என் மலர்tooltip icon

    சென்னை

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • கமலா நகர், கிருஷ்ணா நகர், காமாட்சி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, கிருஷ்ணவேணி நகர், ஏஜிஎஸ் காலணி.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (17.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, சென்னீர்குப்பம் பகுதிகளில் கண்ணபாளையம், பாரிவாக்கம், ஆயில்ச்சேரி, பிடாரிதாங்கல், கொளப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம்.

    ராயாபுரம்: ராயலா நகர் 1வது மற்றும் 2வது தெருக்கள், பாரதி சாலை, வள்ளுவர் சாலை சந்திப்பு மற்றும் வடக்கு, ஆண்டவன் நகர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், பாரதி நகர், திருமலை நகர், சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், முகலிவாக்கம் பகுதி, சுபஸ்ரீ நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், கிருஷ்ணா நகர், காமாட்சி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, கிருஷ்ணவேணி நகர், ஏஜிஎஸ் காலணி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள்.

    சென்னை :

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.

    மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னை 40 செல்சியஸை ஒரு நாள் கூட தாண்டவில்லை.

    கிழக்கு மேற்கு வளி மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த பரந்த சுழற்சி இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1 ஆம் வாரத்தில் உருவாகிறது. இப்போது முதல் முறையாக மே மாத நடுப்பகுதியில் நான் இதைக் காண்கிறேன். பொதுவாக, இந்த வளிமண்டலம் முடிவடையும்போது குறைந்த காற்றழுத்ததை ஏற்படுத்தும். எனவே அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (மாத இறுதியில்) இருக்கும். அரபிக் கடலில் ஒன்று அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.

    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த சுழற்சி இன்னும் நெருக்கமாகி, கிழக்கு திசையில் இருந்து தமிழக வடக்கு கடலோரம் மற்றும் கடற்கரைகளில் வீசும். இதனால் வரும் நாட்களில் மிகவும் மழை பெய்யும். இன்றும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள். அதாவது 10 செல்சியஸ் வெப்பநிலையில் நடுங்கும் என்று அர்த்தமல்ல. மே மாத காலநிலையைக் கருத்தில் கொண்டு இது இயல்பை விட குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 



    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 4 முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விரும்புவோர் மே 22 முதல் ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு அட்டவணை இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரும் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிக்கலாம்.

    • கடந்த மாதம் 10-ந்தேதி வரை ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அது பார்க்கப்பட்டது.

    அதன் பின்னர் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இதனால் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதனைத் தொடர்ந்து விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே பயணித்தது.

    இதில் பெரும்பாலான நாட்கள் விலை அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் மீண்டும் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தையும், ரூ.73 ஆயிரத்தையும் தாண்டியது.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360 அதிரடியாக சரிந்து, ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. மறுநாள் விலை அதிகரித்து காணப்பட்டாலும், நேற்று முன்தினமும், நேற்றும் விலை குறைந்து இருந்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவர ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1,560-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவர ரூ.68 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதற்கு முன்பு கடந்த மாதம் 10-ந்தேதி வரை ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. அந்தவகையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.4,160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,720-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது. இன்று விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108 க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880

    14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440

    13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-05-2025- ஒரு கிராம் ரூ.108

    14-05-2025- ஒரு கிராம் ரூ.109

    13-05-2025- ஒரு கிராம் ரூ.109

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

    தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

    11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் விவரங்களை மாணவர்கள் மதியம் 2 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
    • மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை :

    2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பாடம் வாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள் விவரம்:-

    தமிழ் -8 பேர், ஆங்கிலம்- 346 பேர், கணிதம் - 1,996 பேர், அறிவியல்- 10,838 பேர், சமூக அறிவியல்- 10,256 பேர் ஆவர்.

    முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:-

    சிவகங்கை- 98.3 சதவீதம், விருதுநகர்- 97.5 சதவீதம், தூத்துக்குடி- 96.8 சதவீதம், கன்னியாகுமரி 96.7 சதவீதம், திருச்சி- 96.6 சதவீதம். 

    • வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.

    • தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
    • மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்பட்டது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.

    • பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடுகிறோம்.
    • தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடுகிறோம்.

    கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம்.

    தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 



    • அண்ணா பல்கலைக் கழகத்திற்கு இதுவரை 18 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிரட்டலை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் மோப்பநாய் உதவியுடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் சோதனை செய்ததில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதுவரை 18 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது.
    • விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது. 176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும்.

    இதேபோல் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் படுஜோராக நடந்து வருகிறது. கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த விண்ணப்ப பதிவில் நேற்று வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 9-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, ஒருநாள் முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
    • பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    சென்னை:

    பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரையிலும் நடந்து முடிந்தது. இதில் பிளஸ்-1 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் பேரும் எழுதி இருந்தார்கள். ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிட்டு இருந்தபோது, தேர்வு முடிவு மே 19-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல், பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 9-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, ஒருநாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனை போன்றே பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான சூழல் இருப்பதாகபேசப்பட்டு வந்தது.

    இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசிய நிலையில், பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 16-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று காலை 9 மணிக்கும், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவை பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது.

    மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும், மாணவ-மாணவிகளில் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.

    ×