search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fever prevention camp"

    • தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    அதன்படி வருகிற 1-ந் தேதியில் இருந்து காய்ச்சல் பாதிக்கப்பட்ட, கண்டறி யப்பட்ட கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவையிலும் நாளை சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்க உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 102 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்கிறது. மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கிராம பகுதிகளில் இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.இந்த முகாமில் ஒவ்வொரு முகாமுக்கு டாக்டர், நர்சு உள்பட 4 பேர் பணியில் இருப்பா ர்கள். முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட வர்களின் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்ப ட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். முகாமில் நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதவிர வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 7 பேர் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று அரசு ஆஸ்பத்திரி டீன் தெரிவித்தார்.

    • காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமில் பொதுமக்கள் 76 பேர் பங்கேற்றனர்.
    • 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

     மங்கலம் :

    சாமளாபுரம் பேரூராட்சி காளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் 76 பேர் பங்கேற்றனர்.

    இதில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.க.சாந்தகுமாரி மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் பூங்கொடிசண்முகம் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒரு மாதம் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதையொட்டி 36 வாகனங்களில் மருத்துவ குழுவினர் கிராமம் கிரமமாக சென்று மருத்தவ பரிசோதனை செய்ய உள்ளனர். முகாம் தொடக்க விழா சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். சுகாதரத்துறை இணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி வரவேற்றார்.

    இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:- மழைக்காலம் தொடங்க உள்ளால் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கொசுக்கள் பரவாமல் தடுக்க உள்ளாட்சித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது இவர்களுடன் மருத்துவ துறையும் இணைந்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்ய 36 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் மருந்தாளுனர் மற்றும் சமுதாயநல செவிலியர் ஆகியோர் இருப்பார்கள்.

    இவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று முகாமிட்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து வழங்குவார்கள். இந்த முகாம் ஒரு மாதம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், பூச்சியல் வல்லுனர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் மோகன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×