search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NLC Contract workers"

    • என்.எல்.சி.யில் 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன.
    • ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் நேற்று மாலை நெய்வேலி நகரத்தில் உள்ள நேரு சிலை அருகில் இருந்து என்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினா். பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் நேரு சிலை அருகில் அமர்ந்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தொழிற்சங்கத்தினர் கூறும்போது நேற்று இரவு 8 மணிக்குள் என்.எல்.சி. நிர்வாகம் நல்ல பதிலை கூறினால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வோம். இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.

    ஆனால் இரவு 8 மணியை கடந்தும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்தது. இதனால் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

    இது குறித்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகா் கூறும்போது, தொழிற் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி. நிர்வாகம் முன்வந்தால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கம் முடிவு செய்யும் என்றார்.

    இதையடுத்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் அந்தோணிராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. என்.எல்.சி.யில் 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன. ஆனால், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணிக்குள் முடிவு தெரியாவிட்டால் காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசார், மாவட்ட நிர்வாகம், என்.எல்.சி. நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    வேலைநிறுத்தம் தொடர்ந்தால் என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    • ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.
    • என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இங்கு பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நிறைவேற்றப்படாததால் இன்று (15-ந்தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    இது குறித்த சமாதான பேச்சுவார்த்தை கட லூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் (பொறுப்பு) பூமா தலைமை தாங்கினார். இதில் என்.எல்.சி. உதவி பொது மேலாளர் உமா மகேஸ்வரன், பயிற்சி துணை கலெக்டர் அபிநயா, நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது என்.எல்.சி. உயர் அதிகாரிகளிடம் பேசி இது குறித்து நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வேண்டும் என கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

    தங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (சனிக்கிழமை) இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும் போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.

    இன்று மாலை வரை அரசிடம் பேசி உத்தரவாதம் அளிக்காவிட்டால் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    பணிநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். சுரங்கம் 1ஏயில் பல ஆண்டு காலமாக பணியாற்றி வந்த சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    மேலும் பணிநாட்கள் 26 நாட்களுக்கு பதிலாக 15 நாட்கள் பணி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று என்.எல்.சி.சுரங்கம் 1ஏ முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் போராட்டம் நடத்த வந்தனர். பின்னர் 25 பேர் திடீரென்று வி‌ஷத்தை குடித்து கீழே மயங்கி விழுந்தனர்.

    உடனே அவர்களை மீட்டு என்.எல்.சி.ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்தது. அவர்களை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் 700 பேர் சுரங்கம் 1ஏ பகுதிக்கு வந்தனர். பின்பு அவர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

    வேலைநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்தும், பணிமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே இடத்துக்கு பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே இன்று மாலை மாவட்ட கலெக்டர் தண்டபாணி என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். #Tamilnews
    ×