என் மலர்
சென்னை
- கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள்.
- இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான்.
சென்னை:
பா.ம.க. டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், டாக்டர் அன்புமணி தலைமையிலும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. டாக்டர் அன்புமணிதான் பா.ம.க. தலைவர் என்றும் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் அவரிடம்தான் இருக்கும் என்றும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டில் ஒரு தீர்ப்பு வெளிவந்தது. இந்த நிலையில் இப்போது சென்னையில் உரிமையியல் கோர்ட்டில் கட்சி தனக்கே சொந்தம் என்று உரிமைக்கோரி டாக்டர் ராமதாஸ் நேற்று மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் அன்புமணி தரப்பு கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-
எந்த அரசியல் கட்சியிலும், எந்த கட்சி தலைவரும் செய்யாத வேடிக்கை மற்றும் வினோதங்களை டாக்டர் ராமதாஸ் தலைமையில் செய்து வருவதுதான் மிகப் பெரிய வேடிக்கை.
டாக்டர் அன்புமணிக்குத் தான் கட்சி சொந்தம், சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இது நீதிமன்ற அவமதிப்பாகும். நான்தான் கட்சி தலைவர் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள். தங்களுக்கு வெற்றி கிடைத்தால் மீண்டும் மீண்டும் டாக்டர் ராமதாசை தலைவராக தேர்வு செய்வதாக ஏன் அறிவிக்க வேண்டும்? ஒரே வருடத்தில் 4 முறை அவரை தலைவராக தேர்வு செய்ததாக அறிவித்து உள்ளார்கள்.
எந்த கோர்ட்டிலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்பது சட்டம் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். டெல்லி கோர்ட்டில் தங்களுக்குத்தான் வெற்றி கிடைத்தது என்று கொண்டாடியவர்கள்.
அப்படியென்றால் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏன் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். இது முழுக்க முழுக்க டாக்டர் ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரை சுற்றி இருக்கும் பூசாரிகளான ஜி.கே.மணி, அருள் போன்றவர்கள் நடத்தும் நாடகம். இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான். வழக்குகளை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்.
- சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 38 சத்துணவு மையங்களில் இப்போதைய நிலையில் 71 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் முடங்கி விடும்; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும்.
சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்; அவர்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குபவர்கள். எனவே, இனியும் தாமதிக்காமல் சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி நடந்து கொள்வார்களா?
- சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் மரபு என்றும் மாற்றப்படாது.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கியது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டத்தொடருக்கு ஆளுநரை நேரில் சென்று அழைத்தோம். பேரவையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
* மிகவும் தாழ்ந்த குரலில் தான் உரையை வாசிக்குமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
* சட்டசபையின் முதல்நாள் கூட்டத்தில் மாநில அரசின் அறிக்கையை வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.
* அரசின் நிறை குறையை ஆளுநர் பேசலாமா, ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசலாம்.
* உரையை வாசிக்காமல் ஆளுநர் கிளம்பியதால் நான் மைக்கில் வேண்டுகோள் விடுத்தேன். அப்போது ஆளுநர் மைக் ஆப் செய்யப்பட்டது.
* ஆளுநர் பேசும்போது அனைவரது மைக்கும் ஆப் செய்யப்படும். நான் பேசும்போது ஆளுநர் உள்ளிட்டோர் மைக் ஆப் செய்யப்படும்.
* நான் பேசும்போது மற்றவர்களுக்கு தெளிவாக கேட்கத்தான் ஆளுநர் மைக் ஆப் செய்யப்பட்டது. இது மரபு தான். எந்த மரபையும் மீறவில்லை.
* தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து சட்டசபையின் மாண்பு காக்கப்பட்டுள்ளது.
* பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி நடந்து கொள்வார்களா?
* சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் மரபு என்றும் மாற்றப்படாது.
* யாருக்கும் பயந்து தமிழ்நாடு சட்டசபையின் மரபு என்றும் மாற்றப்படாது என்று கூறினார்.
- சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
- 22, 23-ந்தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும்.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்ததை மறுத்து ஆளுநர் வெளியேறினார்.
ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார் இதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சபாநாயகர் கூறியதாவது:
வரும் 24-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். நாளை மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்படும்.
22, 23-ந்தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும். 24-ந்தேதி ஆளுநர் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதில் அளிப்பார். சனிக்கிழமை முதலமைச்சர் உரையுடன் நிறைவு பெறும் என்று கூறினார்.
- எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
- இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறி உள்ளார்.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி உள்ள ஆளுநர், தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவயது:
* மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பா.ஜ.க.வின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வந்துள்ளார்.
* முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் சட்டசபையின் மரபு.
* ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது மைக் ஆப் செய்யப்பட்டது என ஆளுநர் மாளிகை கூறியது முற்றிலும் தவறு.
* ஆளுநர் உரையை படியுங்கள் என்று தான் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.
* எவ்வளவு தாழ்மையுடன் கேட்க வேண்டுமோ அவ்வளவு தாழ்மையுடன் கேட்டார் சபாநாயகர்.
* ஆளுநரின் மைக் அணைக்கப்படவில்லை. ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதாக கூறியது பச்சை பொய்.
* எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
* தமிழக பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது என்பதை மத்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது.
* ஆளுநர் கூறியிருப்பது பொய் என்பதற்கு மத்திய அரசின் புள்ளிவிபரங்களே சாட்சி.
* ஆளுநருக்கு தமிழகத்தின் மீது என்ன வெறுப்பு என்பதை அவர்தான் கூற வேண்டும்.
* ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே விளக்க அறிக்கை வருகிறது.
* முன்னரே இப்படி ஒரு அறிக்கையை தயாரித்து விட்டு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.
* பெண்கள் மீதான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
* பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
* உயர்கல்வி அதிகம் பயிலும் பெண்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
* மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிக கல்வி வளர்ச்சி கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
* அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
* சிறு குறு தொழில்களில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக கூறுவது தவறு.
* தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தி கிடையாது. போதைப்பொருட்கள் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறது என்பது உங்களுக்கே தெரியும்.
* இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
* ஆண்டுதோறும் 20,000 பேர் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.
* தனிமனித தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தனிமனித தற்கொலைக்கு அரசு பொறுப்பாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவறான தகவல்கள் உள்ள உரையை ஆளுநர் எவ்வாறு வாசிப்பார்? ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி பயில்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது.
இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
* அமைச்சரவை தயாரித்து வழங்கிய உரையில் உள்ள தவறை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார்.
* தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.
* தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் 55% அதிகரித்துள்ளது என்பதை ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
* தவறான தகவல்கள் உள்ள உரையை ஆளுநர் எவ்வாறு வாசிப்பார்? ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை.
* புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆவணமாகவே உள்ளன. பெரும்பாலான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
* தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி பயில்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
* ஆளுநர் உரையில் முதலமைச்சர் தனது கருத்துக்களையும் பதிவு செய்கிறார்.
* ஆளுநர் குறித்து விமர்சனம் செய்வது முறையல்ல. அ.தி.மு.க. அதனை செய்தது இல்லை.
* தவறான உரையை வாசிக்க மாட்டேன் என ஆளுநர் சொல்வது நியாயம். தனது தவறை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
* ஆளுநர் மீது தவறான பிம்பத்தை உருவாக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
- அமைச்சரவை எழுதி அனுப்பிய உரையை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
* உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதை பேரவை ஏற்கவில்லை.
* ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல்.
* ஆளுநர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும்.
* பா.ஜ.க. ஆளாத மாநில அரசுகளுக்கு இடையூறாக இருப்பது ஆளுநர்களின் வாடிக்கையாக உள்ளது.
* அமைச்சரவை எழுதி அனுப்பிய உரையை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும்.
* பொது மேடைகளில் அரசியல் பேசி அவதூறு பரப்பி வருகிறார் ஆளுநர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
- சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்
ஆளுநர் தனது உரையை புறக்கணித்த நிலையில் தமிழக அரசின் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை சபாநாயகர் அப்பாவு பட்டியலிட்டார்.
- மாநிலம் ரூபாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு எட்டாத தொலைவில் உள்ளது.
- 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
சென்னை:
சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்தது ஏன்? என்பது பற்றி 13 காரணங்களுடன் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1) ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை;
2) தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில் ஆதாரமற்ற பல கோரல்களும், தவறான தகவல்களும் இடம்பெற்றிருந்தன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
3) மாநிலம் ரூபாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு குறைவான ஈர்ப்பு மிக்க மாநிலமாக மாறி வருவதை காட்டுகின்றன. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாநிலங்களில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு 4-வது பெரிய மாநிலமாக இருந்தது. இன்று அது 6-வது இடத்தில் நீடிக்கவே போராடுகிறது.
4) போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்துக்கு மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள் 33 சதவீதத்துக்கு மேலாகவும் அபாயகரமாக அதிகரித்துள்ள போதிலும், பெண்களின் பாதுகாப்புப் பிரச்சனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
5) போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோக வழக்குகளின் கூர்மையான அதிகரிப்பு, ஒரு மிகத் தீவிரமான கவலையாகும். போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2ஆயிரம் பேர், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், தற்கொலை செய்துள்ளனர். இது நமது எதிர்காலத்தை மிகத் தீவிரமாகப் பாதிக்கிறது. இவை வெகு சாதாரணமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
6) தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
7) நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்-அதாவது கிட்டத்தட்ட தினமும் 65 தற்கொலைகள். நாட்டின் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு அபாயகரமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. இருந்தும், இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை. இவை புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
8) கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவும், கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதகமாகப் பாதிக்கின்றன. 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், கவுரவ விரிவுரையாளர்கள் மாநிலம் முழுவதும் அமைதியின்மையுடன் உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். இவை அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை; மேலும், இந்தப் பிரச்சனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
9) பல ஆண்டுகளாகத் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம ஊராட்சிகள் செயலிழந்து கிடக்கின்றன. அவை நேரடியாக அரசின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவை, அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் எதிரானவை. கிராம ஊராட்சிகள் மீட்டெடுக்கப்படுவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இது ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவே இல்லை.
10) மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோவில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான பக்தர்கள் கோவில்களின் தவறான நிர்வாகத்தால் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். பழங்கால கோவில்களை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் 5 ஆண்டுகள் கடந்தும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் ஈவு இரக்கமின்றிப் புறக்கணிக்கப்படுகின்றன;
11) தொழிலை நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுக செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும். இருப்பினும், நாட்டில் 5.5 கோடிக்கு அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், மகத்தான வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தமிழ் நாட்டில் சுமார் 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனை வோர் தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகுகின்றனர். இந்த விவகாரம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது;
12) ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் அமைதியற்றவர்களாகவும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை;
13) தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆளுநர் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
- ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். ஆளுநருக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது.
இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு எங்கே போச்சு? ஜனநாயகம் எங்கே போச்சு? என முழக்கங்கள் எழுப்பினர்.
- தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன.
- சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வேளச்சேரியில் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வேளச்சேரியில் நேற்று , மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் நபரான பார்த்திபன் என்பவர் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி என்பது நெஞ்சை பதைக்க வைக்கிறது.
இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் மு.க,.ஸ்டாலின் அவர்களே?
தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன.
நான்கரை ஆண்டுகளாக நான் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது. இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய பொம்மை முதலமைச்சர்?
காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
பார்த்திபனை தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே இருக்கிறது.
- தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை சற்று குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் அதிகரித்தது. 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 280-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600
18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-1-2026- ஒரு கிராம் ரூ.318
18-1-2026- ஒரு கிராம் ரூ.310
17-1-2026- ஒரு கிராம் ரூ.310
16-1-2026- ஒரு கிராம் ரூ.306
15-1-2026- ஒரு கிராம் ரூ.310






