என் மலர்
சென்னை
- சீனிவாசராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.
- புதிய தலைவர் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஜே.சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும். அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.
இதேபோல துணைத் தலைவராக எம்.குமரேஷ், பொருளாளராக ஆர்.ரங்கராஜன் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளர், இணை செயலாளர், உதவி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 205 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
- மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
- மண்டல குப்பை சேமிப்பு கிடங்குகளில் இந்த பொருட்கள் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கிளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் மூலம் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்து உள்ளது.
மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும். வழக்கமாக இந்த பொருட்கள் மத்திய அரசின் நிறுவனம் மூலம் ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படும். ஆனால் இந்த முறையில் ஏலம் விடுவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதையடுத்து பழைய நடைமுறையை மாற்றியமைத்து இந்த புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.
மண்டல குப்பை சேமிப்பு கிடங்குகளில் இந்த பொருட்கள் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் உள்ள பொருட்கள் ஆன்லைன் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்வதற்கு தாமதம் ஆவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.
பழைய பொருட்களை வாங்குபவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடிவதால் மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களை வேகமாக அப்புறப்படுத்த முடியும். பல மாதங்களாக தேங்கி கிடக்கும் பொருட்களை அகற்றுவதே இதன் நோக்கம்.
இந்த புதிய முறையில் பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், கண்ணாடி பொருட்கள், உலோகங்குள், அட்டைகள், மரம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவை தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக அனைத்து பரிவரித்தனைகளும் தூய்மை மிஷன் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்படும்.
இந்த மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களை பொருத்தவரை செல்போன் ரூ.80-க்கும், லேப்டாக் ரூ.500-க்கும், பிரிட்ஜ் ரூ.800-க்கும், வாஷிங்மிஷின் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படும். இந்த நடைமுறையானது இனி வரும் வாரங்களில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை மறுநாள் (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்படும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 64 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க, டாக்டர் அன்புமணி (பா.ம.க.), டி.டி.வி.தினகர னின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
அழைப்பு அனுப்பப்பட்ட கட்சிகளில் விஜய்யின் த.வெ.க., டாக்டர் ராமதாசின் பா.ம.க. சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
அதன்பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்த கால கட்டத்தில் நடத்துவது சரியாக இருக்காது என்றும் இதனை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை விளக்கி பேசினார்கள்.
வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாக செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறை சிக்கல் இல்லாமல் செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போதே இதனை செய்யத் தொடங்குவது சரியாக இருக்காது. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத் தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித்திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இதுபோன்ற எந்த சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. எனவே வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தின் உரிமைக்கு பேராபத்து விளைவிக்கும். தமிழ்நாட்டின் நலன், உரிமைகளை பாதுகாப்பதற்காக S.I.R.-க்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம்.
ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுக்கும் செயலில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6.50 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகத்தில் வந்து தங்கியுள்ளனர்.
S.I.R. காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்களிக்கும் அபாயகரமான நிலை ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் தேர்தல் ஆணையம் மோசடியாக செயல்படுகிறது.
பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது.
நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது.
குடியுரிமை சான்றிதழை கொடு என்றால் என்னால் கூட தற்போது கொடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.
- எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.
சென்னை:
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:-
பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்து சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க பல நூறு அல்லது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவு செய்து வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது.
பழங்குடி மக்கள் குறிப்பாக பழங்குடி இருளர், நரிக்குறவர் உள்ளிட்ட அலைந்து திரிந்து வாழும் பழங்குடி மக்கள் பலருக்குத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் ஆவணங்கள் எதுவுமே கையில் இருக்க வாய்ப்பு இல்லை.
ஒவ்வொரு வாக்காளரும் 2002-2004 சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருந்த தன்னுடைய பதிவை அடையாளம் கண்டு இப்போதைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொருவருக்கும் நீண்ட நேரம் தேவைப்படும்.
இந்த சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளோம். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.
தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை 2002-2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோடு உத்தேசமாக பொருத்திப் பார்த்ததில் சுமார் 40 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்களே முழுமையாகப் பொருந்துகின்றன எனக் கூறப்படுகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.
அதாவது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி என்று கருத வேண்டி உள்ளது.
மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்க்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கிடையில் எஸ்.ஐ.ஆர். குறித்து இங்கே பங்கேற்றிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது .
- ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.
2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்தி ரேலியா)-ஜோர்னா கார்லேண்ட் (சீனதைபே) மோதினார்கள். மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் கிம்பெர்லி 6-7 (2-7), 6-3, 7-5 என்ற கணக்கில் போராடி வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.
3-வது செட்டில் ஒரு கட்டத்தில் கார்லேண்ட் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல வாய்ப்பை அவர் தக்க வைக்க தவறிவிட்டார். 4 முறை மேட்ச் பாயிண்ட் வந்தும் அவர் தோல்வியை தழுவினார்.
நீண்ட நேரமாக போட்டி நடைபெற்றதால் கார் லேண்ட் மிகவும் சோர்வடைந்தார். மேலும் தசைப் பிடிப்பும் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மருத்துவ உதவியை பெற்றார். தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது . அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த போட்டி 3 மணி 24 நிமிட நேரம் நடைபெற்றது.
முன்னதாக நடந்த அரை இறுதி போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) 7-6 (8-6), 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜேனிஸ் டிஜென்- கிம்பெர்லி பிரெல் மோதுகிறார்கள்.
இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரியா பாட்டியா- ருதுஜா போசலே ஜோடி 7-5, 0-6, 5-10 என்ற கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென்- அல்டிலா சுட்ஜியாடி (இந்தோனே சியா)ஜோடியிடம் தோற்றது.
இந்த ஜோடி இன்று இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்டோம் கண்டர் (ஆஸ்திரேலியா)- மோனிகா (ருமேனியா) ஜோடியுடன் மோதுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
- தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்ஐஆர் நடவடிக்கைகை எதிர்ப்பது ஏன்? என விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.
அதைவிடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே.
மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.
இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் உருவாகி உள்ளது.
- அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் - வங்கதேச கடற்கரையில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் - வங்கதேச கடற்கரையில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு த.வெ.க., தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?
மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தம் என்று தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஏற்கெனவே, பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம்.
அப்போது எச்சரித்தது போலவே பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
முதல் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?
இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக. பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன.
அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது.
எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து. ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.
மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சில ஆலோசனைகளை முன்வைக்கிறது.
1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.
3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.
4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.
6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில், எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்.
நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க, அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது.
அதே சமயம், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.
அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க., இதுகுறித்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?
தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்துகொண்டு, மக்கள் உரிமைகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தோம்.
ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை.
தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், தி.மு.க. அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும்.
சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாட்டில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது, தமிழக வெற்றிக் கழகத்தின் குரல்தான். இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதன்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் தி.மு.க.
தூங்கிக்கொண்டிருந்ததா? ஒன்றிய பா.ஜ.க.வுடன் மறைமுக உறவுக்காரராக இருந்ததால் மறதி மயக்கத்தில் இருந்ததா? ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக விழித்துக்கொண்டது போலவும், தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது, அப்பட்டமான ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க. நினைக்கிறதா?
இந்தக் கேள்விகள் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளன. எனவே, தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் காத்திரமாகக் குரல் கொடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அது ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், சமரசமின்றி எதிர்ப்பதில் த.வெ.க. எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும்.
ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர்.
மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக, மக்கள் பக்கம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- திராவிட கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி?
- சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க தி.மு.க., அ.தி.மு.க.விற்கு தகுதி இருக்கிறதா?
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எது சுயமரியாதை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார். அப்போது அவர் பேசியதாவது:
* துணை முதலமைச்சர் காலில் அவர் வயதை ஒத்தவர் விழுவது தான் சுயமரியாதையா?
* சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது தான் சுயமரியாதையா?
* திராவிடம் என்றால் ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு என கூறினார்கள்.
* திராவிட கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி?
* ஜெயலலிதா திராவிட கட்சிக்கு தலைமை ஏற்றபோது திராவிடம் என்ன ஆனது?
* ஜெயலலிதா முன் நிமிர்ந்து நின்று அ.தி.மு.க.வினர் யாராவது பேசியது உண்டா?
* கார் டயரை விழுந்து கும்பிட்டது என்ன சுயமரியாதை?
* எனது மாமனார் காளிமுத்து மட்டும் நிமிர்ந்து நின்று பேசுவார்.
* சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க தி.மு.க., அ.தி.மு.க.விற்கு தகுதி இருக்கிறதா?
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
- 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.






