என் மலர்tooltip icon

    கடலூர்

    • வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற வுள்ளது.
    • அனைத்து இளைஞர் களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட வுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-24-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்ட மிடப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12 ந்தேதி (சனிக்கிழமை) வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வள்ளலார் ஞான சபை எதிரில், வடலூரில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற வுள்ளது. 

    இம்முகாமில் மகளிர் திட்டம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர் களுக்கு, மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர் களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட வுள்ளது. கடலூர் மாவட்ட த்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவ னகிரி, பரங்கி பேட்டை, கீரப்பாளையம், கம்மாபுரம் மற்றும் விருத்தா சலம் உள்ள ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். 

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படங்கள், சுய விலாச மிட்ட அஞ்சல் உறை களுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம். மேலும், இதர தகவல்களுக்கு மகளிர் திட்ட அலுவலகம், 3வது குறுக்கு தெரு, சீத்தாராமன் நகர், புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலை யங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு காலியாக உள்ள தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய இணையதளத்தினை பார்த்து கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும். தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் பொருட்டு கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனத்துடன் இணைந்து உயர்ரக தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் சில இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவ னங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகை யுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதியில் போதை விற்பனை செய்வதை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகர எல்லையில் வீடு ஒன்றை குடோனாக வைத்து போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சு ரேஷ்முருகன் மற்றும் போலீசார் சிதம்பரம் 1-வது வார்டு சிங்காரத்தோப்பு பகுதியில் கண்ணுசாமி நகரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 மூட்டைகளில் 277 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரொக்கம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம் அருகே உள்ள சி.வீரசோழகன் டி.மண்டபம் துணிச்சிலமேடு பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் அருண்குமார் (34), சிதம்பரம் அருகே ஓமக்குளம் ஜமால்நகரைச் சேர்ந்த முகமது முஸ்தபா அப்பாஸ்அலி (42), புவனகிரி அருகே உள்ள வடக்குஆதிவராகநத்தம் வடக்கு மடவிளாக தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சீனுவாசன் (35), சிதம்பரம் கொத்தவால் தெருவைச் சேர்ந்த ஜிஜந்தர்சிங் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் கர்நாடகவில் இருந்து போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    • இருசக்கர வாகனம் மோதியதில் லட்சுமணன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தொழிலாளி லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை சிறுகிராமத்தை சேர்ந்தவர் லட்சு மணன் (26) கூலித்தொழிலாளி .இவர் நேற்று இரவு 8மணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் பண்ருட்டி அடுத்த சேமகோட்டை எஸ்.ஏரிபாளையம் கேட் சேலம் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் லட்சுமணன்தலையில் பலத்த அடிபட்டுசம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தொழிலாளி லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலர் எவ்வளவோ முயற்சி செய்தும் தாய் குரங்கிடம் இருந்து குட்டி குரங்கை பிரிக்க முடியவில்லை.
    • குரங்கின் பாசப்போராட்டம் பார்க்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் வசித்து வருகிறது. இங்கு குரங்குகள் கூட்டமாக நடராஜர் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள சிவகங்கை குளம், மேல வீதி, காசுக்கடை தெரு பகுதிகளில் விளையாடி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் காசுக்கடை தெரு பகுதியில் குட்டி குரங்கு ஒன்று இறந்தது. ஆனால் இறந்த குட்டி குரங்கை தாய் குரங்கு விடாமல் அரவணைத்து கொண்டு அப்பகுதியில் சுற்றி வருகிறது.

    மேலும் கூட்டமாக சேர்ந்து கொண்டு பாசப்போராட்டம் நடத்தி வருகிறது. குட்டி குரங்கு இறந்து துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் குட்டி குரங்கு உயிருடன் இருப்பதாக எண்ணிக் கொண்டு பாசத்துடன் குட்டி குரங்கை பராமரித்து வரும் தாய் குரங்கின் பாசம் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது.

    குட்டிக்கு உயிர் கொடுக்கும் எண்ணத்துடன் வாய் வைத்து ஊதுவதும், அதன் மீது காது வைத்து பார்ப்பதும், பிறகு தூக்கி கொண்டு ஓடுவதுமாக இருந்து வருகிறது. பலர் எவ்வளவோ முயற்சி செய்தும் தாய் குரங்கிடம் இருந்து குட்டி குரங்கை பிரிக்க முடியவில்லை.

    இந்த குரங்கின் பாசப்போராட்டம் பார்க்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • தங்கவேல் தனியார் மருத்துவமனையில் ஆம்பூலன்ஸ் டிரைவராக பணி செய்து வந்தார்.
    • அண்ணாமலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தங்கவேல் (வயது 39). இவரது மனைவி சாரதா (30), மகன் சாய் தர்ஷன் (9), மகள் ஆத்விகா (6) ஆகியோருடன் திருப்பூரில் தங்கியுளளார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்பூலன்ஸ் டிரைவராக பணி செய்து வந்தார்.

    இவர் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான குறிஞ்சிப்பாடிக்கு வந்து, மீண்டும் திருப்பூர் நோக்கி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே சென்று கொண்டி ருந்தது. ஏ.சித்தூர் அரசு உயர்நிலை பள்ளி அருகே சென்ற போது பெரம்பலூரி லிருந்து கடலூர் நோக்கி வந்த கார், தங்கவேலு சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆம்பூலன்ஸ் டிரைவர் தங்கவேலு பலியானார். அவருடன் வந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

    நேருக்குநேர் மோதிய காரில் வந்த 5 பேரும் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் விபத்தில் படுகாயமடைந்தவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம், பொம்மணப்பாடியை சேர்ந்த அண்ணாமலை (76) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விருத்தாசலம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    • மாடுகளையும் சேர்த்துபார்த்து க்கொ ள்ளுமாறு கூறிவிட்டு வீடு திரும்பினார்.
    • மாடுகளின் நுனி காது அறுக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அபூர்வம் அதிர்ச்சியடைந்து கூச்சலி ட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த தச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வம் (வயது 65). இவர் 4 பசு மாடுகள் வைத்துள்ளார். இந்த மாடுகளை அங்குள்ள கரம்பு பகுதியில் மேய்ப்பது வழக்கம். அதுபோல நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். இதே போல அதே கிராமத்தை சேர்ந்த மற்றொருவரும் 3 மாடுகளை மேய்க்க வந்தார். அவரிடம் தனது 4 மாடு களை ஒப்படை த்த அபூர்வ ம், முக்கிய பணி உள்ளது, எனது, மாடுகளையும் சேர்த்துபார்த்து க்கொ ள்ளுமாறு கூறிவிட்டு வீடு திரும்பினார்.

    இதையடுத்து நேற்று மாலை 7 மாடுகளும் அவரவர் உரிமையாளர் வீடுகளுக்கு திரும்பி வந்தது. மாடுகளின் நுனி காது அறுக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அபூர்வம் அதிர்ச்சியடைந்து கூச்சலி ட்டார். பிறகு பக்கத்து வீட்டுக்காரரின் மாடுகளை பார்த்தபோது, அங்கிருந்த 3 மாடுகளின் நுனி காதுகளும் அறுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக புவனகிரி போலீசாரிடம் அபூர்வம் புகார் அளித்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மேய்ச்ச லுக்கு சென்ற மாடுகள் கீழமணக்குடி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், பருத்தி வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை மேய்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த நில உரிமையாளர்களான விவசாயிகள், 7 மாடுகளின் நுனி காதுகளை அறுத்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான சண்முகம் (17), வீரமுத்து (45), பழனிச்சாமி (63), லட்சுமணன் (52) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தச்சுக்காடு கிராமத்தை சேர்ந்த மாடுகள் அடிக்கடி விவசாயப் பயிர்களை மேய்வதாகவும், இது தொட ர்பாக கிராம பஞ்சாயத்தில் மாடுகளின் உரிமையா ளர்களுக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டு ளளதாகவும் கூறினார்கள். மேலும், அடுத்தமுறை மாடுகள் மேய்ந்தால் அதன் நுனி காதுகள் அறுக்கப்படும் என பஞ்சாயத்தில் எச்சரித்து அனுப்பட்டது. இதனால் எங்கள் வயல்க ளில் மேய்ந்த மாடுகளின் நுனி காதுகளை அறுத்ததாக விவசாயிகள் கூறினார்கள். இதையடுத்து 4 பேரையும் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    அவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மத்திய தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு நாளை கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி நாளை சென்னை தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த இரு முடிவுகளையும் பொறுத்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இருதரப்பினரும் தெரிவித்தனர். இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகம் எங்களது புதிய கோரிக்கைகளை நிறைவேற்ற தயங்குகிறது. எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    • கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கல்விக் கடன் திட்டம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • தகுதியுள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் சமண மதத்தினர் ஆகிய பிரிவினர்களுக்கு மரபு வழி கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரசாத் என்ற மரபு உரிமை கடன் திட்டம் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு, தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம், வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் , திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

    விண்ணப்பப் படிவங்களை கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம், கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை , வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்ட உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கடலூர் அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு பண்டக சாலை வளாகம், வெள்ளிக் கடற்கரை சாலை, கடலூர் . என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட பொரு ளாதார கடனுதவி திட்டத்தினை தகுதியுள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருளாதார நிலையினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் கட்டு வதற்காக மண் எடுத்த போது மண்ணுக்கடியில் 3 கற்சிற்பங்கள் கிடைத்தது.
    • 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த பைத்தாம்பாடி சத்திரம் ஊரில் தென்பெண்ணை கரையோரம் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மொச காத்தம்மன் கோவில் கட்டு வதற்காக மண் எடுத்த போது மண்ணுக்கடியில் 3 கற்சிற்பங்கள் கிடைத்தது. இது குறித்து விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதுகலை வரலாறு படிக்கின்ற மாண வர்கள் குமரகுரு மற்றும் சூர்யா ஆகியோர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசி ரியர் ரமேஷ் மற்றும் தொல்லியல் மற்றும் முனை வர் பட்டம் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோ ருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து வந்த ஆய்வார்கள் இம்மானுவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் அங்கே இருந்த கற்சிற்பத்தை ஆய்வு செய்து அவை 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :-

    சப்தமாதர்கள் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்தி ராணி, சாமுண்டி, போன்ற வராவார், சப்தமாதர்க ளுக்கு தொடக்க காலத் தில் படிமங்கள் ஏதும் உரு வாக்கப்படாமல் 7 கற்களை பிரதிஷ்டை செய்து கடவுளாக எண்ணி வணங்கி னார். முற்கால சோழர்கள் தாங்கள் எடுத்த சிவாலயங்களில் அஷ்ட பரிவார தெய்வங்கள் என்று பெயரிட்டு சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், மூத்ததேவி, சண்டிகேஸ்வரர், பைரவர் என அனைவருக்கும் திரு உருவம் செய்து தேவ கோட்டத்தில் (கருவரை சுவற்றில்) அமைத்தனர், சோழர்கள் தாங்கள் எடுத்த கோவில்களில் அனைத்தி லும் சப்தமாதர்களுக்கு திரு மேனி எடுத்து சிறப்பித்தனர்.

    பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் கண்டெடுத்த சப்தமாதர்கள் மகேஷ்வரி, பிராமி, மற்றொரு சிற்பம் முகம் முற்றுபெறாத நிலை யில் அடையாளம் காண முடியாமல் உள்ளது. மகேஷ்வரி, பிராமி சிற்பங்கள் அவரவர்களுக்கு ரிய ஆயுதங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சி யளிக்கிறார்கள்.கண்டெ டுத்த சிற்பங்கள் கை, முகம் போன்றவை சிறிது சிதைந்த நிலையில் உள்ளது. இங்கே இருக்கின்ற சிற்பங்களை பார்க்கும் போது இப்பகுதி யில் சப்தமாதர்கள் கோயில் இருந்திருக்கலாம் என அறியமுடிகிறது. கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கிக் கொண்டி ருக்கும் இந்த வரலாற்று கலைச்செல்வங் களை பாதுகாப்பது நம் கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து, மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தினர்.
    • கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்து மூதாட்டி கவுசல்யாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை மூதாட்டி ஒருவர் வந்திருந்தார்.

    இவர் வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து, மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்த கவுசல்யா (வயது 70) என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் இருந்த காரை ஒரு நபர் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக அந்த நபரிடம் பலமுறை கேட்டும் இதுவரை திருப்பி தராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக போலீசாரிடம் மூதாட்டி கூறினார்.

    இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என மூதாட்டியிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்து மூதாட்டி கவுசல்யாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மின்மாற்றி பழுதடைந்தால் அதனை மாற்றி தருமாறு விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • அதிகாரிகள் இதுவரை டிரான்ஸ்பார்மர் வெடித்த தாக தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறு கிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மூலமாக 50-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் மின்மோட்டார் களுக்கு மின்சாரம் செல்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி பழுத டைந்தது. இதையடுத்து மின்மாற்றி பழுதடைந்தால் அதனை மாற்றி தருமாறு விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். 2மாத காலமாகி யும் மின்மாற்றி சீரமைக்கப் படாததால் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயி கள் வேதனை தெரி விக்கின்றனர். பழுத டைந்த மின்மாற்றியை சீர மைத்து, கருகி வரும் பயிர்களை காப்பாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது பணப்பாக்கம் கிராம விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து விவசாயி சேஷாயிலு கூறியதாவது:-. ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருக்கிறேன்.தனது நிலத்தின் மின்மோட்டா ருக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகியும் புதிய டிரான்ஸ் பார்மர் வைக்கப்படாததால் பயிர்கள் காய்ந்து கருகி உள்ளது இதே மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து 2 செங்கல் சூளைக்கு மின்சாரம் சென்று கொண்டிருந்தது. தற்போது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாமல் வேறு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு விவசாயிகளை நிற்கதியில் விட்டு விட்டனர். பண்ருட்டி மின்துறை அதிகாரிகளோ சீனியாரிட்டி அடிப்படை யில் தான் டிரான்ஸ்பார்மர் வரும் என்று சொன்னார்கள். சென்னை மின்னக தொலைபேசியில் புகார் செய்த போது கடலூரில் இருந்து தொடர்புக்கு வந்த அதிகாரிகள் இதுவரை டிரான்ஸ்பார்மர் வெடித்த தாக தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறு கிறார்கள். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    ×