என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மனித -வனவிலங்குகள் மோதல் குறித்தும், மின்வேலிகள் அமைப்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இழப்பீடுகளை உடனே பெற்று தர வேண்டும் என்றார்.

     மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு பகுதியில் காரமடை வனத்துறை சார்பாக மனித -வனவிலங்குகள் மோதல் குறித்தும், மின்வேலிகள் அமைப்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு காரமடை வனச்சரகர் திவ்யா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அதிகாரிகள் விளக்கம் கொடுத்து விவசாயிகளை சமாதானம் செய்தனர்.

    கூட்டத்தில் வன உயிரின ஆர்வலர் அப்துல் பேசியதாவது:-

    இயற்கையை நாம் எந்த அளவுக்கு அழிக்காமல் பாதுகாக்கிறோமோ அந்த அளவுக்கு இயற்கை நம்மை பாதுகாக்கும். வன எல்லைப் பகுதியில் யானைகளுக்கு பிடித்த பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளையும் இயற்கையையும் பிரித்துப் பார்க்கக் கூடாது.

    இயற்கையை அழித்தோம் என்றால் வனவிலங்குகள் அழிந்துவிடும். வனவிலங்குகளை அழித்தால் இயற்கை அழிந்து விடும். இந்த இரண்டும் அழிந்தால் மனித இனம் அழிந்து விடும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்யக்கூடியவை.

    வரக்கூடிய காலங்களில் இயற்கையோடு வனவிலங்குகளோடு ஒன்றி வாழக்கூடிய வழி வகைகளை நாம் பார்க்க வேண்டும்.

    மழை இன்று பெரிய பிரச்சினையாக உள்ளது. சரியான காலகட்டங்களில் சரியான அளவு பெய்வது இல்லை. மழை தாக்கம் குறைவாக உள்ளதற்கு ஒரு முக்கிய காரணம் மரங்களை அழித்தது தான். மரங்கள் வளர்த்து இயற்கை பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    காரமடை வனச்சரகர் திவ்யா பேசியதாவது:-

    மின்வேலி அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு தூரம் மின்வேலி அமைக்கப்பட வேண்டும், எவ்வளவு இடைவெளி விட வேண்டும், எவ்வளவு அழுத்தம் தர வேண்டும் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும்.

    மின்வேலிகளை அமைத்துள்ளவர்கள், இனி அமைப்பவர்கள் எங்களிடம் தெரிவித்து அதற்கான உரிய அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. தேவைப்படுபவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றார்.கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-

    யானைகள் வராமல் இருக்க தோட்டத்தில் மின் வேலிகளை அமைக்க அரசு கூறி உள்ளது. பணம் உள்ள விவசாயிகள் மின்வேலிகளை அமைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பணம் இல்லாத ஏழை விவசாயிகள் எப்படி வேலிகளை அமைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    அதற்கு பதிலாக வன எல்லையில் வனத்துறை சார்பாகவே மின்வேலிகளை அமைத்து யானையை ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும். தேனீ வளர்ப்பு மூலமாக யானைகள் வராது என கூறப்படுகிறது. வனத்துறையினர் தேனீக்களை வளர்த்து யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இழப்பீடுகளை உடனே பெற்று தர வேண்டும் என்றார்.

    • தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தையொட்டி கோவை குற்றாலம் உள்ளது.

    இங்கு கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனத்தை சுற்றி பார்ப்பது வழக்கம். குறிப்பாக கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.

    தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளான சாடிவயல், நரசீபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதியில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழையும் பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து போளுவாம்பட்டி வனசரக வனத்துறையினர் கூறும், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் கோவை குற்றால அருவி தற்காலிகமாக மூடப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 1-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
    • தூய்மை பணியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    சரவணம்பட்டி:

    பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள் ஒரு மணி நேரம் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 165 ஏக்கர் பரப்பளவிலான குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தேர்வாகி உள்ளது.

    இதையடுத்து இந்த குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்ய பா.ஜ.கவினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட பா.ஜ.கவினர் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    இந்த தூய்மை பணியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒரு மணி நேரம் குளத்தில் உள்ள செடி, கொடிகளை கட்சியினருடன் சேர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். பின்னர், அங்கு மரக்கன்றுகளையும் நடவு செய்தார்.

    முன்னதாக அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அக்டோபர் 2-ந் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டும், காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 1-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    அதன்படி இன்று கோவையில் நான் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டேன். இதே போன்று அனைவரும் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.

    நீங்கள் தூய்மை செய்வதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். இதன் மூலம் விளம்பரம் தேடுவதாக நினைத்து கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கும் இதுபோன்று தூய்மை பணியில் ஈடுபட உந்துதலை ஏற்படுத்த வேண்டும்.

    தூய்மை பணியை முடித்த பின்னர் அனைவரும் தங்கள் பகுதிகளில் இருக்கும் கதர் விற்பனை நிலையத்திற்கு சென்று ஏதாவது ஒரு கதர் பொருளை வாங்க வேண்டும்.

    பண்டிகை காலத்தில் நாம் ஏராளமான பொருட்கள் வாங்குவோம். அதில் முடிந்தவரை நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், நமது மாநிலம் மற்றும் அருகே உள்ள ஊர்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அண்ணாமலையிடம் நிருபர்கள், இன்றைய டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் இங்கு அரசியல் வேண்டாம் என தவிர்த்துவிட்டு சென்றுவிட்டார். 

    • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளி வருகிறது
    • நான் மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏ.வாக எனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வழக்கமான பணிகளுக்காகவே நான் டெல்லி செல்கிறேன். இன்று மாலை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே நான் டெல்லி செல்கிறேன். எனவே நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் கிடையாது.

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளி வருகிறது. ஆனால் இதுவரை அந்த மாதிரி எதுவும் நடந்துள்ளதாக எனக்கு தெரியவில்லை. அது என் வேலையும் கிடையாது.

    நான் மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏ.வாக எனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி வருகிறாரா? என்பது குறித்தும் எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல், சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.
    • பேருந்தில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம், படுகாயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    • குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.
    • பேருந்தில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    • வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை வாகனங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டது.
    • முருக பெருமானின் 7-வது படைவீடாக அழைக்கப்பட்டு வருகிறது.

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருக பெருமானின் 7-வது படைவீடாக அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்ைட மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், கல்பாதை அமைக்கும் பணி, பார்க்கிங் பகுதியில் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை வசதி, தானியங்கி கருவி லிப்ட் அமைக்கும் பணி, தார்சாலை அமைக்கும் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

    பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை மலைக்கோவிலுக்கு மலைப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் 

    • உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முன்பகை காரணமாக சாமியப்பனை யாராவது வெட்டி கொலை செய்தனரா என விசாரிக்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 53). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மாணிக்கம்கவுண்டன் புதூரில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்காக வந்தார். பின்னர் அங்கு தங்கி இருந்து கூலிவேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை தோட்டத்து க்குள் நுழைந்த மர்மநபர் யாரோ சாமியப்பனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் நித்யா, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், சிவக்குமார், தனிப்பிரவு ஏட்டு சிவபிரசாத் மற்றும் போலீ சார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சாமியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்கு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து முன்பகை காரணமாக சாமியப்பனை யாராவது வெட்டி கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமாக என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமி ராக்களில் கொலையாளி கள் வந்து செல்லும் காட்சி கள் பதிவாகி உள்ள தா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணிக்கை 23 சதவிகிதமாக உள்ளது.
    • எண்ணை நொறுக்குத் தீனிகள் போன்ற பழக்கங்கள் இதய நோய்கள் ஏற்படும்.

     கோவை,

    உலக இதய தினத்தை யொட்டி கோவை ஜி.கே.என்.எம். ஆஸ்பத்திரி டாக்டர் ராஜ்பால் கே .அபைசந்த் கூறியதாவது

    இந்தியாவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் தமி ழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.

    கோவை பகுதியில் நடத்திய ஆய்வில் 52 சதவி கிதம் இதய நோய்களால் இறப்புகள் 70 வயதுக்கு முன்பே நிகழ்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணிக்கை 23 சதவிகிதமாக உள்ளது.

    புகைப் பிடித்தல், அதிக ப்படியாக மது அருந்துதல், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் எண்ணை நொறு க்குத் தீனிகள் போன்ற பழக்கங்கள் இதய நோய்கள் ஏற்படும்.ஆரோக்கியமான வாழ்க்கை அம்சங்களைப் பற்றி கவனமாக இல்லாத வர்கள் கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கரோனரி தமனி நோய்க்கு கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பிளேஸ்மென்ட் சிகிச்சை ஆகும். இது அடைபட்ட இதயத் தமனிகளைத் திறக்கும் குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறை யாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் கூறியதா வது:-

    பெருநாடி ஸ்டெனோ சிஸை எதிர்த்துப் போராட, மருத்துவ வல்லுநர்கள் டிரான்ஸ்கேதீட்டர் பெருநாடி வால்வு மாற்ற த்தை ஏற்றுக்கொண்டனர். இது குறைந்த வலி மற்றும் விரைவான மீட்பு செயல்முறை ஆகும். சிகிச்சையின் போது பெரும்பாலும் குறுகிய காலம் மருத்துவமனையில் தங்கி இருந்தால் போதும். மேலும் நோயாளியின் சுமையை குறைக்கிறது மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கும் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக, காரமடை அரங்கநாத சுவாமி கோவில் அமைந்து உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் மாசிமகம் தேர்த்திருவிழா மற்றும் புரட்டாசி சனிக்கி ழமை ஆகியவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி காரமடை பெருமாள் கோவிலில் நடப்பாண்டுக்கான புரட்டாசி 3-வது சனிக்கி ழமை சிறப்பு வழிபாடு இன்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டது.

    இதனையொட்டி இன்று காலை முதலே மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதன் காரணமாக கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அரங்கனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கும் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    காரமடை பெருமாள் கோவிலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் லோகநாதன் மற்றும் தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.இேதபோல் கோவை பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    அதன்படி வருகிற 1-ந் தேதியில் இருந்து காய்ச்சல் பாதிக்கப்பட்ட, கண்டறி யப்பட்ட கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவையிலும் நாளை சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்க உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 102 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்கிறது. மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கிராம பகுதிகளில் இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.இந்த முகாமில் ஒவ்வொரு முகாமுக்கு டாக்டர், நர்சு உள்பட 4 பேர் பணியில் இருப்பா ர்கள். முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட வர்களின் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்ப ட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். முகாமில் நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதவிர வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 7 பேர் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று அரசு ஆஸ்பத்திரி டீன் தெரிவித்தார்.

    விழாவுக்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி என்ற குமரேசன் தலைமை வகித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட ஏழுஎருமை பள்ளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ். ரூ.45.60 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இதற்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி என்ற குமரேசன் தலைமை வகித்தார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக பங்கே ற்றார். காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×