என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • போத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தபோது சிக்கினர்

    குனியமுத்தூர்,

    கோவையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கல்வி மற்றும் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோவையில் வந்து தங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் கோவையில் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கும்பலை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    கல்லூரிகளில் போதை தொடர்பான விழிப்புணர்வை போலீசார் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே சிலர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து போத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த போத்தனூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இம்ரான்கான் (வயது 26), எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த முகமது யூசுப் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1041 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 5 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவை,

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடப்பது வழக்கம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

    இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. இதனை யொட்டி கோவையில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் காலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    அதிகாலை முதலே பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றதை காண முடிந்தது. கோவை பெரியகடை வீதியில் கோனியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடை இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டது.

    5 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது.

    அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கோனியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் 5 மணிக்கே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அம்மனை மனமுருகி தரிசித்து சென்றனர்.

    இன்று இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் முதல் வெள்ளிக்கிழமையான இன்று கோனியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். அத்துடன் கோவிலில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கோவை-அவினாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலும் ஆடி வெள்ளிக்கிழமையான இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தண்டு மாரியம்மனை தரிசித்து சென்றனர்.

    இதேபோல் ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் உள்ள காமாட்சி அம்மன், அன்னபூர்னேஸ்வரி அம்பாள் கோவிலிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.

    வைசியாள் வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்னம், தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் மற்றும் காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

    இதேபோல் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றது.

    • மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துணை சூப்பிரண்டு தலைமையில் கோவையில் தனி குழு அமைத்து விசாரித்தனர்.
    • தலைமறைவான ரமேஷ் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார்.

    கோவை:

    கோவை சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது30). இவர் பீளமேட்டில் யு.டி.எஸ்., என்ற நிதி நிறுவனத்தை கடந்த 2012 ம் ஆண்டு தொடங்கினார்.

    கோவையில் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனத்தை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் கிளைகளாக விரிவுபடுத்தினார்.

    பின் அவர் நிறுவனம் சார்பில், 4 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதனை நம்பி அந்த நிதி நிறுவனத்தில், 76,597 பேர் ரூ.1,300 கோடி முதலீடு செய்தனர்.

    இந்தநிலையில் மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர் மோசடி செய்தார். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துணை சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் கோவையில் தனி குழு அமைத்து விசாரித்தனர்.

    தலைமறைவான ரமேஷ் கடந்த, ஜூன் மாதம் 6-ந்தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவரது நிறுவனத்தின், 36 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில், 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 16 லட்சம் மீட்கப்பட்டது.

    மேலும் தமிழகம் முழுவதும், யு.டி.எஸ்., நிறுவனம் மற்றும் ரமேசுக்கு சொந்தமான, 10 இடங்களில் உள்ள வீடு, நிலம் உட்பட ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்த போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷின் அம்மா லட்சுமி, அப்பா கோவிந்தசாமி மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் ஆகிய 3பேரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • G20 பிரதிநிதிகளின் 2 நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது.
    • முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து கலந்துரையாட உள்ளனர்.

    கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 சந்திப்புகளின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு (Science 20 Meet) கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள், சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் சத்குரு உடனான சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர்.

    S20 குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் பசுமை எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகத்துடன் அறிவியலை இணைப்பது போன்ற தலைப்புகளில் ஏற்கனவே மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷாவில் நடக்கும் கூட்டத்தில் முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து அதுகுறித்து கலந்துரையாட உள்ளனர்.

    ஈஷாவில் S20 மாநாடு நடக்க இருப்பது தொடர்பாக சத்குரு கூறுகையில், "G20 கூட்டங்கள் ஆன்மீக மையம் உட்பட பல்வேறு விதமான இடங்களில் நடத்தப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. பாரதத்தை உணர்வதற்கு இது சிறந்த வழியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

    G20 பிரதிநிதிகளின் 2 நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது. இந்த அமர்வை ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும், விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மையத்தின் (Sadhguru Center for a Conscious planet) இயக்குநருமான டாக்டர் பாலசுப்பிரமணியம் நடத்த உள்ளார்.

    மேலும், சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களான தியானலிங்கம், லிங்கபைரவி, தீர்த்த குண்டங்கள் ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ளனர். சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டு மற்றும் பரத நாட்டியத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்ற உள்ளனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகள் இன்று காலை முதலே ஈஷாவிற்கு வருகை தர தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன.
    • சென்னை தலைமை செயலகத்தில் நாளை நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் மூலப்பொருட்களின் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, வங்கி கடன் வட்டி உயர்வு, துணிகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து கடந்த 15-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைந்து உள்ளன. இங்கு 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதிலும் உள்ள நூற்பாலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கில் நூல்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.400 கோடிக்கும் மேல் அன்னிய செலாவணி கிடைத்து வந்தது.

    இந்த நிலையில் நூற்பாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக அங்கு வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளிகளின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்பாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் நாளை நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்காக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், ஓபன் என்ட் நூற்பாலைகள் சங்கம், மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பு, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு, தென்னிந்திய மில்கள் சங்கம், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில் முடக்கம் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளோம். எனவே வேறுவழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ள தமிழக அரசுக்கு நன்றி.

    தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் எங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எனவே தமிழகம் முழுவதும் 6-வது நாளாக தொடரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு, பஞ்சாலை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

    • இறந்த நாய்க்கு சூலூர் கால்நடை மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடத்தப்பட்டது.
    • விபீஷ் வளர்ப்பு நாயை அடித்து கொன்றது தெரிய வந்தது.

    சூலூர்:

    சூலூர் ரங்கநாதபுரம் செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் விபீஷ் (வயது 35). கேரளாவை சேர்ந்த இவர் தனது சகோதரி ராஜகிருஷ்ணகுமாரி வீட்டில் தங்கி, அங்கு உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராஜகிருஷ்ண குமாரிக்கு மகள், மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் அவது மகன் ரஜத்தை வளர்ப்பு நாய் கடித்து உள்ளது. எனவே விபீஷ் அதனை பிடித்து சென்று மொட்டை மாடியில் கட்டினார். அப்போது அவரையும் அந்த நாய் கடித்தது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விபீஷ் அருகில் இருந்த கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாய் இறந்து விட்டது.

    இந்த தகவல், புளூகிராஸ் அமைப்புக்கு தெரியவந்தது. அந்த அமைப்பின் கோவை திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், இதுகுறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக இறந்த நாய்க்கு சூலூர் கால்நடை மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் விபீஷ் வளர்ப்பு நாயை அடித்து கொன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • குருபிரசாத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10- ம்வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் குனியமுத்தூர் கல்லூரி மாணவர் குருபிரசாத் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மாணவி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த குருபிரசாத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை தெரிவித்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சூலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கைது செய்தனர்.

    • ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும் என மெசேஜ் வந்தது.
    • சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவர் பகுதி நேர வேலை தேடி வந்தார். சதீஷின் வாடஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும்.

    இதனை பகுதி நேரமாக அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் இலவச டாஸ்க் என்ற பெயரில் ரூ. 150 கமிஷன் பெற்றார். பின்னர் ரூ.1000 செலுத்தி கமிஷனாக ரூ.1300 ரூபாயும், பின்னர் ரூ 5 ஆயிரம் கட்டி ரூ.6500 பெற்றார்.

    இதை தொடர்ந்து சதீசை தொடர்பு கொண்ட ஒரு நபர் டாஸ்க்கில் அதிக முதலீடு செய்யுமாறு கேட்டு கொண்டார்.

    பல்வேறு தவணைகளில் சதீஷ் ரூ.14.45 லட்சம் செலுத்தினார். அதற்கு பின்னர் இவர் முதலீடு செய்த தொகையும் கிடைக்கவில்லை. கமிஷனும் வழங்கப்படவில்லை.

    இவரை தொடர்பு கொண்டு பேசிய நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இடத்தை போகியத்திற்கு தருவதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.6½ லட்சம் பெற்றனர்.
    • சாத்தூர்சாமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சாத்தூர்சாமி (வயது 63). ஓய்வு பெற்ற ராணுவவீரர்.

    இவருக்கு கோவை கலிக்கநாயக்கன்பாளையம் நாராயணா நகரை சேர்ந்த விஜயலட்சுமி (40). இவரது கணவர் சுதாகரன் (43) ஆகியோருக்கும் அறிமுகம் கிடைத்தது. சுதாகரனும், அவர் மனைவியும் ஆர்.எஸ்.புரம் சி.வி.ராமன் ரோட்டில் துணிவியாபாரம் செய்வதாக கூறினர்.

    மேலும் அங்கே இருக்கும் தங்களது இடத்தை போகியத்திற்கு தருவதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.6½ லட்சம் பெற்றனர். பின்னர் வேறு ஒரு அவசர தேவை என கூறி ரூ.15 லட்சம் பெற்றனர். அதன்பின் பாலக்காடு கோட்டத்துறை பகுதியில் தங்களது பெயரில் உள்ள 9 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கினார்கள்.

    இப்படியே இவர்கள் மொத்தமாக ரூ.22½ லட்சம் பெற்றனர். ஆனால் அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. நிலத்தையும் கிரயம் செய்து கொடுக்க வில்லை.

    இது குறித்து சாத்தூர்சாமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி ராணுவ வீரரிடம் மோசடி செய்த விஜயலட்சுமி, சுதாகரன் ஆகியோரை கைது செய்தனர். நில விற்பனைக்கு புரோக்கராக செயல்பட்ட சதீஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் பணம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.
    • வாலிபருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய், தந்தை, சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    குனியமுத்தூர்,

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேட்டை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், எங்களது பகுதியை சேர்ந்த கார் பெயிண்டருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் எனது கணவரின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தேன்.

    இந்த நிலையில் எனது கணவர் தனியார் கார் பெயிண்டிங் கம்பெனி தொடங்க திட்டமிட்டார். இதற்காக எனது பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி கேட்டார். நான் முடிந்தால் வாங்கி தருகிறேன் என்று கூறியிருந்தேன். நான் பணம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் எனது கணவர் மற்றும் அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் எனக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.

    எனது கணவர் நான் பணம் வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்து எனக்கு தொல்லை கொடுத்தார். மேலும் எனது கணவர் என்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து எனது உறவினர்களிடம் காண்பித்துள்ளார். பணம் வாங்கி தராவிட்டால் மார்பிங் செய்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். எனவே எனது கணவர் மற்றும் அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் பெயிண்டர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டில், கொடுமை, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போதை தலைக்கேறிய நிலையில் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார்.
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பழனியப்பா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பாலக்காடு ரோட்ைட சேர்ந்த ஸ்ரீரேகா (24) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீரேகா கணவரை பிரிந்து மகனுடன் பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர் அவரது மனைவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் மனைவியின் இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீரேகாவின் தாயார் தீபா ராணி தடுக்க முயன்றார். அவரையும் விக்னேஷ் கத்தியால் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் தாய், மகள் ஆகியோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார் தேக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
    • விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனது மகன்களான அபிநவ் (வயது 9), ஆதவ் (7) ஆகியோருக்கு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மொட்டை அடிப்பதற்காக காரில் உறவினர்களுடன் புறப்பட்டார்.

    கோவிலுக்கு சென்று மொட்டை அடித்த பின்னர் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை சவுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். கார் தேக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இதில் காரில் பயணம் செய்த அபிநவ், ஆதவ், மித்ரன் (5), தீரன் (2), டிரைவர் சவுந்தர் (25), பொன்ெமாழி (28), சண்முக பிரியா (28), லட்சுமி (50), இந்துராணி (30) ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×