என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கணபதி சங்கனுர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300 பறித்த 4 பேர் சிக்கினர்
    • ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ராகேஷ் (20), என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை.

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37), இவர் நேற்று மாலை கணபதி சங்கனுர் பகுதிக்கு சென்றார். அப்போது 4 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.300 பறித்து தப்பிச்சென்றனர்.

    ரத்தினபுரி போலீசாரின் விசாரணையில் ராமச்சந்திரனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த குண்டு சரவணன் (31), பங்க் கார்த்திக் (30), புறாகூண்டு ரஞ்சித் (26),கோபிநாத் (28) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கோவை சுகுநாபுரத்தை சேர்ந்த ரவிகுமார் (30) என்பவர் கோவை சாய்பாபா கோவில் பகுதியில் பழவியாபாரம் செய்தபோது ரூ.125 பணம் பறித்ததாக, ரத்தினபுரியை சேர்ந்த விமல்குமார் (30), அஜித்குமார் (23) ஆகிய 2 பேரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். கவுண்டம்பாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ராகேஷ் (20), என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை ரத்தினபுரி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் சரகங்களில் நேற்று மட்டும் ஒரே நாளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக, 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

    • பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்து வாக்குவாதம்
    • உருளைக்கிழங்கு கழிவுகளால் உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இது பவானி ஆற்றங்கரையில் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. எனவே காட்டு யானை, மான்,காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் வீணாகும் கழிவுகள், நள்ளிரவு நேரத்தில் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு சமயபுரம் பவானி ஆற்றங்கரையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வளர்க்கும் கால்நடைகள் உண்டு வருகின்றன.

    இதே பகுதியில் வசிக்கும் பூவாத்தாள் என்பவரது பசுமாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு மண்டி கழிவுகளை தின்று வயிறு வீங்கி பரிதாபமாக பலியானது. இதுதொடர்பாக சமயபுரம் பொதுமக்கள் வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் இருந்து காய்கறிகழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் பவானி ஆற்றங்கரையோரம் வந்தது. அப்போது இதனை அங்கு உள்ள பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே உருளைகிழங்கு கழிவுகளை ஏற்றி வந்த டிராக்டர், மீண்டும் வந்தவழியே திரும்பிச்சென்றது.

    இதுகுறித்து சமயபுரம் பொதுமக்கள் கூறுகையில் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளில் சேகரமாகும் கழிவுகளை டிராக்டர்களில் ஏற்றி வந்து சட்டவிரோதமாக சமயபுரம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் கொட்டி வருகின்றனர். இதனை கால்நடைகள் மட்டுமின்றி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளும் சாப்பிட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே வனவிலங்குகள் தொல்லையால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தற்போது உருளைக்கிழங்கு மண்டி கழிவுகளை சாப்பிட்டு கால்நடைகளும், வனவிலங்குகளும் உயிரிழக்கும் அபாயநிலை ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் உருளைக்கிழங்கு மண்டி கழிவுகளை பவானி ஆற்றங்கரையில் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • லாமியா சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
    • சுகாதாரத்துறையினரும் எஸ்டேட் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு

    கோவை,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் லாமியா (வயது 38). இவரது மனைவி அலிஷா காத்துன் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 1 ஆண்டுக்கு முன்பு லாமியா குடும்ப த்துடன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். பின்னர் அணலி எஸ்டேட் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

    லாமியாவுக்கு கடந்த 2 நாட்களாக வயிற்று ப்போக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    நேற்று அதிகாலை திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து லாமி யாவை எஸ்டேட் மேலாளர் அவரது வாகனத்தில் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லாமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது மனைவி அலிஷா காத்துன் தனது கணவரின் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வால் பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து லாமியாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்ததும் லாமியாவின் இறப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே சுகாதா ரத்துறையினரும் வடமாநில தொழிலாளி இறந்த எஸ்டேட் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    தொழிலாளிக்கு வயிற்றுப் போக்கு எதனால் ஏற்பட்டது, உணவு பிரச்சினையா, குடிநீர் பாதிப்பா, அல்லது என்ன காரணத்தி னால் அவர் உயிரிழந்தார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். 

    • சமூக வலைதள மோதலால் 2 பேரை கொல்ல முயன்றது அம்பலம்
    • தப்பிய ஓடிய 5 பேரை பிடிக்க போலீசார் வலை விரித்து உள்ளனர்

    கோவை,

    கோவை காந்திமாநகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 22). இவர் மற்றும் இவரது நண்பரான காந்திபுரம் 9-வது வீதியைச் சேர்ந்த நித்தீஷ் (24) ஆகியோர் மீது கோவை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக ரஞ்சித்குமாரும், நித்தீசும் நேற்று முன்தினம் கோர்ட்டு க்கு வந்தனர். அவருடன் கார்த்திக் என்பவரும் வந்திருந்தார்.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கெர்ணடு இருந்தனர். ராம்நகர் ராமர்கோவில் அருகே சென்றபோது அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் வழிமறித்தது. அவர்கள் ரஞ்சித்குமாரை யும், நித்தீசையும் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். அவர்கள் 2 பேரும் காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கார்த்திக் தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ரஞ்சித், நித்தீஷை 8 பேர் அடங்கிய கும்பல் அரிவாளால் வெட்டியது கோவில்பாளையத்தை சேர்ந்த ரவி என்பவர் தலைமையில் கும்பல் என தெரியவந்தது.

    கோவை காந்திமாநகரை சேர்ந்த ரஞ்சித், காந்திபுரம் 9-வது வீதியை சேர்ந்த நித்தீஷ் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்து உள்ளனர். கோவில்பாளையத்தை சேர்ந்த ரவி என்பவர் அந்த பகுதியில் ரவுடியாக உள்ளார். இவரது தலைமையில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ரஞ்சித்-ரவி இடையே யார் பெரியவர் என்ற ஈகோ மோதல் ஏற்பட்டு வந்தது. இதன்கார ணமாக அவர்கள் 2 பேரும் அடிக்கடி கும்பலாக மோதி வந்தனர். இந்த நிலையில் ரஞ்சித் கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளம் ஒன்றில், கோவில்பாளையம் ரவி குறித்து அவதூறு கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்த னர்.

    அது ரவி கும்பலை ஆத்திரப்படுத்தியது. எனவே அவர்கள் ரஞ்சித் கும்பலை போட்டு தள்ளுவது என முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் 2 பேரையும் கடந்த ஒரு வாரமாக வேவு பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ரஞ்சித், நித்தீஷ் ஆகியோர் நண்பர் கார்த்திக் உடன் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கோவை நீதிமன்றத்துக்கு செல்லும் தகவல், கோவில்பாளையம் ரவி கும்பலுக்கு தெரிய வந்தது. எனவே அவர்களை போட்டுத்தள்ளுவது என ரவி கும்பல் முடிவு செய்தது.

    அதன்படி அவர்கள் 8 பேருடன் மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டு சென்று ரஞ்சித்-நித்தீஷை அரிவாளால் வெட்டியது தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில் அந்த கும்பலில் 3 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மூலம் தப்பிய ஓடிய 5 பேரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

    இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ரஞ்சித்-நித்தீஷை அரிவாளால் வெட்டிய 8 பேர் கும்பலில் 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து உள்ளோம். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமூகவலைதளத்தில் ஏற்பட்ட மோதல் அரிவாள் வெட்டு சம்பவத்தில் முடிந்தது தெரியவந்து உள்ளது.

    • முகவரி கேட்பது போல் நடித்து திருடர்கள் கைவரிசை
    • மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சதீஸ் (வயது 48). இவர் எல்.அண்டு.டி பைபாஸ் ரோட்டில் ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் சதீஸ் கடையை மூடி விட்டு அவரது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மொபட் போடிபாளையம் பிரிவை தாண்டி சென்று கொண்டு இருந்த போது அவைர பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது பின்னால் இருந்தவர் சதீசிடம் முகவரி கேட்டார். இதனையடுத்து மொபட்டின் வேகத்தை குறைத்த அவர் முகவரி கூறிக்கொண்டு இருந்தார்.

    கண்இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள் மொபட்டின் மீது மோட்டார் சைக்கிளை மோதினர். இதில் நிலைதடுமாறிய சதீஸ் மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சதீசின் மொபட் மற்றும் செல்போனை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து சதீஸ் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல நடித்து மொபட் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • திருமணஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபர்
    • பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று காலை மாணவி வழக்கம் போல தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி பள்ளிக்கு செல்லும் போது சுரேஷ் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர் மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு புறப் பட்டு சென்று கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது மோட்டார் சைக்கிளில் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வாலிபர் மாணவியுடன் எங்கு உள்ளார் என தேடி வருகின்றனர்.

    • மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள்
    • சிலைகள் அமைவிடம் மற்றும் ஊர்வல பாதைகளில் பட்டாசுகள் வெடிக்க தடை

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.

    இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், ராஜரா ஜன், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன் மற்றும் இந்து-முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    பொது மற்றும் தனியார் இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் அமைப்பினர் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் உரிய முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்த போலீ சாரிடம் அனுமதி பெற வேண்டும். கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

    விநாயகர் சிலை அமை விடம் தீ தடுப்பு வசதிகளுடன் அமைந்திருக்க வேண்டு ம். அங்கு எளிதில் தீப்பற்றும் பொருட்களை வைத்திருக்க கூடாது. மேலும் சிலை அமைவிடத்தில் முதலுதவி பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்வதற்காக தற்காலிக மின்சாரம் பெற விரும்புவோர், உரிய அதிகாரிகளிடம் முன்கூ ட்டியே விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை வண்ணங்களால் ஆன சிலைகளுக்கு அனுமதி இல்லை.

    விநாயகர் சிலையின் உயரம் 10 அடியை தாண்டி இருக்க கூடாது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் சிலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மினிலாரி, டிராக்டர்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் சிலைகளை கொண்டு செல்லலாம். மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாக னங்களில் சிலைகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை.

    விநாயகர் சிலைகளை சுமந்து செல்லும் வாக னத்தில் பயணிப்போர் எண்ணிக்கை மோட்டார் வாகன சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சிலைகள் அமைவிடம் மற்றும் ஊர்வல பாதை களில் பட்டாசுகள் வெடிக் கக்கூடாது. நீர்நிலைகளில் சிலைகளை விசர்ஜனம் செய்யும் முன்பாக மலர்கள், துணிகள், அலங்கார பொருட்களை தனியாக பிரித்துவிட வேண்டும்.

    கோவையில் முத்தண்ணன் குளம், சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் செல்லும் பவானி ஆறு, அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை, முக்கோணம் ஆறு, பழத்தோட்டம், சிறுமுகை, சாடிவயல், வாளையார் அணை, ஆத்துப்பாறை, ஆழியாறு, குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் ஆகிய பகுதிகளில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார்.
    • சிறுகுன்றா வனத்துறை விருந்தினர் மாளிகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓய்வெடுத்தார்.

    கோவை:

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். அங்குள்ள சிறுகுன்றா வனத்துறை விருந்தினர் மாளிகையில் இரவு அவர் ஓய்வெடுத்தார்.

    இன்று காலை 6 மணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபயணமாக சின்கோனா மலைப்பகுதிக்கு சென்றார். அங்கு வாழும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் அடிப்படை வசதிகள் உள்ளிடட பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அந்த குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் தீர்த்து வைப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

    பின்னர் அவர் வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் பின் பேறுகால தாய்-சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சி கையேட்டையும் அவர் வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ.50 லட்சம் செலவில் பெரியபோது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார கட்டிடம், அரிசி பாளையத்தில் ரூ.50 லட்டசம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதார கட்டிடம், ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்ட அரசம்பாளையம் துணை சுகாதார நிலையம் ஆகியற்றை மக்களின் பயன்பாட்டிக்காக திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் முடிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரவு கோவையில் இருந்து சென்னை திரும்புகிறார்.

    • திண்டுக்கல்லுக்கு தாயுடன் சென்றிருந்தபோது சம்பவம்
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்

    கோவை,

    கோவை நீலிகோணம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 54). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் திண்டுக்கல் சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மூக்குத்தி, மோதிரம் உள்பட 10 பவுன் தங்க நகைகள், ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பிய லட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார் .

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு வெளியூக்கு சென்ற பெண் வீட்டில் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • நெல்லையில் இருந்து தொழில் விஷயமாக கோவைக்கு வந்தவர்
    • ஜவுளிக்கடை உரிமையாளர் மரணம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை

    கோவை,

    நெல்லை அருகே உள்ள பேட்டையை சேர்ந்தவர் முகமது கனி. இவரது மகன் ஜஹாங்கீர் சலாம் (வயது 34). ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 10-ந் தேதி நெல்லையில் இருந்து தொழில் விஷயமாக கோவைக்கு வந்தார். பின்னர் ஜஹாங்கீர் சலாம் காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் 4-வது மாடியில் அறை எடுத்து தங்கி னார். ஆனால் கடந்த 2 நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. அறையில் இருந்த தூர்நாற்றம் வந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது ஜஹாங்கீர் சலாம் படுக்கையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது. இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜஹாங்கீர் சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடை உரிமையாளர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொடர் கொள்ளை, செயின் பறிப்பால் பொதுமக்கள் அச்சம்
    • பொதுமக்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு

    ரத்தினபுரி,

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஜி.பி.எம். நகர், பூம்புகார் நகர், சேவா நகர், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 15 நாட்களாக எங்கள் பகுதியில் 7-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்று பகல் நேரத்திலேயே ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது.

    எனவே இந்த பகுதியில் குடியி ருக்கும் எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. பெண்களாகிய நாங்கள் மிகுந்த பயமுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே தொடர் கொள்ளை யில் ஈடுபடும் நபர்களை கைது செய்து எங்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் நடை பயிற்சி சென்ற செயின் பறிப்பு முயற்சி நடந்துள்ளது. இதன் காரணமாக நகைகள் அணிந்து வெளியே செல்ல அச்சமாக உள்ளது.

    எனவே போலீசார் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியி ருந்தனர். பொதுமக்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் புகார் மனு அளிக்க வந்தார்.பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேவைக்காக வாங்கிய 18 பவுன் நகையை நண்பர் திருப்பி அளிக்காததால் வேதனை
    • குனியமுத்தூர் போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சிறுவாணி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 64 ). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணி யாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் தனது நண்பர் ஒருவருக்கு 18 பவுன் தங்க நகை அவசர தேவைக்காக கொடுத்தார் . ஆனால் நகை வாங்கிய நண்பர் அதை திருப்பி கொடு க்கவில்லை. பலமுறை கேட்டும் நகை கிடைக்காததால் விரக்தியில் இருந்த ரவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×