search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Participation"

    • பெட்டகம், குழந்தை வளர்ப்பு கையேடு வழங்கினார்
    • அளவான குடும்பத்திற்கு 2 குழந்தைகளே போதுமானது.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்ட முன்னெடுப்பாகவும் மற்றும் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் தாய்ப்பால் வார விழாவில் பிறந்த பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகம், மரக்கன்றுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்து கையேட்டினையும் வழங்கினார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 'பெண் குழந்தைகளை காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 1.8.2023 முதல் 7.8.2023 வரை தாய்ப்பால் வார விழாவில் பிறந்த 25 பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் தாய்மார்களை பாராட்டி குழந்தை நலப் பெட்டகம், மரக்கன்றுகள் மற்றும் பச்சிளம் சிசு வளர்ப்பு குறித்து கையேடுகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் காலத்திற்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் தவறாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அளவான குடும்பத்திற்கு 2 குழந்தைகளே போதுமானது. இதனை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) டாக்டர் சாரா செலின்பால, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி , அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் பாஸ்கர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை, மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை, மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் வழங்கினார். தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தன்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி ஆகிய 7 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 32,970 பேர் வசித்து வருகின்றனர்.

    இங்கு மீன்பிடி தடைகாலம் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜீன் 14-ந்தேதி வரை கிழக்கு பகுதியில் மீன் பிடிக்க தடைக்காலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் தலா ரூ.5000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர்களது கோரி க்கைகளை உடனடி யாக நிறைவேற்று வதற்கு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவி மேனகா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுடலை முத்து முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாள ராக கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் சுத்தமல்லி கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் விதமாக பாலித்தீன் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, கடைகளுக்கு செல்லும்ேபாது துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். அனைத்து வீடுகளிலும் உறிஞ்சி குழிகளை அமைக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து சேகரிப்பாள ர்களிடம் வழங்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து துணி பையை பயன்படுத்துவோம். நெகிழியை தவிர்ப்போம் என்று உறுதிமொழி எடுக்க ப்பட்டது. அதன்பின்னர் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் கார்த்திகேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின், கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அனிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராமையன்பட்டி

    பாளை யூனியன் ராமை யன்பட்டி பஞ்சாயத்து கம்மாளன்குளத்தில் பஞ்சாயத்து தலைவர் டேவிட் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் துணைத்தலைவர் செல்வக்கு மார், 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, குடிநீர், சுகாதாரத்தை பேணி காப்பது, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்துவது என்பத உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரி அமைக்கும் பணியை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • இந்த கூட்டத்தில் துணி நூல் ஆணையர்-கலெக்டர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறிய ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தி தொடர்பான வாய்ப்புகள் குறித்தும் ஜவுளி தொழில் முனை வோர்களிடையே விழிப்பு ணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார்.

    இதில் துணி நூல் ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கி பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அருகில் இ.குமாரலிங்காபுரத்தில் 1,200 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. தமிழ்நாடு அரசு துணி நூல் துறையின் மூலம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையை வளப்படுத்தும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்கான ஆலோச னைகளை தொழில்முனை வோர்கள் வழங்கலாம்.தமிழ்நாட்டை ஜவுளி துறையில் முக்கியமாக தொழில்நுட்ப ஜவுளித்துறையை வளர்ச்சி அடைய செய்திட கடந்த மாதம் சென்னையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட International Technical Textile - Conference இதற்கு ஒரு உதாரணமாகும்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உகந்த இடமாக இருப்ப தற்காகவும், அதிக அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், ஜவுளி உற்பத்தியை பெருக்கி, உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக வும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் துணி நூல் இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ், மண்டல துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் கிராம- நகர சபை கூட்டம் நடந்தது.
    • இதில் கலெக்டர், மேயர் பங்கேற்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ளாட்சி தினம் இன்று கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் இன்று கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன.

    இங்கு குடிநீர் வினி யோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டி டங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எடுத்துக் கூறி நிவாரணம் பெற இயலும். இதில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

    கிராம- நகர சபை கூட்டங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மட்டுமின்றி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளலூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அனீஸ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மாநகர உள்ளாட்சி களிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆரப்பாளையம் மந்தை (வார்டு-57), சுந்தரராஜபுரம் ஜே.ஆர்.ரோடு (வார்டு-75), திடீர் நகர் சமுதாயக்கூடம் (வார்டு-76) ஆகிய பகுதி களில் நடத்தப்பட்ட நகர சபை கூட்டங்களில் மேயர் இந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இங்கு பொதுமக்களின் கோரிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

    தமிழகத்தில் குடியரசு தினம் (ஜனவரி 26-ம் தேதி), உழைப்பாளர் தினம் (மே 1-ம் தேதி), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15-ம் தேதி), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2-ம் தேதி) ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் மனநலம் சார்ந்த கருத்தரங்கம் நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.

    ராமநாதபுரம்

    சர்வதேச பெண்கள் அமைப்பான ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம் நேஷனல் அகாடமி பள்ளி அரங்கத்தில் சங்கத் தலைவி கவிதா செந்தில்குமார் தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார்.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.

    திட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசி னார். மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து டாக்டர் கனகப்பிரியா, மனநலம் குறித்த ஆலோ சனைகளை டாக்டர் ரம்ய பிரியா, ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வை டாக்டர் ராசிகா, பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பருவ மாற்றங்கள் குறித்து டாக்டர் ஆயிஷதுல் நஸிதா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் ராயல்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு ஆகிய சங்கங்களும் கலந்து கொண்டு தங்களுடைய பங்களிப்பை அளித்தனர்.

    ரோட்டரி சங்க தலைவர் பார்த்திபன், லட்சுமிவர்தினி ஆகியோர் கலந்து கொண்ட னர். மாவட்ட ஐ.எஸ்.ஓ. கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க செயலர் ஹரிதா நன்றி கூறினார்.இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள 12 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2,100 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×