search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arresed"

    • போத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தபோது சிக்கினர்

    குனியமுத்தூர்,

    கோவையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கல்வி மற்றும் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோவையில் வந்து தங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் கோவையில் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கும்பலை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    கல்லூரிகளில் போதை தொடர்பான விழிப்புணர்வை போலீசார் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே சிலர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து போத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த போத்தனூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இம்ரான்கான் (வயது 26), எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த முகமது யூசுப் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1041 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பெற்றோரிடம் விடுதி காப்பாளர் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி தெரிவித்துள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் ஊத்துக்குளியை அடுத்த கோணம்பட்டி பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளகவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் பகுதியை சேர்ந்த 9-ம்வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி ஒருவரும் விடுமுறையில் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவர் பெற்றோரிடம் விடுதி காப்பாளர் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர்.

    புகாரில் விடுதி காப்பாளரும் பாதிரியாருமான ஆண்ட்ரூஸ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் ஆண்ட்ரூசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
    • பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    ஊட்டி:

    ஊட்டியைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் தனியாா் நா்சரி உரிமையாளராக உள்ளாா்.

    இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சேகா் அந்த மாணவியை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அப்போது மாணவியை அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

    அங்கு பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் இதுகுறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    போலீசாா் விசாரணையில், சேகா் அந்த மாணவியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஊட்டி அனைத்து மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சேகா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா். பின்னா் ஊட்டி மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் அவரை ஊட்டி கிளை சிறையில் அடை க்கப்பட்டார்.

    • சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
    • 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    கோவை:

    கோவை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை மடக்கி பிடித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை தீவிர சோதனை செய்தனர். அதில் 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.2.94 கோடி மதிப்பிலான 5.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பது தெரியவந்தது.

    இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

    மேலும் தங்கம் கடத்தலில் வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். 

    ×