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் படிப்படியாக கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் ஏரியில் திறக்கப்பட்டு தற்போது 45.10அடி தண்ணீர் உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வருகிற திங்கட்கிழமைக்குள் ஏரி முழு அளவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய பணிகள் நடைபெறாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
- நில உரிமையாளர்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தனர்.
- 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புவனகிரி தாலுகா வளையமாதேவி கீழ்பாதி, வளையமாதேவி மேல்பாதி மற்றும் 4 கிராமங்களின் வழியாக பரவனாறு செல்கிறது. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பணிக்காக பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தினரால் 6 கிராமங்களில் 304 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டேர் நிலங்கள் என்.எல்.சி.யிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஹெக்டேர் நிலங்களுக்கு தீர்வாணை பிறப்பிக்கப்பட்டு, நில உரிமையாளர்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தனர். இதனால் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உரிமையாளர்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 2006 முதல் 2013-ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்டிருந்த 104 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரும் 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, தற்போது ரூ.10 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதேபோல் கையகப்படுத்தப்பட்டுள்ள 83 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரும் 405 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஏக்கருக்கு 2.6 லட்சம் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, தற்போது ரூ.14 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 301 பேரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 77 ஹெக்டேருக்கு, ஏற்கனவே ஏக்கருக்கு ரூ.2.4 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு ரூ.6 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. அதாவது மொத்தமாக 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் அனைத்தும் நில உரிமையாளர்களை நேரில் அழைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே என்.எல்.சி.யில் 800 மெகாவாட் மின்உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்து, கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய கலெக்டரால் விவசாயிகளிடம் பரவனாறு பகுதியில் பயிர் சாகுபடி செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்டு மாதம் முதல் 1000 மெகாவாட் மின்உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. ஏற்கனவே எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது.
நிலக்கரி எடுக்க போதிய இடமில்லாததே அதற்கு காரணம். அதனால் தான் தற்போது பரவனாறு மாற்றுப்பாதை திட்ட பணி நடக்கிறது. அந்த ஆற்றுக்கு மாற்றுப்பாதை அமைக்க 30 ஹெக்டேர் இடம் தேவைப்படுகிறது. இந்த இடத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உயரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலத்தை கையகப்படுத்துவது குறித்து கடந்த வாரமும், நேற்றும் (அதாவது நேற்று முன்தினம்) விவசாயிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே விவசாயிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடு போக, கருணை தொகையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்படும் பயிர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 16.8.2023 முதல் 26.8.2023 வரை 10 நாட்கள் நில உரிமையாளர்களிடம் ஆவணங்கள் பெற்று, கருணைத்தொகை வழங்க சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரவனாறு மாற்றுப்பணி அமைக்கும் பணியின் போது வேளாண்மைப் பயிர்கள் சேதமடைந்தால் உரிய இழப்பீட்டுத் தொகை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கப்படும்.
கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய மாவட்ட கலெக்டரால், நில உரிமையாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கப்படும் பகுதியில் பணி மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தும் கேளாமல், நில உரிமையாளர்கள் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதேபோன்று கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்னரும், கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தை ஒப்படைக்காமல் தொடர்ந்து விவசாய பணிகள் செய்து வருகின்றனர். என்.எல்.சி. நிர்வாகமும் கருணை அடிப்படையில் விவசாயிகள் பயிர் செய்வதை கண்டு கொள்ளவில்லை. அப்போதே என்.எல்.சி. நிர்வாகம் பயிர் செய்ய விடாமல் தடுத்திருந்தால், தற்போது பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இருப்பினும் நில உரிமையாளர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பல்வேறு காலகட்டங்களிலும் தீர்த்து வைத்து, அவர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
- சரவணன் மற்றும் அவரது மனைவி தங்களது குழந்தைகளை பார்த்துவிட்டு இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தனர்.
- காரின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரை சேர்ந்தவர் சரவணன். (வயது 48). அ.தி.மு.க.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி சுதா பாலூர் சன்னியாசி பேட்டை ஊராட்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் குழந்தைகள் நெய்வேலியில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதன் காரணமாக சரவணன் மற்றும் அவரது மனைவி தங்களது குழந்தைகளை பார்த்துவிட்டு இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்க இரும்பு கதவு மூடி இருந்த நிலையில் மரக்கதவு உடைந்து திறந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து சரவணன் மற்றும் அவரது மனைவி உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் முழுவதும் சிதறி கிடந்தது. பின்னர் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைந்து இருந்தது.
மேலும் பீரோவில் இருந்த 3 1/4 தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 2.50 லட்சம் ஆகும். மேலும் காரின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இத்தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடவியில் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராயர் விருத்தாசலம் அருகே நாச்சியார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
- திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராயர் (வயது 42). இவர் விருத்தாசலம் அருகே நாச்சியார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை 5:30 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே ராயர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தோஷ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
- பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் இன்று காலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் மேல்புவனகிரி ராகவேந்திரா வீதியில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறு கீழே விழுந்த சந்தோஷ் மீது, டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பிளஸ்-1 மாணவன், உடல் நசுங்கி உயிரிழந்தான்.
இதனைக் கண்ட டிப்பர் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார், மாணவன் சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித ம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுபபிவைத்தனர். லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- சாலையில் ஓரமாக பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
பாகூர்:
கடலூரில் இருந்து கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், ரெட்டி சாவடிக்கான ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.
இந்த ஆட்டோக்கள் பெரும்பாலும் முறையாக அரசு அனுமதி பெறாமல் வாய்மொழி உத்தரவில் சுமார் 100 வண்டிகள் இயக்கப்படுகிறது.
அதுபோல இன்று காலை கடலூரில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று கிருமாம்பாக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியகோயில் 4 முனை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையை பைக்கில் கடக்க முயன்ற குழந்தையுடன் வந்த பெண் மீது மோதியது.
மேலும் ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் வந்தவர்களும் சாலையைக் கடந்த பைக்கில் வந்தவர்களும் காயமடைந்தனர். அப்போது சாலையில் ஓரமாக பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
விபத்தில் கடலூரைச் சேர்ந்த செவிலியர் சுதா(41), அருள்(42), நாராயணன்(50), மற்றும் குழந்தை கல்லூரி மாணவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 6 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கு ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் முறையாக பராமரிக்கபடாததும், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் முக்கிய சந்திப்புக்களில் பணியில் ஈடுபடுவது கிடையாது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
- தொடக்கப்பள்ளி முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- எண்ணெய்ப்பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்கப்படுகிறது.
கடலூர்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரும் முகாமினை நெல்லி க்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டேஸ்வரம் நகராட்சி தொடக்கப்பள்ளி முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் மூலம் சமையல் எண்ணெய் பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரித்திட 2022-23 ஆம் ஆண்டு முதல் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான கன்றுகளை நடவு செய்யும் பொருட்டு எண்ணெய்ப்பனை சார்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் எண்ணெய்ப்பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்கப்படுகிறது. இத்தி ட்டத்தினை திருக்க ண்டேஸ்வரம் பகுதியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விவசாய நிலத்தில் எண்ணெய்ப்பனைக் கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்புகள் குறித்தும் மற்றும் குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அவ்வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகி ருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி , துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை அருண், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் ஆகியோர் உள்ளனர்.
- 35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நிலங்களை சமன் படுத்தும் பணி தொடக்கம்
- அறுவடைக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் நெற்பயிர்கள் அழிப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க மையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இன்று காலை சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இங்குள்ள விவசாய நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 1500 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. ஆனால் இன்று காலை சுமார் 450 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. தற்போது அங்கு பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்குகூட தயாராக இல்லாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பயிர்கள் அறுவடைக்கு பின் கால்வாய் வெட்ட வேண்டும். மேலும் கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினர்.
ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தகூடும் என்பதால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் தடுக்க நேற்று இரவு முதலே விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜீ. ஷியாவுல்ஹக் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் தலைமையிலான 600-க்கும் மேற்பட்ட போலீசார் வளையமாதேவியிலிருந்து சேத்தியாதோப்பு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலம் கையகப்படுத்துவதை அறிந்த விவசாய நிலத்தின் விவசாயிகள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாய நிலத்திற்கு அனுமதிக்காமல் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் பணம் உரிய முறையில் வழங்கவில்லை என்று அங்கு கூடியிருந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
சரியான முறையில் பணம் வழங்காமல் விவசாய நிலத்தை எந்தவித அறிவிப்புமின்றி காலை முதலே அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அளிக்கின்றனர் என்று அவர்கள் கூறினர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் நிலம் கையகப்படுத்துவது குறித்து கடந்த மாதமே நாங்கள் அறிவித்தோம் என்று கூறினர். இதனால் என்.எல்.சி அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்டு உரிய முறையில் இழப்பீடு பணம் பெறாத விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் இங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் பீச் அடிக்கும் எந்திரம், தீயணைப்பு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களுடன் இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் மேல்வளையமாதேவி பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.
- ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
- கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அதை தடுக்க தவறிய மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமையிலும் நகர செயலாளர் நாகராஜ், நகர துணை செயலாளர் பாக்கியம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் குவிந்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறினர்.
இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
- தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
- பொது மக்கள் மற்றும் இல்லத்தர சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கடலூர்:
இந்தியா முழுவதும் தொடர் கனமழை காரண மாக தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல இடங்களில் நகை பணம் கொள்ளை அடிப்பது போல் தற்போது விலை ஏற்றம் காரணமாக தக்காளியையும் கொள்ளை அடித்து விற்பனை செய்த சம்பவமும், அதன் மூலம் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையும் நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் தக்காளியின் விலை 140 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் கடை யின் மூலமாக 90 ரூபாய்க்கும் , அதன் பிறகு 60 ரூபாய்க்கும் தக்காளியை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும், இஞ்சியின் விலை 300 ரூபா ய்க்கும், சின்ன வெங்காயம் 160- க்கும் விலை உயர்ந்து விற்பனையாகி வந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை ரூ.75 முதல் ரூ.85-க்கும், இஞ்சியின் விலை ரூ.220-க்கும் விலை குறைந்து விற்பனையாகி வந்தன.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநி லங்களில் தொடர் மழை இருந்து வரும் நிலையில் தமிழகத்திலும் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மீண்டும் தக்கா ளியின் விலை கடலூரில் 95 ரூபாய்க்கும், இஞ்சியின் விலை 235 ரூபாய்க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கிலோ ஒன்றுக்கு தக்காளியின் விலை 20 ரூபாயும், இஞ்சி யின் விலை 15 ரூபாயும் மீண்டும் விலை உயர்ந்த காரணத்தினால் பொது மக்கள் மற்றும் இல்லத்தர சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எவ்வ ளவு உயர்ந்து, எவ்வளவு குறைந்து உள்ளது என்ப தனை கண்காணிக்கும் வகையில் மக்களின் மன நிலை மாறிய நிலையில் தற்போது அத்தி யாவசிய பொருட்களான அன்றாட பயன்படுத்தக் கூடிய தக்காளி, இஞ்சி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறி விலை களை பொதுமக்கள் தினந்தோறும் கண்காணித்து அதன் அடிப்படையில் கிலோ கணக்கில் வாங்காமல் தேவைக்கு மிக குறைந்த அளவில் வாங்கி செல்வதை யும் காணமுடிகிறது.
மேலும் சாதாரண தொழி லாளர்கள் வீடுகளில் இது போன்ற காய்கறிகள் பயன் படுத்தப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது. இதனை தொடர்ந்து காய்கறி கடை களில் வழக்கமான கூட்டம் இல்லாமல் குறைந்த அளவி லான பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்காமல் எண்ணிக்கை கணக்கில் வாங்குவது காண முடிந்தது. மேலும் தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- எருமை மாடு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது.
- எருமை மாட்டின் உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. இவர் வளர்த்து வந்த எருமை மாடு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது. இந்த மாட்டை, பழஞ்ச நல்லூரை சேர்ந்த பழனிவேல் பிடித்து வைத்திருப்பதாக தீபா காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார்.
ஆனால், பழனிவேலோ, தனது உறவினரிடம் அந்த எருமை மாட்டை வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாக கூறினார். இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.
அந்த எருமை மாட்டின் உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது.
உடனே போலீசார், அந்த எருமை மாடு யாருக்கு சொந்தம்? என்பதை நிரூபிக்க, கட்டி வைக்கப்பட்ட மாட்டை அவிழ்த்து விட்டு யாருடன் மாடு செல்கிறதோ அவர்களுக்குதான் மாடு சொந்தம் என பிரச்சினையை முடித்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி அந்த எருமை மாட்டை அவிழ்த்து விட்டனர். முதலில் அந்த மாடு இருவரிடமும் பாசம் காட்டியது. இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில் அந்த எருமை மாட்டை பழனிவேல் சைகை செய்து அழைத்தார். உடனே அவருடன் அந்த எருமை மாடு சென்றது. இதையறிந்த தீபா விரக்தி அடைந்து வீடு திரும்பினார்.
- 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
- 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர்:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதிகளில் உணவு, குடி நீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர், மனுவை பெற்றுகொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதி மாணவ ,மாணவிகள் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினரிடம் மாணவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையைத் தொ டர்ந்து மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர்.






