என் மலர்
சென்னை
- நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது.
- கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?
வானகரம்:
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* வேறு வழியில்லாமல் 28 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ.1000 திட்டம் தொடங்கப்பட்டது.
* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பது கூட அ.தி.மு.க.வின் அழுத்தத்தால் தான்.
* மக்கள் பணம் பெற்றுக்கொண்டாலும் அ.தி.மு.க.வுக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.
* அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தியது.
* அ.தி.மு.க. ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
* மக்களின் செல்வாக்கை தி.மு.க. அரசு இந்து விட்டதால் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவிப்பு.
* கல்லூரி திறக்கப்பட்டு 5 மாதம் கழித்து தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது, இதனால் என்ன பயன்?
* அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் மாணவர்களின் வாக்குகள் தேவை என்பதால் மடிக்கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது.
* கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?
* டெல்டா மாவட்டங்களில் 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் நாசம்.
* 15 நாட்களாக நெல் மூட்டைகளை காவல் காத்துக்கொண்டிருக்கிறோம் என விவசாயிகள் கூறினர்.
* டெல்டாவில் பயிர் பாதிப்புகளை பார்க்காமல் ரெயில் நிலையத்திற்கு சென்றார் உதயநிதி.
* விவசாயிகளை பார்ப்பதற்கு அஞ்சிதான் பார்க்காமல் சென்று விட்டார் துணை முதலமைச்சர்.
* பொருட்களை வாங்கும் சக்தியை ஏழை மக்கள் இழந்து விட்டனர்.
* மின் கட்டணத்தை 52 சதவீத அளவுக்கு தி.மு.க. அரசு உயர்த்தி இருக்கிறது.
* மின் கட்டணம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கிறது என்று கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தி.மு.க. ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.
* வரி மேல் வரி போட்டு மக்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.
* உடல் உறுப்பை விற்று வாழ்க்கையை நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
* கிட்னி முறைகேடு தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
* தி.மு.க. ஆட்சியில் உடல் உறுப்பைக் கூட விட்டு வைக்கவில்லை.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
* மகளிருக்கு இலவச பயணம் என்று கூறுகிறீர்கள், ஆனால் பேருந்துகள் ஓட்டு உடைசலாக உள்ளன.
* 2019-ல் அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டன.
* 77 சதவீத அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் பச்சைப்பொய் சொல்கிறார்.
* முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்கள்.
* அ.தி.மு.க.வின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது தி.மு.க. அரசு.
* ஏதாவது ஒரு திட்டத்தை தி.மு.க.வால் கொண்டு வர முடிந்ததா?
* கொரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஆட்சியை நடத்தினோம்
* கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது என்று கூறினார்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
- தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி' கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என்று கூறியுள்ளார்.
- அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.
- தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தீய சக்தி தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.
* அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.
* நாட்டு மக்களைத்தான் ஜெயலலிதா தனது வாரிசாகப் பார்த்தார்.
* பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும்.
* 2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
* அ.தி.மு.க. ஆட்சி குறித்து தி.மு.க.வால் விமர்சனம் செய்ய இயலவில்லை.
* தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?
* அனைத்து தேர்தல்களிலும் களப்பணி ஆற்றியவர்கள் இங்கே இருக்கிறீர்கள்.
* நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100% வெற்றி உறுதி.
* சூழ்ச்சியால்தான் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
* 1991 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
* 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டிருந்தது தி.மு.க.
* 2014 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை.
* 2021 தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
* 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களை அ.தி.மு.க. கூட்டணி வென்றெடுத்தது.
* 2011 சட்டசபை தேர்தலில் கலைஞர் இருந்தபோது கூட எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க.வுக்கு இடமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார்.
- அடுத்த மாதம் ஜனவரி 10-ந்தேதி வரை மாநிலம் தழுவிய வகையில் தீவிரமான பிரசாரமாக இது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, வாக்குச்சாவடியை வென்றால் சட்டமன்ற தொகுதியை வெல்லலாம். அதற்காக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரசாரம் தொடங்கப்படுகிறது. அவரவர் வீடு அருகே உள்ள வாக்குச்சாவடியில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் எனது வாக்குச்சாவடி பகுதியில் கலந்து கொள்வேன் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி' கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார்.

அந்த பாகத்தில் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், பி.எஸ்.ஏ.-2 முகவர்கள், வட்டச் செயலாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டக் கழக செயலாளர் மயிலை த.வேலு, பகுதிச் செயலாளர் நந்தனம் மதி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
இதைபோல் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பரப்புரையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்றனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களையும் சரி பார்த்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 463-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளதால் அத்தனை வாக்குச்சாவடிகளிலும் வெற்றி பெறுவதற்காக இந்த பரப்புரை இன்று மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த மாதம் ஜனவரி 10-ந்தேதி வரை மாநிலம் தழுவிய வகையில் தீவிரமான பிரசாரமாக இது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 6.8 லட்சம் தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் உற்சாகப்படுத்தவும் அணி திரட்டவும் இந்த பிரசார வியூகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாக கலந்துரையாடல்கள், வாக்காளர் சரிபார்ப்பு என வாக்குச்சாவடிக்கு உட்பட்ட மக்களை கவரும் வகையில் தி.மு.க.வினரின் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னோடி தலைவர்கள் உள்பட அனைத்து தி.மு.க. நிர்வாகிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றி காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- 60 மோட்டார்சைக்கிள்கள், 3 கார்கள் நிறுத்துவதற்கு இட வசதியும் உள்ளது.
- கண்ணதாசன் நகரில் பஸ்களை ரோட்டோரம் வரிசையாக நிறுத்தி விடுவதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது.
சென்னை:
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பஸ் நிலையங்கள் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் இரவு நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழையவே பயந்தனர். குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் வேளையிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. பாதுகாப்பற்ற நிலையில் மாநகர பஸ் நிலையங்கள் இருந்ததால் அதனை சீர்ப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மிகவும் மோசமான நிலையில் இருந்த பஸ் நிலையங்கள் புதிதாக கட்டும் பணி பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு வட சென்னை பகுதியில் உள்ள பஸ் நிலையங்களை புதிதாக கட்டுவதற்கான நிதியினை ஒதுக்கினார். தற்போது கண்ணதாசன் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர் பஸ் நிலையங்கள் கட்டும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் ரூ.13.40 கோடி செலவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தரை மற்றும் முதல் தளத்துடன் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்தது. 5,900 சதுர அடி தரை தளமும், 5,300 சதுர அடி முதல் தளமும் கட்டப்பட்டு உள்ளது.
மொத்த கட்டிட பரப்பளவு 11,200 சதுர அடியாகும். 16 பஸ்கள் நிற்கக் கூடிய வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடை மேடைகளில் 100 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைகிறது.

60 மோட்டார்சைக்கிள்கள், 3 கார்கள் நிறுத்துவதற்கு இட வசதியும் உள்ளது. தரை மற்றும் முதல் தளத்தில் ஆண்-பெண் பொதுக்கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் வசதியும் செய்யப்படுகிறது.
பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கக் கூடிய வகையில் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. தரை தளத்தில் 4 கடைகளும் முதல் தளத்தில் 4 வணிகப் பகுதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் மட்டுமின்றி ஊழியர்கள் ஓய்வு எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து இரவு வரை பயணிகள் பயம் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்து விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் புதிய பஸ் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முல்லைநகர், கண்ணதாசன் நகர் பஸ் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் ரோட்டோரம் நிறுத்தப்படும் மாநகர பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் சென்று விடும்.
கண்ணதாசன் நகரில் பஸ்களை ரோட்டோரம் வரிசையாக நிறுத்தி விடுவதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
- கூட்டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக இ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
- எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசுகையில், "அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி துணைச் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று முன் மொழிகிறேன்" என்றார்.
இதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவதாக கூறினார். இதையடுத்து கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
* 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
* கூட்டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக இ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
* நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150-ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* வடகிழக்கு பருவமழையின்போது மக்களை காக்க தவறிவிட்டதாக தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம். முறையான தரவுகளுடன் மெட்ரோவிற்கு விண்ணப்பிக்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றம்.
* எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொடங்கியது.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பங்கேற்காததால் தற்காலிக அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கே சவால் விடுவதா? என தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
* மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றம்.
* நீதித்துறையின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது.
மும்மொழிக் கொள்கை என்பது 1968-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்விசார் கொள்கையாகும். இது இந்தி, ஆங்கிலம் மற்றும் நவீன இந்திய மொழி (முன்னுரிமை இந்தி பேசாத மாநில மொழி) ஆகிய மூன்று மொழிகளைக் கற்பதை வலியுறுத்துகிறது. இந்தக் கொள்கை, இந்திய மாநிலங்கள் தங்கள் மொழிக் கல்வி முறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது.
இந்திய மொழிகளுக்கு இடையிலான நல்லுறவை வளர்ப்பதும், மாணவர்களுக்கு பல மொழிகளைக் கற்பிப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதும் மும்மொழிக் கொள்கையின் நோக்கமாகும்.
இந்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.
இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்சனைகளும் (தமிழ்நாடு அரசுடன்) இருக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கின்றனவா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு, ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.
பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' என்ற இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்கிறது. மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தி அல்லது சமஸ்கிருதம் மறைமுகமாகத் திணிக்கப்படுமோ? என்ற சந்தேகம் தமிழக கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் நீண்ட காலமாகவே உள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் இது செயல்படுத்தப்படவில்லை, மாறாக இருமொழிக் கொள்கையே நடைமுறையில் உள்ளது.
பெரும் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மும்மொழிகளை கற்றுக் கொள்கிறார்கள். ஏழைக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இருமொழிக்கொள்கையே கற்கிறார்கள். போட்டித் தேர்வுகள் என்று வரும்போது தனியார் பள்ளிகளில் படிப்போர் முதலிடத்தை பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்தங்கியும் விடுகிறார்கள். ஓர் அரசே இதுபோன்ற சமுதாக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
- ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது.
- ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது.
சென்னை:
ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், 'வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை', நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உடல்களை கண்ணியத்துடன் முறைப்படி தகனம் செய்துள்ள ஈஷாவின் பணிகளை பெரிதும் பாராட்டினார்.
சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஈஷா நிர்வகிக்கும் மயானங்களில் பழமையான சடங்குகள் மற்றும் சக்திமிக்க இறுதிச் சடங்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை ஈஷா வணிக நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

இன்று துவங்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கான இலவச தகன சேவையானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை, வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. இதனுடன் கூடுதலாக 3 மயானங்களின் பராமரிப்புப் பொறுப்பையும் ஈஷா அறக்கட்டளை ஏற்க உள்ளது.
இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.
ஈஷா சார்பில் மயானங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இறந்தவர்களின் உடலை கண்ணியமாக கையாளவும், அந்த இறுக்கமான சூழலில் உரிய முறையில் நடந்து கொள்ளவும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும் மயான வளாகத்தில் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு செய்வதற்கான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனுடன் எரிவாயு மின் மயானங்களை பராமரிக்க மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, அதனை உறுதி செய்யும் பணிகளிலும் ஈஷா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சத்குருவின் நோக்கம், நாடு முழுவதும் 1000 முதல் 3000 மயானங்களை தத்தெடுத்து, அவற்றின் பாரம்பரியமான புனிதத்தையும், கண்ணியமான செயல்பாட்டு முறையையும் மீட்டெடுப்பதாகும்.
- மாவிலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.
- செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்தவித முக்கியத்துவமும் அளிக்காமல் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனாலும் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்துகொண்டே இருக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, டி.டி.வி. தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இது அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டு இருப்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் இன்று அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களிலும் வருங்கால முதல்வர் என்கிற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. மாவிலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.

காலை முதலே மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து கொண்டிருந்தன. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை வெளியே இருந்து பார்வையிடும் வகையில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது.
மண்டபத்தின் முகப்பு வாயில் தென்னை ஓலை, குருத்துக்களால் இரட்டை இலை சின்னத்துடன் அழகுற அமைக்கப்பட்டு இருந்தது. முகப்பில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கரும்பு தோரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
2026 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் என்பதை காட்டும் வகையில் மண்டபத்தின் நுழைவு வாயில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் அமைக் கப்பட்டு இருந்தது. மண்ட பத்தின் உள்ளே வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. குடிநீர் வசதி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டி ருந்தது. தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. செயற்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், பொதுக்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி பாதையும் அமைக்கப்பட்டு இருந்தன.
செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து உறுப்பினர்கள் கார்களில் வந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், திரண்டு நின்று அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தங்கம் நேற்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
- தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240-க்கும் விற்பனையாகிறது.
இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு எட்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 207 ரூபாய்க்கும் கிலோவுக்கு எட்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
06-12-2025- ஒரு கிராம் ரூ.199
05-12-2025- ஒரு கிராம் ரூ.196
- நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.






