search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூர் பேருந்து விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. மு.க. ஸ்டாலின்
    X

    குன்னூர் பேருந்து விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. மு.க. ஸ்டாலின்

    • குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.
    • பேருந்தில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம், படுகாயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    Next Story
    ×