என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை
- தேவைக்காக வாங்கிய 18 பவுன் நகையை நண்பர் திருப்பி அளிக்காததால் வேதனை
- குனியமுத்தூர் போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சிறுவாணி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 64 ). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணி யாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் தனது நண்பர் ஒருவருக்கு 18 பவுன் தங்க நகை அவசர தேவைக்காக கொடுத்தார் . ஆனால் நகை வாங்கிய நண்பர் அதை திருப்பி கொடு க்கவில்லை. பலமுறை கேட்டும் நகை கிடைக்காததால் விரக்தியில் இருந்த ரவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






